Wednesday, November 24, 2010

கூட்டு வகைகள்

1.  காய்கறி தேங்காய்ப் பால் கூட்டு


தேவையானவை:

*நறுக்கின புடலங்காய் - அரை கப்
*நறுக்கின பூசணிக்காய் - அரை கப்
*நறுக்கின வெள்ளரிக்காய் - அரை கப்
*நறுக்கின பீர்க்கங்காய் - அரை கப்
*தேங்காய் - ஒன்று
*பெருங்காயம் - சிறிதளவு
*பச்சை மிளகாய் - 6
*கடுகு - அரை தேக்கரண்டி
*சீரகம் - அரை தேக்கரண்டி
*தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி
*கறிவேப்பிலை - ஒரு கொத்து

செய்முறை:

1.  காய்களை கழுவி, சிறுத் துண்டங்களாக நறுக்கி மேலே குறிப்பிடப்பட்டுள்ள அளவில் எடுத்துக் கொள்ளவும்.

2.  தேங்காயைத் துருவி எடுத்து, நீர்விட்டு அரைத்து கெட்டியான முதல் பால் எடுத்து தனியே வைக்கவும். மீண்டும் நீர்விட்டு அரைத்து பிழிந்து இரண்டு டம்ளர் அளவிற்கு இரண்டாம் பால் எடுத்துக் கொள்ளவும்.

3.  இரண்டாவது எடுத்த தேங்காய் பாலுடன் நறுக்கின காய்கள், கீறிய மிளகாய், பெருங்காயம், தேவையான உப்பு சேர்த்து வேக விடவும்.

4.  காய்கள் நன்கு வெந்த பிறகு முதல் தேங்காய் பாலினை ஊற்றி, ஒரு கொதி வந்ததும் இறக்கி விடவும்.

5.  வாணலியில் தேங்காயெண்ணெய் விட்டு கடுகு, சீரகம் போட்டுப் பொரிந்ததும், கறிவேப்பிலை போட்டு தாளித்து கூட்டில் கொட்டி நன்றாகக் கலக்கி விடவும்.

 [சமைக்கும் நேரம் : 30 நிமிடம்
 பரிமாறும் அளவு :  6 நபர்களுக்கு]


************************************


2.   கத்திரிக்காய் மிளகு கூட்டு

தேவையானவை



*கத்தரிக்காய் - கால் கிலோ
*பயத்தம் பருப்பு - 2 மேசைக்கரண்டி
*நெய் - ஒரு மேசைக்கரண்டி
*உப்பு - தேவையான அளவு
*கடுகு - ஒரு தேக்கரண்டி

*மிளகு பொடி - ஒரு தேக்கரண்டி
*உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி

செய்முறை:

1.  பயத்தம் பருப்பை வெறும் வாணலியில் புரட்டி மஞ்சள் தூள் போட்டு வேக விடவும்.
பருப்பு நன்றாக வெந்து குழைந்தவுடன் கத்திரிக்காய்களை சிறிது துண்டுகளாக நறுக்கி அதில் உப்பு சேர்த்து போட்டு வேகவிடவும்.

2.  காய் நன்றாக வெந்த பின், வாணலியில் நெய் விட்டு காய்ந்த பிறகு கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு சிவகக் விடவும்.

3.  பிறகு அதில் மிளகு பொடியை சேர்த்து, கறிவேப்பிலையையும் கிள்ளிப் போட்டு நன்கு கலந்து, வெந்து கொண்டிருக்கும் கூட்டில் கொட்டிக் கிளறி, இறக்கவும்.

 [சமைக்கும் நேரம் : 30 நிமிடம்
 பரிமாறும் அளவு :  6 நபர்களுக்கு]

***************************************************************

3.  பாகற்காய் கூட்டு

தேவையானவை:

 * பாகற்காய் - அரைக்கிலோ
 *கடலைப்பருப்பு - அரைக்கோப்பை.  பச்சைமிளகாய் - ஐந்து
 *வெங்காயம் - இரண்டு[விருப்பப்பட்டால்].
 *தக்காளி - நான்கு
 *தக்காளி பேஸ்ட் - ஒரு மேசைக்கரண்டி
 *இஞ்சி - ஒரு துண்டு
* பூண்டு - இரண்டு பற்கள் [விருப்பப்பட்டால்]
*தனியாத்தூள் - அரை தேக்கரண்டி
*மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி
*எண்ணெய் - கால்கோப்பை
*கடுகு - ஒரு தேக்கரண்டி
*சீரகம் - ஒரு தேக்கரண்டி
*கறிவேப்பிலை - இரண்டு கொத்து
*உப்புத்தூள் - இரண்டு தேக்கரண்டி

செய்முறை:

1.  கடலைப்பருப்பை ஊறவைத்து வேகவைக்கவும். நெத்தாக வேகவைத்து வடிகட்டி வைக்கவும்.
பாகற்காயை மெல்லிய துண்டுகளாக நறுக்கி ஒரு தேக்கரண்டி உப்புத்தூளை பிசறி அரை மணி நேரம் ஊறவைத்த பிறகு நன்கு கழுவி வடித்து வைக்கவும்.

2.  வெங்காயம், பச்சைமிளகாயை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.
தக்காளியை நொறுங்க நறுக்கி கொள்ளவும்.

3.  இஞ்சி பூண்டை நசுக்கி கொள்ளவும்.
சட்டியில் எண்ணெயை ஊற்றி காயவைத்து கடுகைப் பொரியவிடவும். தொடர்ந்து சீரகம் கறிவேப்பிலையை போட்டு வறுக்கவும்.

4.  பின்பு வெங்காயத்தை கொட்டி சிவக்க வறுத்து தனியே எடுத்துவிடவும். பின்பு பாகற்காயை கொட்டி சிவக்க வறுபட்டவுடன் அதையும் ஒரு தட்டில் கொட்டவும்.

5.  தொடர்ந்து அதே சட்டியில் இஞ்சி பூண்டைப் போட்டு நன்கு வதக்கவும். பிறகு மஞ்சள்தூள், தனியாத்தூளைப் போட்டு அதை தொடர்ந்து பச்சைமிளகாய், மற்றும் தக்காளியைப் போட்டு நன்கு வதக்கவும்.

6.  பிறகு அதில் வேகவைத்துள்ள கடலைப்பருப்பு, தக்காளி பேஸ்ட், வறுத்து வைத்துள்ள வெங்காயம், உப்புத்தூள், பருப்பு வெந்த தண்ணீர் ஒரு கோப்பை ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

7.  பருப்பு முழுவதும் வெந்தவுடன் வறுத்த பாகற்காயைக் கொட்டி நன்கு கலக்கி விட்டு மேலும் ஐந்து நிமிடம் வேகவைத்து இறக்கி விடவும்.

8.  இந்த கூட்டை தேங்காய் எண்ணெயில் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்


[சமைக்கும் நேரம் : 30நிமிடங்கள்
 பரிமாறும் அளவு : 5நபர்களுக்கு]

****************************************

4,  பீர்க்கங்காய் கூட்டு

தேவையானவை:

*பீர்க்கங்காய் -- 2
*பச்சை மிளகாய் -- 2 (நீளமாக அரிந்தது)
*சாம்பார் பொடி -- 11/2 டீஸ்பூன்
*கறிவேப்பிலை -- சிறிது
*கடுகு -- 1 டீஸ்பூன்
*உளுந்தம் பருப்பு -- 1 டீஸ்பூன்
*உப்பு -- ருசிக்கேற்ப
*சிவப்பு மிளகாய் -- 2 
*சீரகம் -- 1/4 டீஸ்பூன்

செய்முறை:

1.  முதலில் பீர்க்கங்காயை சுத்தம் செய்து அரிந்து வைத்துக் கொள்ளவும்.

2.  வாணாலியில் 2 ஸ்பூன் எண்ணைய் விட்டு கடுகு,உளுத்தம்பருப்பு தாளித்து கறிவேப்பிலை போட்டு ஒரு வதக்கு வதக்கி வெட்டி வைத்த பீர்க்கங்காயை போடவும்.

3.  இரண்டு நிமிடம் கழித்து மீண்டும் நன்கு வதக்கி உப்பு, சாம்பார்பொடியை போட்டு 1/2 கப் தண்ணீர் விட்டு நன்கு கொதிக்கவிடவும்.

4.  நிறம் மாறி குழந்தது போல் ஒரு தோற்றம் வரும் அப்போது இறக்கிவிடவும்.

5.  இறக்கிய பின் ருசிக்காக தாளிக்கும் கரண்டியில் சிறிது எண்ணைய் ஊற்றி சிவப்பு மிளகாய், சீரகம் தாளித்து கொட்டவும். 

6.  பீர்க்கங்காய் கூட்டு ரெடி.  சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.

[சமைக்கும் நேரம் : 25 நிமிடம்
 பரிமாறும் அளவு : 4 நபர்களுக்கு]

************************************

5.  புடலங்காய் கூட்டு

தேவையானவை:

*புடலங்காய் - ஒன்று
*தேங்காய் துருவல் - கால் கப்
*கடுகு - ஒரு தேக்கரண்டி
*உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
*மிளகாய் தூள் - அரை மேசைக்கரண்டி
*உப்பு - ஒரு தேக்கரண்டி
*வேக வைத்த பயத்தம் பருப்பு - அரை கப்

செய்முறை:

1.  புடலங்காயை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்

2.  ஒரு பாத்திரத்தில் புடலங்காயை போட்டு அதனுடன் மிளகாய் தூள், உப்பு சேர்த்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி 5 நிமிடம், வேகும் வரை கொதிக்க விடவும்.

3.  வேக வைத்த பருப்புடன் தேங்காய் துருவலை சேர்த்து கிளறி கொள்ளவும்

4.  பருப்பு கலவையை புடலங்காயுடன் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி வைத்து விடவும்.

5.  வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, போட்டு வெடித்ததும் உளுத்தம் பருப்பை போட்டு தாளிக்கவும்

6.  தாளித்தவற்றை கூட்டுடன் சேர்த்து கிளறி விடவும்

7.  சுவையான எளிதில் செய்யக்கூடிய புடலங்காய் கூட்டு ரெடி.

[சமைக்கும் நேரம் : 20 நிமிடம்
 பரிமாறும் அளவு :  4 நபர்களுக்கு]

****************************************************************************

6.  வாழைத்தண்டு கூட்டு

தேவையானவை:

 *வாழைத்தண்டு - 3 கப் (சுத்தம் செய்து பொடியாக நறுக்கியது)
*கடலைப் பருப்பு - 1 கப்
*மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
*உப்பு

தாளிக்க :

*கடுகு - 1/2 தேக்கரண்டி
*சீரகம் - 1/2 தேக்கரண்டி
*உளுந்து - 1/2 தேக்கரண்டி
*கடலைப் பருப்பு - 1/2 தேக்கரண்டி
*மிளகாய் வற்றல் - 4
*கறிவேப்பிலை - கொஞ்சம்
*எண்ணெய் - 2 தேக்கரண்டி

செய்முறை:

1.  வாழைத்தண்டு, கடலைப் பருப்பு இரண்டையும் சிறிது தண்ணீர் விட்டு குக்கரில் வேக வைத்து எடுக்கவும்.

2.  பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம், கடலைப்பருப்பு, உளுந்து, மிளகாய் வற்றல் சேர்த்து தாளித்து, கறிவேப்பிலை போட்டு எடுத்து கூட்டில் சேர்க்கவும்.

3.  இத்துடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கொதிக்கவிட்டு எடுக்கவும்.

குறிப்பு:
விரும்பினால் கடைசியாக சிறிது தேங்காய் துருவல் சேர்த்து ஒரு கொதி வந்ததும் எடுக்கலாம்.

[சமைக்கும் நேரம் : 30 நிமிடம்
 பரிமாறும் அளவு :  4 நபர்களுக்கு]

*******************************************

Tuesday, November 23, 2010

கறி / பொரியல் வகைகள்

1.  உருளை பசலை கறி

தேவையானவை:

*பசலைக்கீரை - 200 கிராம்
*உருளைக்கிழங்கு - கால் கிலோ
*இஞ்சி - சிறிய துண்டு
*பூண்டு - 6 பல்
*மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
*பச்சைமிளகாய் - 2
*கொத்தமல்லித்தழை - சிறிது
*நெய் - 2 மேசைக்கரண்டி
*உப்பு - 2 தேக்கரண்டி

செய்முறை:

1.  உருளைக்கிழங்கினைத் தோலுரித்து நான்காக நறுக்கிக் கொள்ளவும். கீரையை கழுவி நறுக்கிக் கொள்ளவும்.

2.  ஒரு வாணலியில் நெய் விட்டு காய்ந்ததும் உருளைக்கிழங்கு துண்டுகளைப் போட்டு வறுத்து எடுக்கவும்.

3.  இஞ்சி, பூண்டு மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் நெய் விட்டு அரைத்து வைத்துள்ள மசாலாவுடன் பச்சைமிளகாயை முழுதாகப் போட்டு வதக்கிக் கொள்ளவும்.

4.  பிறகு அதில் நறுக்கி வைத்துள்ள கீரைகளைப் போட்டு வதக்கவும்.
வதங்கியதும், உருளைக்கிழங்குத் துண்டுகள், உப்பு சேர்த்து, சிறிது தண்ணீரைத் தெளித்து, மூடி வைத்து வேகவிடவும்.

5.  தீயைக் குறைவாக வைத்துக் கொள்ளவும். நன்கு வெந்ததும் கொத்தமல்லித்தழை சிறிது தூவி இறக்கவும்.

  [சமைக்கும் நேரம் :  25 நிமிடம்
  பரிமாறும் அளவு :   4 நபர்களுக்கு]

************************************************

2.  ஸ்டஃப்டு வெண்டைக்காய் கறி

தேவையானவை:

*வெண்டைக்காய் - 250 கிராம்
*கடலைமாவு - நான்கு மேசைக்கரண்டி
*துருவிய தேங்காய் - கொஞ்சம்
*பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - கொஞ்சம்
*பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - இரண்டு
*பூண்டு - 2 பல்
*பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒன்று
*பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு துண்டு
*தனியாப்பொடி - ஒரு மேசைக்கரண்டி
*எண்ணெய் - 6 மேசைக்கரண்டி
*சீரகப்பொடி - ஒரு தேக்கரண்டி
*மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி
*மிளகாய்ப் பொடி - ஒரு தேக்கரண்டி
*உப்பு - தேவையான அளவு

செய்முறை:

1.  வெண்டைக்காய் காம்பை நறுக்கிய பிறகு காயைக் கீறி வைத்துக் கொள்ள வேண்டும். சற்று நீளமாக ஒரு பக்கமாக கீறவும்.

2.  பூண்டு, தேங்காய், கொத்தமல்லி, இஞ்சி, மிளகாய், இவற்றை அரைத்து கடலை மாவுடன் நன்றாகக் கலக்கவும்.

3.  உப்பு, மஞ்சள் பொடி, சீரகப்பொடி, மிளகாய்ப்பொடி, உப்பு முதலியவற்றையும் சேர்த்து கலந்து விடவும்.

4. வெண்டைக்காய்குள் இக்கலவையை பிளந்துவிடாத படி அடைக்கவும். விதைகள் உள்ளே முற்றியிருந்தால் எடுத்துவிடலாம்.

5.  எண்ணெய் விட்டு வெண்டைக்காயைப் போட்டு பொன்னிறமாக வதக்கி எடுக்கவும். கரகரப்பாக இருக்கும்படியும் எடுக்கலாம்.  

 [சமைக்கும் நேரம் :  25 நிமிடம்
 பரிமாறும் அளவு :   4 நபர்களுக்கு]

************************************************************

3.  வாழைக்காய் பொடிமாஸ்

வாழைக்காய் பொடிமாஸ்


தேவையானவை:

*வாழைக்காய் - 4
*உளுத்தம் பருப்பு - 25 கிராம்
*மிளகாய் - 8
*நெய் - 100 கிராம்
*பெருங்காயம் - சிறிதளவு
*துருவிய தேங்காய் - 150 கிராம்
*கடலைப் பருப்பு - 50 கிராம்
*வேகவைத்த துவரம் பருப்பு - சிறிதளவு
*உப்பு - தேவைகேற்ப

செய்முறை:

1.  வாழைக்காய்களை சுத்தமாகக் கழுவி துடைத்து விட்டு எண்ணெயைத் தடவி, நெருப்பில் காட்டி நன்றாக சுட்டு எடுத்து வைக்கவும்.

2.  வாணலியில் நெய்யை விட்டு மிளகாய், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு போட்டு வறுத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

3. பிறகு வாழைக்காயின் தோலை நீக்கி, ஒரு பாத்திரத்தில் பிசைந்து அதில் உப்பை சேர்க்கவும்.

4.  இப்பொழுது தாளித்து அரைத்த சாமான்களை வாழைக்காய் பொடியுடன் சேர்த்துக் கொள்ளவும்.

5.  இறுதியில் தேங்காய்த் துருவலையும், வேக வைத்த துவரம் பருப்பையும் வாழைக்காய் பொடியுடன் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.

 [சமைக்கும் நேரம் :  25 நிமிடம்
  பரிமாறும் அளவு :   4 நபர்களுக்கு]

***********************************************

4.  சேப்பங்கிழங்கு கறி-1

தேவையானவை:

*சேப்பங்கிழங்கு - 200 கிராம்
*புளி - எலுமிச்சை அளவு
*கடுகு - ஒரு தேக்கரண்டி
*உளுத்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி
*மிளகாய் - 4
*பெருங்காயம் - ஒரு பட்டாணி அளவு
*உப்பு - 2 மேசைக்கரண்டி

செய்முறை:

1.  சேப்பங்கிழங்கை தண்ணீர் விட்டு வேக வைக்கவும். நன்கு வெந்ததும் இறக்கித் தோலை உரித்துக் கொள்ளவும்.

2.  ஒரு பாத்திரத்தில் சிறிது நீர் எடுத்துக் கொண்டு அதில் புளியுடன் இரண்டு மேசைக்கரண்டி உப்புச் சேர்த்துப் போட்டு ஊறவைக்கவும்.

3.  வாணலியை அடுப்பில் வைத்து, ஒரு கரண்டி எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகாய், பெருங்காயம் போட்டு நன்கு சிவக்க வறுக்கவும்.

4.  பிறகு அதில் உரித்து வைத்துள்ள சேப்பங்கிழங்கினைப் போட்டு, புளியைக் கரைத்து விட்டு கொதிக்க விடவும்.

5. புளி நன்கு கொதித்து சுண்டி வரும் சமயம் சிறிது எண்ணெய் விட்டு நன்கு கிளறவும்.

6. காய் நன்கு வதங்கி வறுபடவும் வேண்டும். அப்போதுதான் சுவையாக இருக்கும்.

[சமைக்கும் நேரம் : 25 நிமிடம்
 பரிமாறும் அளவு :  4 நபர்களுக்கு]

******************************************

5.  சேப்பங்கிழங்கு ரோஸ்டு

தேவையானவை:

*சேப்பங்கிழங்கு - 4 பெரியது
*வெங்காயம் - ஒன்று [விருப்பமானால்]
*பூண்டு - 2 அல்லது 3 பல் [விருப்பமானால்]
*மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
*மிளகாய்தூள் - ஒரு தேக்கரண்டி
*தனியாத்தூள் - ஒரு தேக்கரண்டி
*உப்பு - தேவைக்கு

 தாளிக்க:
*கடுகு - கால் தேக்கரண்டி
*கடலைபருப்பு - அரை தேக்கரண்டி
*கறிவேப்பிலை - சிறிது
*எண்ணெய் - தேவையான அள

செய்முறை:

1.  சேப்பங்கிழங்கை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். வெங்காயத்தை நறுக்கி கொள்ளவும். பூண்டை தட்டி வைத்துக் கொள்ளவும்

2.  கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கடலைபருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். அதனுடன் தட்டி வைத்துள்ள பூண்டை சேர்த்து வதக்கவும்.

3.  பின் நறுக்கின வெங்காயம் சேர்த்து அதனுடன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்

4.  வெங்காயம் நன்கு வதங்கியதும், நறுக்கி வைத்துள்ள சேப்பங்கிழங்கை சேர்க்கவும்.

5.  தேவையான அளவு மிளகாய்தூள், தனியாதூள், சிறிது உப்பு சேர்த்து நன்கு கிளறவும். அதனுடன் 2 அல்லது 3 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து கிளறவும்

6.  கடாயை மூடி அடுப்பை சிறு தீயில் 5 முதல் 10 நிமிடங்கள் வைக்கவும். இடையிடையே கிளறி விடவும்

7.  காய் நன்கு சிவந்ததும் உப்பு, காரம் சரி பார்த்து, சுருள கிளறி இறக்கவும்

8.  சுவையான சேப்பங்கிழங்கு பொரியல் தயார். இது, சாம்பார் சாதம், கூட்டு, ரசம் சாதம், தயிர் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

[சமைக்கும் நேரம் : 30 நிமிடம்
 பரிமாறும் அளவு : 4 நபர்களுக்கு]

***************************************************************

6.  பாகற்காய் ஸ்டஃப் கறி

தேவையானவை:

*பாகற்காய் - 8
*வெங்காய விழுது - ஒரு கப்
*பொட்டுக்கடலை மாவு - கால் கப்
*தயிர் - ஒரு கப்
*எண்ணெய் - ஒன்றரை தேக்கரண்டி
*மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
*புளிக்கரைச்சல் - 2 மேசைக்கரண்டி
*இஞ்சி, பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
*மிளகாய்த்தூள் - அரை தேக்கரண்டி
*கரம்மசாலாத்தூள் - அரை தேக்கரண்டி
*மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி
*உப்பு - தேவைகேற்ப

செய்முறை:

1.  பாகற்காய் மேல் தோலினை சீவி விட்டு நீளவாக்கில் கீறி உள்ளே உள்ள விதைகளையும், சோற்றினையும் நீக்கி வைக்கவும்.

2.  பாகற்காய் மேல் மஞ்சள் தூள், உப்பு தடவி வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
வெங்காய விழுது, பொட்டுக்கடலை மாவு, உப்பு, புளிக்கரைச்சல் இவற்றை சேர்த்து பிசறி பாகற்காயின் உள்ளே வைத்து நிரப்பவும்.

3.  ஒரு பாத்திரத்தில் தயிரை ஊற்றி அதில் இஞ்சி, பூண்டு விழுது மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், மிளகுத்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து கலக்கி அதில் பாகற்காய்களைப் போட்டு சிறிது நேரம் ஊற வைக்கவும்.

4.  வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பாகற்காய்களை அதில் போட்டு மிதமான தீயில் வைத்து முழுமையாக வெந்ததும் பொரித்து எடுக்கவும்.


[சமைக்கும் நேரம் : 30 நிமிடங்க
பரிமாறும் அளவு : 8 நபர்களுக்கு]

*************************************************************

7.  உருளைக்கிழங்கு கறி



உருளைக்கிழங்கு கறி


தேவையானவை:

*பெரிய உருளைக்கிழங்கு - கால் கிலோ
*பெரிய வெங்காயம் - 2
*நாட்டுத் தக்காளி - 2
*மஞ்சள்பொடி - கால் தேக்கரண்டி
*மிளகாய்த்தூள் - அரைத் தேக்கரண்டி
*பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை
*உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
*கடலை பருப்பு - ஒரு தேக்கரண்டி
*முந்திரிப்பருப்பு - ஒரு தேக்கரண்டி
*எண்ணெய் - அரை மேசைக்கரண்டி
*கடுகு - அரைத் தேக்கரண்டி
*நெய் - ஒரு தேக்கரண்டி
*கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

1.  கால் கிலோ பெரிய உருளைக்கிழங்கினை அப்படியே முழுசாக குக்கரில் போட்டு வேகவிடவும். வெந்தபின் தோலை உரித்து பெரிய துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.

2.  தக்காளியை பொடியாக நறுக்கி அத்துடன் கால் தேக்கரண்டி மஞ்சள்தூள், அரைத் தேக்கரண்டி மிளகாய்ப்பொடி, முக்கால் தேக்கரண்டி உப்பு, ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள் இவைகளைப் போட்டு தயாராக வைத்துக் கொள்ளவும்.

3.  பெரிய வெங்காயத்தை நீளவாட்டில் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு அலுமினிய வாணலியை அடுப்பில் வைத்து அதில் அரைகரண்டி நல்லெண்ணெயை விட்டு காய விடவும்.

4.  காய்ந்தபின் அரை தேக்கரண்டி கடுகைப் போட்டு வெடிக்கவிடவும். பிறகு ஒரு தேக்கரண்டி உளுத்தம்பருப்பு, ஒரு தேக்கரண்டி கடலைப்பருப்பு, ஒரு மேசைக்கரண்டி முந்திரிப்பருப்பு ஆகியவற்றைப் போட்டு சிவக்க வறுக்கவும்.

5.  பிறகு அதிலேயே நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன் தக்காளி கலவையை அதனுடன் சேர்த்து வதக்க வேண்டும்.

6.  தக்காளி நன்கு வதங்கி தொக்கு மாதிரி ஆனபின்பு அதில் கறிவேப்பிலையை பிய்த்துப் போட்டு அதனுடன் நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கினையும் சேர்த்து நன்றாக கிளறவும்.

7.  காயில் உப்பு, காரம் ஒட்டிக்கொண்ட பின் சிறிது நேரம் கிளறி விட்டு இறக்கிவிடவும். இறக்கிய பிறகு அதில் ஒரு தேக்கரண்டி நெய் விட்டால் அது உருகி வாசனையாக இருக்கும்.

[சமைக்கும் நேரம் : 30 நிமிடங்கள்
 பரிமாறும் அளவு :   4 நபர்களுக்கு]

**************************************************************

8.காலிஃபிளவர் உருளைக்கிழங்கு கறி

காலிஃபிளவர் உருளைக்கிழங்கு கறி


தேவையானவை:

*உருளைக்கிழங்கு - 200 கிராம்
*காலிஃபிளவர் - 200 கிராம்
*வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
*பெரிய வெங்காயம் - ஒன்று
*மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
*மிளகாய்த்தூள் - அரை தேக்கரண்டி
*தக்காளி - 4
*பால் - 100 மில்லி
*கொத்தமல்லி - ஒரு சிறிய கட்டு
*உப்பு - தேவைகேற்ப
*எண்ணெய் - 4 மேசைக்கரண்டி

செய்முறை:

1.  காலிஃபிளவரை வெந்நீரில் போட்டு சிறிது நேரம் கழித்து எடுக்கவும்.
உருளைக்கிழங்கு, காலிஃபிளவர், தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

2.  பாதி அளவு தக்காளியை எடுத்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.

3.  வாணலியில் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் வெந்தயத்தை போட்டு மிதமான தீயில் வைத்து

4.  பின்னர் சிறிது நேரம் கழித்து வெங்காயத்தை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
அதனுடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் இவற்றை சேர்த்து 2 நிமிடம் வைக்கவும்.

5.  பின்னர் அரைத்து வைத்த தக்காளியை அதில் சேர்த்துக் கலக்கி உருளைக்கிழங்கு, காலிஃபிளவர், தக்காளி, பால், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.

6.  உருளைக்கிழங்கு நன்கு வெந்ததும் அதில் கொத்தமல்லியை மேலே தூவி இறக்கவும்.

 [சமைக்கும் நேரம் : 30 நிமிடங்கள்
 பரிமாறும் அளவு :   2 நபர்களுக்கு]

********************************************************************

9.  உருளைக்கிழங்கு பொடிமாஸ்

தேவையானவை:

*உருளைக்கிழங்கு - 250 கிராம்
*உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
*வெங்காயம் - 100 கிராம்
*பச்சைமிளகாய் - 3
*கடுகு - ஒரு தேக்கரண்டி
*கறிவேப்பிலை - சிறிது
*எண்ணெய் - அரை குழிக்கரண்டி
*உப்பு - தேவையான அளவு

செய்முறை:

1. உருளைக்கிழங்கை சிறிது தண்ணீர் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.

2.  பிறகு எடுத்து தோல் உரித்து, உதிர்த்து விட்டு அதனுடன் உப்புத் தூள் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

3.  வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பு, கடுகு தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

4.  வெங்காயம் வதங்கியவுடன் உதிர்த்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கைப் போட்டு கிளறி இறக்கவும்.


[சமைக்கும் நேரம் : 25 நிமிடம்
பரிமாறும் அளவு:  4 நபர்களுக்கு]        

*********************************************************************

10.  கீரை தயிர் கறி

தேவையானவை:

*கீரை - ஒரு கட்டு
*தயிர் - ஒரு கப்
*கிராம்பு - 3
*பூண்டு - 3
*மிளகாய்வற்றல் - 3
*கறிவேப்பிலை - 2 கொத்து
*வெந்தயம் - சிறிது
*வெங்காயம் - 2
*பச்சைமிளகாய் - 3
*இஞ்சி - சிறிது
*தக்காளி - 2
*மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
*எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
*கடுகு - 2 தேக்கரண்டி

செய்முறை:

1. ஏதேனும் ஒரு கீரை வகையை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். கீரையை கழுவி பொடி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

2.  பூண்டு, பச்சைமிளகாய், வெங்காயம், இஞ்சி, தக்காளி, அனைத்தையும் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

3.  வாணலியில் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு போட்டு தாளித்து அதில் பூண்டு, மிளகாய்வற்றல், கறிவேப்பிலை மற்றும் வெந்தயம் போட்டு மிதமான தீயில் வதக்கவும்.

4.  பிறகு வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி சேர்த்து சிவப்பு நிறம் வரும் வரை வதக்கி அதனுடன் தக்காளி, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.

5.  இறுதியில் கீரையை சேர்த்து நன்கு வதக்கி சிறிது நேரம் கழித்து இறக்கி அதனுடன் தயிர் சேர்த்து மறுபடியும் அடுப்பில் வைத்து ஐந்து நிமிடம் வதக்கவும். பின்னர் அதை எடுத்து பரிமாறவும்


 [சமைக்கும் நேரம் : 25 நிமிடங்கள்
 பரிமாறும் அளவு : 4 நபர்களுக்கு ]

******************************************************************

11.  பலாக்கொட்டைக்கறி

பலாக்கொட்டைக்கறி
தேவையானவை:

*தேங்காய்த் துருவல் - 2 கப்
*பலாக்கொட்டை - கால் கிலோ
*முருங்கைக்காய் - 2
*துவரம்பருப்பு - ஒரு கப்
*பச்சைமிளகாய் - 5
*மஞ்சள்பொடி - கால் தேக்கரண்டி
*மிளகாய்பொடி - ஒரு மேசைக்கரண்டி
*புளி - எலுமிச்சை அளவு
*கொத்தமல்லி விதை - ஒன்றரை மேசைக்கரண்டி
*கடுகு - ஒரு தேக்கரண்டி
*சின்ன வெங்காயம் - 4
*கறிவேப்பிலை - ஒரு கொத்து
*எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

செய்முறை:

1.  பலாக்கொட்டைகளை தோல் நீக்கிக் கொள்ளவும். தேவையெனில் சற்றுப் பெரியத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளலாம்.

2.  புளியை ஊற வைத்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.

3.  ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் தேங்காய்த் துருவல், மல்லி விதை, கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

4.  ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் எடுத்துக் கொண்டு பலாக்கொட்டைகளை அதில் போடவும்.
அதனுடன் துவரம்பருப்பு, பச்சைமிளகாய், மிளகாய்பொடி, மஞ்சள்பொடி, உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி பிறகு பாத்திரத்தை மூடி வேகவிடவும்.

5.  மூன்று நிமிடங்களுக்கு பிறகு முருங்கைக்காய் மற்றும் புளிச்சாறு ஆகியவற்றை கல்ந்து கொதிக்கவிடவும்.

6.  ஐந்து நிமிடங்கள் வெந்தவுடன் அரைத்து வைத்துள்ள மசாலாவினைச் சேர்த்துக் கிளறவும்.
முருங்கைக்காய் நன்றாக வேகும் வரை அடுப்பில் வைத்து அவ்வபோது கிளறிக் கொண்டே இருக்கவும்.

7.  வெந்ததும் இறக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு தாளித்து, பிறகு அதிலேயே நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

8. தாளித்ததை பலாக்கொட்டை மசாலாவில் கொட்டி கிளறிவிட்டுக் கொள்ளவும்.

9.  சூடாக பரிமாறவும்.



[சமைக்கும் நேரம் : 30 நிமிடங்கள்
 பரிமாறும் அளவு :   4 நபர்களுக்கு]

****************************************************************

12.  ஸ்ட்ஃப்டு கத்தரிக்காய் கறி


பிஞ்சு கத்தரிக்காய்

தேவையானவை:

*பிஞ்சு கத்தரிக்காய் - 1/2 கிலோ,
*காய்ந்த மிளகாய் - 10,
*உளுத்தம் பருப்பு - 1 கைப்பிடி,
*தனியா - 2 மேசைக்கரண்டி,
*பொட்டுக்கடலை - 2 மேசைக்கரண்டி,
*பெருங்காயம் - சிறிது,
*புளி - ஒரு நெல்லிக்காய் அளவு,
*உப்பு - தேவையான அளவு,
*எண்ணெய் - 1/4 கப்

செய்முறை:

1.  கத்தரிக்காயை நான்காக பிளந்து (காம்பு பக்கம் வெட்டக் கூடாது) தண்ணீரில் போட்டு வைக்கவும்.

2.  1 ஸ்பூன் எண்ணெயில் மிளகாய், உளுத்தம் பருப்பு, தனியா, பொட்டுக்கடலை, பெருங்காயம் சிவக்க வறுத்து, உப்பு சேர்த்து கரகரப்பாக பொடிக்கவும்.

3. கத்தரிக்காயை தண்ணீரை வடித்து விட்டு, பொடித்த பொடியை கத்தரிக்காய் உடையாமல் திணித்து வைக்கவும். [மீதி பொடியை தனியே வைக்கவும்.]

4.  வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் திணித்த கத்தரிக்காயை போட்டு நன்கு வதக்கவும்.
புளியை 1/4 டம்ளர் தண்ணீரில் கெட்டியாக கரைத்து அவ்வப்போது தெளித்து மூடி வைக்கவும்.
கத்தரிக்காய் நன்கு வெந்தவுடன் மீதி பொடியை தூவி நன்கு கிளறி இறக்கவும்


[சமைக்கும் நேரம் : 20 நிமிடங்கள்
பரிமாறும் அளவு : 4 நபர்களுக்கு]

*********************************************************
13.  அவியல்

தேவையானவை:

வாழைக்காய் - 1
வெள்ளை பூசணிக்காய் - 1 துண்டு
வெள்ளரிக்காய் - 1 துண்டு
கத்திரிக்காய் - 1
கொத்தவரங்காய் - 10
முருங்கைக்காய் - 1
சேனை - 1 துண்டு
புடலங்காய் - 10 செ.மீ துண்டு
மாங்காய் - 1/2 பாகம்
உப்பு - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து

அரைக்க:

தேங்காய் துருவல் - 1 கப்
சீரகம் - 1 தேக்கரண்டி
இஞ்சி - 1 சிறிய் துண்டு
பச்சைமிளகாய் - 5
மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி

செய்முறை:

1.  எல்லா காய்களையும் 2"நீளத்தில் விரலளவு தடிமனில் நறுக்கவும். சேனையை தனியே வேக வைத்து தண்ணீரை வடிகட்டவும்.

2.  வாணலியில் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை தாளித்து காய்களை சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்.
உப்பு, 1/2 கப் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து வேக விடவும். அரைக்க வேண்டியவற்றை கரகரப்பாக அரைக்கவும்.

3.  காய் வெந்தது தண்ணீர் பாதியாக வற்றியதும் வேகவைத்த சேனை அரைத்த கலவை போட்டு 3 நிமிடம் கிளறவும்.

4.  மீதமுள்ள தேங்காய் எண்ணெய் மேலே ஊற்றி ஒரு கிளறு கிளறி இறக்கவும்.

குறிப்பு:

மாங்காய் கிடைக்கவில்லையென்றால் காய் வெந்து தேங்காய் கலவை சேர்க்கும் போது தயிர் 2 மேசைக்கரண்டி தயிர் சேர்க்கவும். மாங்காயின் புளிப்பிற்கு ஏற்ப அளவை கூட்ட குறைக்க செய்யலாம். கல்யாண வீடுகளில் வைக்கும் இந்த அவியல் தனி சுவைதான்.

 [சமைக்கும் நேரம் : 45 நிமிடம்
 பரிமாறும் அளவு 4 நபர்களுக்கு]

**********************************************************

14.  பீன்ஸ் பருப்பு உசிலி

தேவையானப்பொருட்கள்:

*பீன்ஸ் - 2" அளவிற்கு நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது - ஒரு கிண்ணம்
*துவரம் பருப்பு - 1/2 கப்
*கடலைப் பருப்பு - 1/2 கப்
*காய்ந்த மிளகாய் - 2 முதல் 3 வரை
*மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
*சாம்பார் தூள் - 1 டீஸ்பூன்
*பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை
*தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன் (விருப்பமானால்)
*எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
*கடுகு - 1 டீஸ்பூன்
*கறிவேப்பிலை - சிறிது
*உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

1.  துவரம் பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.

2.  பின் அதை நன்றாகக் களைந்து, நீரை வடிகட்டி விட்டு, அத்துடன் மிளகாய், பெருங்காய்த்தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து கொரகொரப்பாக[(மசால் வடைக்கு அரைப்பது போல்] அரைத்து எடுக்கவும்.

3.  அரைத்த விழுதை இட்லி தட்டில் வைத்து ஆவியில் 7 முதல் 10 நிமிடங்கள் வரை வேக விட்டு எடுத்து ஆற விடவும். ஆறிய பின் நன்றாக உதிர்த்துக் கொள்ளவும்.

4.  நறுக்கி வைத்துள்ள பீன்ஸை ஒரு பாத்திரத்தில் போட்டு அத்துடன் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், சிறிது உப்பு போட்டு, சிறிது நீரைத் தெளித்து வேக விட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும்.

5.  ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலையைச் சேர்க்கவும். அத்துடன் உதிர்த்து வைத்துள்ள பருப்பைப் போட்டு சிறிது நேரம் கிளறி விடவும்.

6.  பின் அதில் வேக வைத்தக் காயைப் போட்டு ஓரிரு நிமிடங்கள் நன்றாகக் கிளறவும். கடைசியில் தேங்காய்த்துருவலைப் போட்டு மீண்டும் சில நிமிடங்கள் கிளறி இறக்கி வைக்கவும்.

7.  இந்த உசிலி மோர்குழம்புடன் சாப்பிடவும்.  மிகச் சுவையாக இருக்கும்.

குறிப்பு:

இதேபோல், வாழைப்பூ, கொத்தவரங்காய், கோஸ் வைத்தும்,  உசிலி செய்யலாம். மிக ருசியாக இருக்கும்.


[சமைக்கும் நேரம் : 45 நிமிடம்
பரிமாறும் அளவு : 4 நபர்களுக்கு]

***************************************************************

Saturday, November 20, 2010

ரசம் வகைகள்

இஞ்சி-ஜீரா ரசம்

இஞ்சி-ஜீரா ரசம்
தேவையானவை:

*துவரம் பருப்பு - கால் படி
*ரசப்பொடி - ஒரு தேக்கரண்டி
*புளி - 2 கொட்டைப்பாக்கு அளவு
*சிறிய தக்காளி - ஒன்று
*கடுகு - கால் தேக்கரண்டி
*பெருங்காயம் - ஒரு துண்டு
*இஞ்சி - ஒரு துண்டு
*ஜீரா - ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லி - வாசனைக்கு
*கறிவேப்பிலை - வாசனைக்கு
*உப்பு - ஒரு தேக்கரண்வு

செய்முறை:

1.  இந்தச் சாற்றினை மேலாக இறுத்து வைத்துக் கொண்டால் சுண்ணாம்பு அடியில் தங்கிவிடும்.

2.  தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

3.  பருப்பை அரை படி தண்ணீரில் குழைய வேக வைத்துக் கொள்ளவும்.

4.  வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளித்து வைக்கவும்.

5. புளியை தண்ணீரில் ஊறவைத்து, ஒரு பாத்திரத்தில் புளிக்கரைச்சலாக எடுத்துக் கொள்ளவும். புளிக்கரைச்சலுடன் உப்பு, பெருங்காயம், நறுக்கிய தக்காளி, ரசப்பொடி, ஜீரகப் பொடி போட்டு 8 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.

6.  பிறகு கொதித்தவுடன் வேகவைத்த பருப்பை போட்டு நுரைத்து வந்தவுடன் கறிவேப்பிலை, கொத்தமல்லி போட்டு தாளித்த கடுகையும் போட்டு இறக்கிவைத்து இஞ்சி சாற்றை சேர்க்கவும்.
விருப்பமானால் அரை தேக்கரண்டி சீரகமும் தாளித்து சேர்க்கலாம்

*******************************************

2.  அரச்சுவிட்ட ரசம்

தேவையானவை:

*பருப்பு தண்ணீர் (அ) அரிசி களைந்த நீர் - 3 கப்
*தக்காளி - ஒன்று
*புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
*சீரகம் - ஒரு தேக்கரண்டி
*மிளகு - ஒரு தேக்கரண்டி
*பூண்டு - 4 பல்
*மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
*கடுகு, பெருங்காயம், கருவேப்பிலை, காய்ந்த மிளகாய், எண்ணெய் - தாளிக்க
*கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
*உப்பு - தேவையான அளவு

செய்முறை:

1.  பருப்பு தண்ணீர் இல்லையென்றால் அரிசி களைந்து இரண்டாவதாக

2.  கழுவிய நீரில் புளியை ஊற வைக்கவும். சீரகம், பூண்டு மற்றும் மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

3.  தக்காளியை சுடு நீரில் போட்டு தோலுரித்து நசுக்கி வைத்து கொள்ளவும். எண்ணெயை காய வைத்து தாளிக்க கூறியுள்ளதை தாளிக்கவும்

4.  தக்காளி சேர்த்து வதக்கி, அரைத்து வைத்துள்ள பொடியையும் சேர்த்து ஒரு வதக்கு வதக்கவும்

5.  புளி கரைசலை சேர்த்து உப்பு மற்றும் மஞ்சள் தூளும் சேர்த்து கொதிக்க விடவும்

6. நுரைகட்டி வரும் போது அடுப்பை அணைத்து விடவும்
இறக்கி வைத்து மேலே கொத்தமல்லி தூவி பரிமாறவும்


******************************************

2.தேங்காய் பால் ரசம்

தேவையானவை:

*தேங்காய் துருவல் - ஒரு கப்
*சின்ன வெங்காயம் - 25
*புளி - சிறிய எலுமிச்சை அளவு
*வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
*மிளகாய் வற்றல் - 9
*எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
*கறிவேப்பிலை - ஒரு கொத்து
*கல் உப்பு - ஒரு தேக்கரண்டி
*தேங்காய் துருவல் - ஒரு கப்
*சின்ன வெங்காயம் - 25
*புளி - சிறிய எலுமிச்சை அளவு
*வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
*மிளகாய் வற்றல் - 9
*எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
*கறிவேப்பிலை - ஒரு கொத்து
*கல் உப்பு - ஒரு தேக்கரண்டி

செய்முறை:


1. ஒரு பாத்திரத்தில் புளியை போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் ஊற வைத்து கரைத்து ஒரு கப் அளவிற்கு புளிக்கரைசல் எடுத்துக் கொள்ளவும்

2.  வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிளகாய் வற்றலை போட்டு 30 நொடி வறுத்துக் கொள்ளவும்

3.  அதனுடன் வெந்தயம், சின்ன வெங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு 2 நிமிடம் வதக்கவும்.

4.  வெங்காயம் வதங்கியதும் கரைத்து வைத்திருக்கும் புளிக்கரைச்சல் ஊற்றி ஒரு கொதி வந்ததும், உப்பு போட்டு கலக்கி விடவும்

5.  பிறகு ஒரு தட்டை போட்டு மூடி வைத்து புளி வாசனை போகும் வரை 5 நிமிடம் கொதிக்க விடவும்.

6. புளித்தண்ணீர் கொதிக்கும் நேரத்தில் துருவிய தேங்காயை மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து பிழிந்து 1 1/2 கப் அளவு பால் எடுக்கவும். பிழிந்து எடுத்த பாலை சக்கையில்லாமல் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்

7.  5 நிமிடம் கொதித்த பிறகு திறந்து தயாராக எடுத்து வைத்திருக்கும் தேங்காய் பாலை ஊற்றி கொதி வரும் முன் இறக்கி விடவும். அதிகம் கொதிக்க விடக் கூடாது, பால் திரிந்து விடும்

8.  சுவையான தேங்காய் பால் ரசம் தயார்.

******************************


3.கண்டந்திப்பிலி ரசம்

தேவையானவை:

*கண்டந்திப்பிலி - ஒரு மேசைக்கரண்டி
*தக்காளி - ஒன்று
*கொத்தமல்லி - ஒரு கொத்து
*வேக வைத்த பருப்பு - கால் கப்
*புளி தண்ணீர் - அரை கப்
*உப்பு - ஒன்றரை தேக்கரண்டி
*மிளகு, சீரகப் பொடி - ஒரு தேக்கரண்டி
*மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
*நெய் - 2 தேக்கரண்டி
*எண்ணெய் - ஒரு தேக்கரண்டி

செய்முறை

1.  தக்காளியை கழுவி விட்டு நீளவாக்கில் நான்கு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கொத்தமல்லியை ஆய்ந்து கழுவி எடுத்துக் கொள்ளவும். கண்டந்திப்பிலியை பொடி செய்து எடுத்துக் கொள்ளவும்.

2.  ஒரு எண்ணெய் சட்டியில் கரைத்து வைத்திருக்கும் புளித் தண்ணீரை ஊற்றி, அதில் நறுக்கி வைத்துள்ள தக்காளித் துண்டங்களைப் போட்டு கரண்டியை வைத்து நன்கு மசித்து விடவும்.

3.  அதனுடன் மிளகு, சீரகத் தூள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் ஒன்றரை தேக்கரண்டி கண்டந்திப்பிலிப் பொடி போட்டு 15 நிமிடம் நன்கு கொதிக்க விடவும்

4.  ரசம் ஒரு கொதி வந்ததும் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் பருப்பை அதனுடன் சேர்த்து கலக்கி விட்டு 3 நிமிடம் கொதிக்க விடவும். பருப்பு சேர்ப்பதால் ரசம் நன்கு சுவையாக இருக்கும்

5.  ரசம் 3 நிமிடம் நன்கு கொதித்து நுரைத்து வரும் போது மேலே கொத்தமல்லி தழையை தூவி இறக்கவும்.

6.  பிறகு இரும்பு குழிக்கரண்டி அல்லது சிறிய வாணலியில் 2 தேக்கரண்டி நெய் அல்லது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடிக்க விடவும்

7.  கடுகு வெடித்ததும் மீதம் உள்ள கண்டந்திப்பிலி பொடியை போட்டு தாளித்து அதை ரசத்தில் ஊற்றி அதே கரண்டியை வைத்து ரசத்தை கலக்கி விடவும்.

8. இப்போது சுவையான கண்டந்திப்பிலி ரசம் தயார். உடல் அலுப்பினை போக்குவதற்கு இந்த கண்டந்திப்பிலி ரசம் கைகண்ட மருந்து.  உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தது இந்த கண்டந்திப்பிலி
ரசம்

****************************************

4.மைசூர் ரசம்

ரச வகைகளில் மைசூர் ரசத்திற்கு என்றும் சிறப்பு உண்டு. மற்ற ரசங்களைவிட தயாரிப்பதற்கு சற்று நேரம் பிடிக்கும். தேங்காய் சேர்க்கப்படுவது இந்த ரசத்தின் சிறப்பு அம்சம். அலாதியான சுவையுடையது.

தேவையானவை:

*துவரம் பருப்பு - 4 மேசைக்கரண்டி + ஒரு தேக்கரண்டி
*மிளகாய் வற்றல் - 2
*மல்லி - 4 தேக்கரண்டி
*மிளகு - 2 தேக்கரண்டி
*சீரகம் - ஒரு தேக்கரண்டி
*தக்காளி - 2
*தேங்காய் துருவல் - கால் கப்
*மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
*கறிவேப்பிலை - 2 கொத்து
*புளி - சிறிய எலுமிச்சை அளவு
*கடுகு - ஒரு தேக்கரண்டி
*உப்பு - அரை தேக்கரண்டி

செய்முறை:

1.  தக்காளியை நீளவாக்கில் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.தேங்காயைத் துருவி எடுத்துக் கொள்ளவும். தேவையான இதரப் பொருட்களையும் தயாராய் வைத்துக் கொள்ளவும்

2.  ரசப்பொடி தயாரிக்க, துவரம் பருப்பில் ஒரு தேக்கரண்டி எடுத்துக் கொள்ளவும். அத்துடன் மல்லி, மிளகு, சீரகம் ஆகியவற்றை எடுத்து வைக்கவும்.

3.  முதலில் ஒரு பாத்திரத்தில் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி கொதித்ததும், அதில் பருப்பைப் போட்டு நன்கு வேகவிடவும். பருப்பு வேக சற்று நேரம் எடுக்கும். அந்த நேரத்தில் மற்றொரு அடுப்பில் கீழ்கண்டவற்றை செய்துகொள்ளவும்

4.  வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடி தயாரிக்க வைத்துள்ள துவரம் பருப்பு, மிளகாய் வற்றல், மல்லி, மிளகு, சீரகம் போட்டு சிவக்க வறுக்கவும்

5.  வறுத்து எடுத்தவற்றை ஆறவைத்து, பின்னர் மிக்ஸியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

6.  வாணலியில் எண்ணெயில்லாமல் தேங்காய் துருவலை போட்டு வறுத்து எடுத்து, மிக்ஸியில் போட்டு பொடித்து எடுத்துக் கொள்ளவும்

7.  புளியை ஒன்றரை கப் தண்ணீரில் ஊறவைத்து கரைத்து எடுத்துக் கொள்ளவும். அத்துடன் மஞ்சள்தூள், உப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். ஒரு கொதி வந்தவுடன் இறக்கிவிடவும்.

8.  வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம் போட்டு தாளித்து தக்காளியை போட்டு 30 நொடி வதக்கவும்

9.  தக்காளி சற்று வதங்கிய பின்பு, புளிக்கலவையை ஊற்றி சுமார் 3 நிமிடம் கொதிக்க விடவும்

10. அதில் 2 மேசைக்கரண்டி பொடித்த ரசப் பொடியை போட்டு ஒரு நிமிடம் வேகவிடவும். பிறகு வேக வைத்த பருப்பை மசித்துக் கொட்டி, ஒரு கப் தண்ணீர் சேர்க்கவும். தேங்காய் பொடி 2 மேசைக்கரண்டி போட்டு கலக்கி விடவும்

11. ரசம் கொதித்து நுரைத்தவுடன் இறக்கி விடவும்.மேலே சிறிது தேங்காய்ப் பொடியினை தூவலாம். மைசூர் ரசம் தயார். தேங்காய், பருப்பு அதிகம் சேர்ப்பதுதான் மைசூர் ரசத்தின் சிறப்பு


*******************************************

5.தக்காளி மிளகு ரசம்



தேவையானவை:

*புளி - எலுமிச்சம் பழ அளவு
*தக்காளி - ஒரு கப் மசித்தது
*மிளகுத்தூள் - முக்கால் தேக்கரண்டி
*நெய் - 2 மேசைக்கரண்டி
*கடுகு - ஒரு தேக்கரண்டி
*கறிவேப்பிலை - ஒரு கை பிடி
*பூண்டு - 8 பல்(சிறியது)
*ரசப்பொடி - 2 தேக்கரண்டி
*மிளகாய்த்தூள் - அரை தேக்கரண்டி
*மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி
*தண்ணீர் - 6 கப்
*உப்பு - தேவையான அளவு

செய்முறை:

1.  புளியை போதுமான நீரில் ஊறவைத்து சாறெடுக்கவும். சாறு ஒரு கப் இருக்க வேண்டும்.

2.  இதில் தண்ணீர், தக்காளி, அரை தேக்கரண்டி மிளகுத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்க விடவும்.

3 நிமிடம் கொதித்த பிறகு, இன்னொரு பக்கம் வாணலியில் நெய் ஊற்றி சூடாக்கவும்.

4.  கடுகு சேர்த்து அது வெடித்ததும் பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து மிகக்குறைந்த தீயில் சிறிது வதக்கவும்.

5.  பிறகு தூள்களைச் சேர்த்து மீதமுள்ள கால் தேக்கரண்டி மிளகுத்தூள் சேர்த்து, ஒரு தடவை பிரட்டி ரசத்தில் கொட்டி, போதிய உப்பு சேர்த்து மேலும் 2 நிமிடம் கொதிக்க விடவும்.

6. தக்காளி மிளகு ரசம் தயார்.


********************************************


6.பைனாப்பிள் ரசம்

தேவையானவை:

*துவரம்பருப்பு - 100 கிராம்
*புளி - 10 கிராம்
*அன்னாசி - 4 துண்டுகள்
*உலர்ந்த மிளகாய் - 6
*தனியா - 5 கிராம்
*கொத்தமல்லி - சிறிது
*கறிவேப்பிலை - சிறிது
*கடுகு - அரைத்தேக்கரண்டி
*எண்ணெய் - 10 கிராம்
*உப்பு - தேவையான அளவு

செய்முறை:

1.  வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிளகாய் தனியா இரண்டையும் போட்டு சிவக்க வறுத்து எடுத்து அம்மியில் வைத்துப் பொடித்துக் கொள்ளுங்கள்.

2.  ஒரு பாத்திரத்தில் இருநூறு மில்லி தண்ணீர் விட்டு அடுப்பில் வையுங்கள். தண்ணீர் சூடானதும் பருப்பைப்போடுங்கள்.

3.  பருப்பு நன்றாக வெந்ததும் புளி, உப்புப் பொடி, மிளகாய்ப்பொடியையும் போட்டுக் கலந்து விடுங்கள்.

4.  எல்லாம் நன்றாக கொதித்ததும் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக்கிப் போடுங்கள்.

5.  மேலும் நன்றாகக் கொதித்ததும் மேலும் இருநூறு மில்லி தண்ணீர் விட்டுச் சிறிது நேரம் அடுப்பிலேயே வைத்திருந்து இறக்குங்கள்.

6. கடுகைத் தாளித்துக் கொட்டுங்கள். கொத்தமல்லி, கறிவேப்பிலையையும் போட்டு உபயோகியுங்கள்.

*********************************************

7.பூண்டு ரசம்

தேவையானவை:

*துவரம் பருப்பு - 2 மேசைக்கரண்டி
*புளி - நெல்லிக்காய் அளவு
*பூண்டு - 10 பல்
*தக்காளி - 3
*மிளகாய் - 2
*மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
*மிளகுத் தூள் - ஒன்றரை தேக்கரண்டி
*சீரகத்தூள் - 2 தேக்கரண்டி
*வெந்தயம் - கால் தேக்கரண்டி
*பெருங்காயம் - கால் தேக்கரண்டி
*கறிவேப்பிலை - சிறிது
*உப்பு - தேவையான அளவு

செய்முறை:

1.  புளியை ஒன்றரை டம்ளர் தண்ணீரில் கரைத்து, வடித்து எடுத்துக் கொள்ளவும்.

2.  துவரம் பருப்புடன் மஞ்சள் தூளினைச் சேர்த்து, போதுமான அளவு நீர் விட்டு, நன்கு குழைய வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

3. வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, கடுகு, வெந்தயம் போட்டு தாளிக்கவும். மிளகாயைக் கிள்ளிப் போடவும்.

4.  அத்துடன் பொடியாக நறுக்கின பூண்டினை சேர்த்து வதக்கவும். பூண்டினை நறுக்கியோ அல்லது நசுக்கியோப் போடலாம்.

5. பூண்டு சற்று வதங்கியவுடன் பொடியாய் நறுக்கின தக்காளியைச் சேர்த்து நன்கு வதக்கவும். வதங்கிய பிறகு புளிக்கரைசலை ஊற்றி வேக விடவும்.

6. கரைசலுடன் மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு, வேக வைத்து மசித்த பருப்பு அனைத்தையும் சேர்த்து கொதிக்க விடவும்.

7.  கறிவேப்பிலையைக் கிள்ளிப் போடவும். ரசம் கொதித்து நுரைக்க ஆரம்பித்தவுடன் இறக்கி விடவும்.

*****************************************
8.எலுமிச்சம் பழ ரசம்



எலுமிச்சம் பழ ரசம்
தேவையானவை:

*துவரம் பருப்பு - கால் ஆழாக்கு
*உப்பு - ஒரு தேக்கரண்டி
*ரசப்பொடி - ஒரு தேக்கரண்டி
*தக்காளி - ஒன்று
*சிறிய எலுமிச்சம் பழம் - ஒன்று
*கடுகு - கால் தேக்கரண்டி
*பெருங்காயம் - ஒரு துண்டு
*தனியா - கால் தேக்கரண்டி
*மிளகு - கால் தேக்கரண்டி
*சீரகம் - கால் தேக்கரண்டி

செய்முறை:

1. ஒரு பாத்திரத்தில் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி பருப்பை போட்டு வேக வைத்துக் கொள்ளவும்.

2. தண்ணீரில் தக்காளிப்பழத்தை பிசைந்து அதில் ரசப்பொடி, உப்பு, பெருங்காயம் போட்டு ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.

3.  அதனுடன் வேகவைத்த பருப்பையும் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து இறக்கிவிடவும்.

4.  வாணலியில் எண்ணெய் ஊற்றாமல் தனியா, மிளகு இவற்றை இரண்டு நிமிடங்கள் வறுத்து சீரகத்தோடு வைத்து மிக்ஸியில் அரைத்து எடுத்து ரசத்தில் தூவவும். சீரகத்தை வறுக்க வேண்டாம்.

5.  வாணலியில் எண்ணேய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை தாளித்து ரசத்தில் கொட்டவும்
.
******************************************

9.வேப்பம்பூ ரசம்

தேவையானவை:

*புளி -- எலுமிச்சம் பழம் அளவு [கரைத்த தண்ணீர்]
*மிளகு -- 1/2 டீஸ்பூன்
*சீரகம் -- 1/2 டீஸ்பூன்
*கரிவேப்பிலை -- 2 இனுக்கு
*பெருங்காயம் -- 1/2 டீஸ்பூன்
*எண்ணைய் -- 1 ஸ்பூன்
*கடுகு,உளுத்தம் பருப்பு -- 1 டீஸ்பூன்
*மிளகாய் வத்தல் -- 3 என்னம்
*வெந்தயப் பொடி -- 1/2 டீஸ்பூன்
*உப்பு -- ருசிக்கேற்ப
*தக்காளி -- 2 என்னம்[(நன்றாக பிசைந்து கரைத்தத])]கொத்தமல்லி தழை -- 1 *டேபிள்ஸ்பூன் [பொடியாக நறுக்கியது)
*வேப்பம்பூ -- 1 ஸ்பூன் [வெறும் வாணலியில் 1 நிமிடம் வறுத்தது]

செய்முறை:

1.  வாணலியில் எண்ணைய் ஊற்றி கடுகு,உளுத்தம் பருப்பு, வத்தல்,   கறிவேப்பிலை தாளித்து அதில் வெந்தய்ப் பொடி, பெருங்காயம் போட்டு புளித்தண்ணீரை ஊற்றவும்.

2.  அதனுடன், உப்பு, கரைத்த தக்காளி இவற்றை போட்டு நுரை ததும்பி வறும் போது அடுப்பை நிறுத்தவும்.

3.  நிறுத்தும் முன் கொத்தமல்லி, வேப்பம் பூவை சேர்த்து இறக்கவும்.
சுவையான வேப்பம்பூ ரசம் ரெடி.

4.  சித்திரை மாதம் வருடப்பிறப்பு அன்று முக்கியமாக செய்யும் ரசம் இது

************************************

Friday, April 23, 2010

சாம்பார் வகைகள்/குழம்பு வகைகள்

தமிழகத்தின் சாம்பார் தனிருசிதான். தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் இது ஒவ்வொரு விதமாக தயாரிக்கப்படுகின்றது. அடிப்படை மூலப் பொருட்கள் பருப்பு, புளிக்கரைசல், காய்கறிகள் என்றாலும், தயாரிக்கப்படும் விதம் ஊருக்கு ஊர் வேறுபடுகின்றது.
சிற்றுண்டி வகைகளுக்காக, பெரும்பாலும் இட்லிக்காக தயாரிக்கப்படும் இட்லி சாம்பாரின் ருசி அலாதியானது. துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, பயற்றம்பருப்பு என அனைத்து வகை பருப்புகளைப் பயன்படுத்தியும் சாம்பார் தயாரிக்கப்படுகின்றது. அரைத்துவிட்ட வெங்காய சாம்பார் மிகவும் சிறப்பானது.


 பாசிப்பயறு சாம்பார்[Moong Dal Sambar]

தேவையான பொருட்கள்:

*பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
*சாம்பார் வெங்காயம் - 1/2 கப்
*பச்சைமிளகாய் - 3
*தக்காளி - 2
*கெட்டியான புளிக்கரைச்சல் - 2 டேபிள் ஸ்பூன்
*மஞ்சள் பொடி - 1/4 டீஸ்பூன்
*சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்
*உப்பு - தேவைக்கேற்ப


செய்முறை:

1. பருப்பை குக்கரில் போட்டு ஒரு விசில் சத்தம் வரைக்கும் வேக வக்கவும்.
2. தக்காளியைப் பொடியாக நறுக்கவும். சிறுய வெங்காயத்தை உரிக்கவும். பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும்.
3. பச்சைமிளகாய், வெங்காயம், தக்காளி இவற்றை எண்ணெயில் வதக்கவும்.
4. வேகவைத்த பருப்பு, உப்பு, சாம்பார் பொடி, புளிக்கரைச்சல் சேர்க்கவும். போதுமான தண்ணீர் விடவும்.
5. கெட்டியாக கொதிக்க வைக்கவும். சிறிது எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு , கடலைப்பருப்பு இவற்றை தாளிக்கவும்.
6. சாம்பாரில் ஊற்றி கறிவேப்பிலை போட்டு அலங்கரிக்கவும்.

 
 தக்காளி சாம்பார்[Tomato Sambar]

தேவையான பொருட்கள்:

*வேகவைத்த துவரம்பருப்பு - 1/2கப்
*மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூன்
*உப்பு - தேவைக்கேற்ப
*கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - 2 டேபிள் ஸ்பூன்
*தக்காளி - 2 அரிந்து கொள்ளவும்

எண்ணெயில் வதக்கி:அரைக்கவும்:

*சீரகம் - 1 டீஸ்பூன்
*பச்சைமிளகாய் - 7
*பொடியாக நறுக்கிய தக்காளி - 1/4 கப்
*தேங்காய் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
[அரைக்கும் போது தேங்காய் சேர்க்கவும்]

செய்முறை:

1. பருப்பை நன்றாகக் கடைந்து கொள்ளவும்.
2. தேவையான தண்ணீர் விட்டு, மற்ற பொருட்களையும் அரைத்த விழுதையும் சேர்த்து சேர்க்கவும்.
3. பச்சை வாசனை போகும்வரை கொதிக்க விடவும்.
4. கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்த்து அலங்கடிக்கவும்.

**************************************

  கத்திரிக்காய் அரைத்துவிட்ட சாமபார்


கத்திரிக்காய் அரைத்துவிட்ட சாமபார்


தேவையானப்பொருட்கள்:

*துவரம் பருப்பு - 1/2 கப்
*கத்திரிக்காய் -  சிறிதளவு
*சாம்பார் வெங்காயம் - 5 முதல் 6 வரை[விருப்பப்பட்டால்]
*தக்காளி - 1
*புளி - ஒரு சிறு எலுமிச்சம்பழ அளவு
*சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
*மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
*உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

வறுத்தரைக்க:

*காய்ந்த மிளகாய் - 6 முதல் 8 வரை
*தனியா - 1 டேபிள்ஸ்பூன்
*கடலைப்பருப்பு - 1/2 டீஸ்பூன்
*மிளகு - 1/4 டீஸ்பூன்
*சீரகம் - 1/4 டீஸ்பூன்
*வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
*தேங்காய்த்துருவல் - 1 டேபிள்ஸ்பூன்
*எண்ணை - 2 டீஸ்பூன்

தாளிக்க:

*எண்ணை - 2 டீஸ்பூன்
*கடுகு - 1/2 டீஸ்பூன்
*பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
*கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

1. துவரம் பருப்புடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து, குக்கரில் குழைய வேக வைத்துக் கொள்ளவும்.

2. கத்திரிக்காய் அல்லது விருப்பமான காயை 2 அங்குல நீளத்திற்கு வெட்டிக் கொள்ளவும். சாம்பார் வெங்காயத்தை தோலுரித்து விட்டு நீள வாக்கில் இரண்டாக வெட்டிக் கொள்ளவும். தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

3. புளியை ஊற வைத்து, கரைத்துப் பிழிந்துக் கொள்ளவும். புளித்தண்ணீர் 2 கப் அளவிற்கு இருக்க வேண்டும்.

4. ஒரு வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணை விட்டு, அதில் வறுக்கக் கொடுத்துள்ளப் பொருட்களைப் போட்டு சற்று சிவக்க வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்தெடுக்கவும். அரைத்தப்பின் மிக்ஸியைக் கழுவி அந்த நீரையும், அரைத்த விழுதில் சேர்த்துக் கொள்ளவும்.

5. வாணலி அல்லது அடிகனமான ஒரு பாத்திரத்தை அடுப்பிலேற்றி அதில் 1 டீஸ்பூன் எண்ணை விட்டு சாம்பார் வெங்காயத்தை வதக்கிக் கொள்ளவும். பின்னர் அதில் தக்காளித்துண்டுகளைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.

6. தக்காளி நன்றாக வதங்கியவுடன் அத்துடன் கத்திரிக்காய் அல்லது நறுக்கி வைத்துள்ள வேறு காயைப் போட்டு அத்துடன் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றையும் போட்டு காய் மூழ்கும் அளவிற்கு தண்ணீரைச் சேர்த்து, காய் வேகும் வரை கொதிக்க விடவும்.

7. காய் வெந்ததும் புளித்தண்ணீரைச் சேர்த்து மீண்டும் கொதிக்க விடவும். குழம்பு கொதிக்க ஆரம்பித்ததும் அதில் அரைத்து வைத்துள்ள விழுது, வேக வைத்துள்ள பருப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கலந்து மீண்டும் ஓரிரு நிமிடங்கள் கொதிக்க விடவும்.

8. பின்னர் அதில் கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலைத் தாளித்துக் கொட்டவும்.

9.  சுவைமிக்க அரைத்துவிட்ட சாம்பார் தயார்.

**************************************
  இரு புளிக்குழம்பு

இரண்டு வகை புளிப்பு [புளி, மற்றும் தயிர்] சேர்த்து செய்யப்படுவதால், இதை இரு புளிக்குழம்பு என்று அழைப்பார்கள். வத்தக்குழம்பு, மோர்குழம்பு இரண்டும் கலந்த சுவையில் இருக்கும்.

தேவையானப்பொருட்கள்:

*புளி - சிறு எலுமிச்சம் பழ அளவு
*தயிர் - 1 கப்
*சாம்பார் பொடி - 1 டேபிள்ஸ்பூன்
*மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
*உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
*வெண்டைக்காய் - 4 அல்லது 5

வறுத்தரைக்க:

*காய்ந்த மிளகாய் - 5 முதல் 6 வரை
*உளுத்தம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
*வெந்தயம் - 1 டீஸ்பூன்
*தேங்காய்த்துருவல் - 1/2 அல்லது 3/4 கப்

தாளிக்க:

*எண்ணை - 1 டீஸ்பூன்
*கடுகு - 1/2 டீஸ்பூன்
*வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
*பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
*கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

1.  புளியை ஊற வைத்து, கரைத்து, 2 கப் அளவிற்கு புளித்தண்ணீரை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

2.  ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு, அதில் உளுத்தம் பருப்பு, மிளகாய், வெந்தயம் ஆகியவற்றை சிவக்க வறுத்து, அத்துடன் தேங்காய்த்துருவலையும் சேர்த்து சற்று வதக்கி, ஆற விட்டு, பின்னர் சிறிது நீரைச் சேர்த்து விழுதாக அரைத்தெடுக்கவும்.

3.  வெண்டைக்காயை இரண்டு அங்குல நீளத்திற்கு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். ஒரு டீஸ்பூன் எண்ணையை வாணலியில் விட்டு, அதில் வெண்டைக்காயைப் போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளவும்.

4.  ஒரு பாத்திரத்தில் புளித்தண்ணீரை ஊற்றி, அத்துடன் வதக்கிய வெண்டைக்காய், உப்பு, சாம்பார் பொடி, மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்து கொதிக்க விடவும். குழம்பு நன்றாகக் கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பை தணித்துக் கொண்டு, அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை, ஒன்று அல்லது ஒன்றரைக் கப் நீரில் கரைத்து குழம்பில் ஊற்றிக் கிளறி விடவும். குழம்பு மீண்டும் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் தயிரைக் கட்டியில்லாமல் நன்றாகக் கடைந்து ஊற்றவும். [கெட்டியான மோர் இருந்தாலும் சேர்க்கலாம்]. அடுப்பை மிதமான தீயில் வைத்து, குழம்பு மீண்டும் ஒரு முறை கொதிக்க ஆரம்பித்ததும், இறக்கி வைத்து, தாளித்துக் கொட்டவும்.

5.  கவனிக்க: இந்தக் குழம்பிற்கு எந்த எண்ணையையும் உபயோகிக்கலாம். ஆனால் தேங்காய் எண்ணையை உபயோகப்படுத்தினால், சுவை வித்தியாசமாக இருக்கும்.

குறிப்பு:

இந்தக் குழம்பில் விருப்பமான எந்தக்காயையும் சேர்க்கலாம். ஆனால், கத்திரிக்காய், வெண்டைக்காய், வெள்ளைப்பூசணிக்காய், சௌசௌ, வாழைத்தண்டு ஆகியவை பொருத்தமாயிருக்கும். வெண்டைக்காயை சேர்ப்பதானால், மேற்கூறியபடி, ஒரு டீஸ்பூன் எண்ணையில் வதக்கி சேர்க்கவும். கத்திரிக்காயென்றால், துண்டுகளாக்கி அப்படியே புளித்தண்ணீரில் சேர்க்கலாம். மற்ற காய்கள் என்றால், ஆவியில் வேக விட்டு பின்னர் சேர்க்கவும்.


*****************************************
  கீரை சாம்பார்

தேவையானப்பொருட்கள்:




*கீரை [எந்த வகை கீரையானாலும்] பொடியாக நறுக்கியது - 1 கப்
*துவரம் பருப்பு - 1/2 கப்
*புளி - எலுமிச்சம் பழ அளவு
*சாம்பார் பொடி - 1 டேபிள்ஸ்பூன்
*மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
*உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு


தாளிப்பதற்கு:


*எண்ணை - 2 டீஸ்பூன்
*கடுகு - 1/2 டீஸ்பூன்
*வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
*பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
*சாம்பார் வெங்காயம் - 4 அல்லது 5 (நீளவாக்கில் வெட்டியது)
*தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)


செய்முறை:


1.  துவரம் பருப்பை நன்றாகக் கழுவி, அத்துடன் 2 கப் தண்ணீரும், மஞ்சள் தூளும் சேர்த்து குக்கரில் குழைய வேகவிட்டு எடுக்கவும்.


2.  புளியை தண்ணீரில் ஊற வைத்து, சாற்றை பிழிந்து எடுக்கவும். புளித்தண்ணீர் 2 கப் அளவிற்கு இருக்க வேண்டும்.


3.  ஒரு வாணலியில் எண்ணை விட்டு, காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், வெந்தயம், பெருங்காயம் போட்டு சற்று வறுத்து, அதில் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். பின் அதில் தக்காளியைப் போட்டு நன்றாக வதக்கவும். தக்காளி வதங்கியவுடன், வேக வைத்த பருப்பையும், உப்பையும் சேர்த்து கொதிக்க விடவும். ஒரு கொதி வந்ததும், புளித்தண்ணீரில் சாம்பார் பொடி, மஞ்சள் தூள் சேர்த்துக் கலக்கி ஊற்றவும். மேலும் சில வினாடிகள் கொதித்தப்பின், அதில் கீரையைப் போட்டுக்கிளறிவிட்டு, மிதமான தீயில் மூடி வைத்து மீண்டும் ஓரிரு நிமிடங்கள் கொதித்த பின் இறக்கி வைக்கவும். 
4.  சுவைமிக்க கீரை சாம்பார் தயார்.

*******************************************
  பருப்பு உருண்டைக் குழம்பு
 
இந்த குழம்பு ஒரு "தஞ்சாவூர் ஸ்பெஷல்" item!!. எங்கள் வீட்டில் அனைவரும் இதனை மிக்க விரும்பி சாப்பிடக்கூடிய ஒர் "dish" இது.

தேவையானப் பொருட்கள்:

*துவரம் பருப்பு - 1/2 கப்
*பச்சை அரிசி - 1 டீஸ்பூன்
*புளி - சிறிய எலுமிச்சம்பழ அளவு
*சாம்பார் வெங்காயம் - 3
*பெரிய வெங்காயம் - பாதி
*தேங்காய் துருவல் - 1/4 கப்
*சாம்பார் பொடி - 1 டேபிள்ஸ்பூன் (நிறைய)
*மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூன்
*நல்லெண்ணை - 2 டீஸ்பூன்
*கடுகு - 1/2 டீஸ்பூன்
*கறிவெப்பிலை - ஒரு கொத்து
*உப்பு - 2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

1.  துவரம் பருப்பு, அரிசி இரண்டையும் 2 மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் தண்ணீரை நன்றாக வடித்து விட்டு மிக்ஸியில் போட்டு சற்று கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும். அத்துடன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய்த்துருவல், ஒரு டீஸ்பூன் சாம்பார் பொடி, சிறிது மஞ்சள்தூள், உப்பு, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்துமல்லி சேர்த்து பிசைந்து, சிறு எலுமிச்சம்பழ அளவு உருண்டைகளாக உருட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.

2.  உப்பு, புளி இரண்டையும் ஊறவைத்து, தண்ணீர் சேர்த்து கரைத்து மூன்று கப் அளவிற்கு எடுத்துக் கொள்ளவும்.

3.  அதில் சாம்பார் பொடி, மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்க விடவும். கொதித்தவுடன், அடுப்பை சிறு தீயில் வைத்துக் கொண்டு, இரண்டு அல்லது மூன்று பருப்பு உருண்டைகளை குழம்பில் போடவும். குழம்பு மீண்டும் கொதிக்கும் பொழுது மேலும் இரண்டு உருண்டைகளை போடவும். இப்படியே எல்லா உருண்டைகளையும் போட்டு முடித்தவுடன், ஒரு கரண்டியால், உருண்டைகளை லேசாக திருப்பி விடவும். குழம்பு மீண்டும் கொதித்ததும், தேங்காயை அரைத்து குழம்பில் விட்டு கொதிக்க விடவும்.

4.  கடுகு தாளித்து, அத்துடன் பொடியாக நறுக்கிய சாம்பார் வெங்காயம், கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கி குழம்பில் கொட்டவும்.
5. சுவையான  பருப்பு உருண்டைக் குழம்பு தயார்.

*******************************************

  வாழைக்காய் பால் குழம்பு

உடம்புக்கு நல்லது, மற்றும் மாதம் ஒரு முறை இந்த ருசியான குழம்பை சமைத்து சாப்பிடலாம்.

தேவையானப்பொருட்கள்:

*வாழைக்காய் - 1
*தேங்காய் - 1
*சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
*மஞ்சள் பொடி - ஒரு சிட்டிகை
*உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

தாளிக்க:

*எண்ணை - 1 டீஸ்பூன்
*கடுகு - 1/2 டீஸ்பூன்
*சாம்பார் வெங்காயம் - 2 அல்லது 3 (பொடியாக நறுக்கியது)
*கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

1.  தேங்காயைத்துருவி கெட்டியான பாலை எடுக்கவும். பின்னர் சிறிது தண்ணீரை தேங்காயுடன் சேர்த்து அரைத்து, இரண்டாம் பாலையும் பிழிந்து எடுக்கவும்.

2.  கடையில் கிடைக்கும் தேங்காய்ப்பாலை உபயோகித்தால், மேற்கண்ட வேலை மிச்சம்.

3.  வாழைக்காயின் தோலை சீவி விட்டு, நீளவாக்கில் நான்காக வெட்டவும். பின்னர் அதை 3 அங்குலத் துண்டுகளாக வெட்டவும்.

4.  வெட்டிய துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு அத்துடன் இரண்டாம் பாலைச் சேர்க்கவும். காய்கள் மூழ்கும் அளவிற்கு பால் இருக்க வேண்டும். தேவை பட்டால் சிறிது தண்ணீரையும் சேர்த்துக் கொள்ளலாம்.

5.  ரெடிமேட் தேங்காய் பால் உபயோகித்தால், 2 அல்லது 3 டேபிள்ஸ்பூன் திக்கான பாலுடன் சிறிது தண்ணீரைச் சேர்த்து உபயோகிக்கவும்.

6.  காய் மூழ்கும் அளவிற்கு பாலும் தண்ணீரும் சேர்த்து, அத்துடன் உப்பு, சாம்பார் பொடி, மஞ்சள் பொடி சேர்த்து கொதிக்க விடவும். காய் நன்றாக வெந்ததும், அடுப்பை சிறு தீயில் வைத்து, திக்கான பாலை ஊற்றவும். மீண்டும் குழம்பு ஒரு கொதி வந்ததும், இறக்கி வைத்து, கடுகு, வெங்காயம், கறிவேப்பிலைத் தாளித்துக் கொட்டவும்.

7.  தாளிப்பதற்கு தேங்காய் எண்ணை உபயோகித்தால் சுவை கூடுதலாக இருக்கும்.

8.  சூடான சாதம் மற்றும் தொட்டுக் கொள்ள, பொரித்த அப்பளம், வடவம் ஆகியவற்றுடன் பரிமாறலாம்.

**********************************************

 புளிச்சாறு

புளிச்சாறு அனைவரும் சுவைத்து, விரும்பி சாப்பிடக்கூடிய item  ஒன்றாகும்.

தேவையானப்பொருட்கள்:


*புளி - எலுமிச்சம் பழ அளவு
*பெரிய வெங்காயம் - 1
*காய்ந்த மிளகாய் - 3 அல்லது 4
*வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
*கறிவேப்பிலை - சிறிது
*எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
*கடுகு - 1/2 டீஸ்பூன்
*உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

1.  புளியைத் தண்ணீரில் ஊற வைத்து, கரைத்து சாற்றைப் பிழிந்தெடுக்கவும். தேவையான நீரைச் சேர்த்து, 3 கப் புளித்தண்ணீரை எடுத்து வைத்துக்கொள்ளவும்.

2.  வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும்.

3.  ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், தீயைத் தணித்துக் கொண்டு வெந்தயத்தைச் சேர்த்து சற்று சிவக்க வறுக்கவும். காய்நத மிளகாயை ஒன்றிரண்டாகக் கிள்ளிப் போடவும். அத்துடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தையும், கறிவேப்பிலையையும் சேர்த்து வதக்கவும். வெங்காயம் சற்று மினுமினுப்பாக வதங்கியதும் புளித்தண்ணீரை விடவும். அத்துடன் உப்பு சேர்த்து கொதிக்க விடவும். நன்றாகக் கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பை தணித்து மிதமான தீயில் மேலும் 2 அல்லது 3 நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கி வைக்கவும்.

4.  சூடான சாதத்துடன் சேர்த்து பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும். தொட்டுக்கொள்ள அப்பளம் பொருத்தமாயிருக்கும். பார்ப்பதற்கு ரசம் போலும், சுவையில் புளிக்காய்ச்சல் போலவும் இருக்கும்.

5.  காய்கறிகள் கையிருப்பில் இல்லாத பொழுது, அவசரத்திற்கு இந்தச் சாறு கை கொடுக்கும்.

6.  சுவைமிக்க புளி சாறு தயார்.

*********************************************

  பொரிச்ச குழம்பு

தேவையானப்பொருட்கள்:

*காய்கறி நறுக்கியது - 2 கப் [வெள்ளைக்கத்திரிக்காய், பெங்களூர் கத்திரிக்காய், அவரைக்காய், குடமிளகாய் அல்லது விருப்பமான எந்தக் காயையும் சேர்க்கலாம்]
*பயத்தம் பருப்பு - 1/2 கப்
*சாம்பார் பொடி - 1 டீஸ்பூன் (குவித்து அளக்கவும்)
*மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
*உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

அரைத்தெடுக்க:

*தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
*சீரகம் - 1/2 டீஸ்பூன்
*பச்சை மிளகாய் - 1
அரிசி மாவு - 1 டீஸ்பூன்

தாளிக்க:

*எண்ணை - 1 டீஸ்பூன்
*கடுகு - 1/2 டீஸ்பூன்
*சாம்பார் வெங்காயம் - 2 [பொடியாக நறுக்கிக் கொள்ளவும்]
*கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

1.  பயத்தம் பருப்பை சிறிது மஞ்சள் தூள் சேர்த்து மலர வேக வைத்துக் கொள்ளவும். குழைய விடவேண்டாம்.

2.  காய்கறித்துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு அத்துடன் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு போட்டு, காய் மூழ்கும் அளவிற்கு த்ண்ணீரை சேர்த்து வேக விடவும். காய் வெந்தவுடன் வேக வைத்துள்ள பருப்பைச் சேர்த்து கொதிக்க விடவும்.

3.  தேங்காய், பச்சை மிளகாய், சீரகம், அரிசி மாவு ஆகியவற்றை அரைத்தெடுத்து, அத்துடன் அரைத்த மிக்ஸியைக் கழுவி அந்த நீரையும் சேர்த்து, கொதிக்கும் குழம்பில் விட்டுக் கிளறவும். மீண்டும் ஒரு கொதி வரும் வரை அடுப்பில் வைத்திருந்து பின்னர் அதில் கடுகு, வெங்காயம், கறிவேப்பிலைத் தாளித்துக் கொட்டவும்.

4.  சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். தொட்டுக்கொள்ள பொரித்த அப்பளம் அல்லது வடவம் நன்றாக இருக்கும்.

****************************************

  அகத்திக் கீரை சாறு

அகத்திக் கீரை உடம்புக்கு மிகவும் நல்லது. இதனை தினமும் சமயலில் சேர்த்துக் கொண்டால், உடம்பு ஆரோகியமாக இருக்கும்

தேவையானப்பொருட்கள்:

*அகத்திக்கீரை - 1 கட்டு
*பெரிய வெங்காயம் - 1
*பச்சை மிளகாய் - 2
*சீரகம் - 1 டீஸ்பூன்
*தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
*எண்ணை - 1 டீஸ்பூன்
*கடுகு - 1/2 டீஸ்பூன்
*உப்பு - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

1.  கீரையை காம்பிலிருந்து உருவிக் கொள்ளவும்.

2.  வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

3.  ஒரு வாணலியில் எண்ணை விட்டு சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து சற்று வதக்கவும். அத்துடன் கீரையை அலசிப் போட்டு, சீரகம், உப்பு சேர்க்கவும். அதில் ஒரு கப் தண்ணீரையும் சேர்த்து மூடி போட்டு, சிறு தீயில் வேக விடவும்.

4.  தேங்காயை நன்றாக அரைத்து வெந்தக் கீரையில் சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கி வைக்கவும்.

5.  சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். வாய் மற்றும் வயிற்றுப் புண்ணை ஆற்ற வல்லது. இந்தச் சாற்றை வடிகட்டி சூப் போலவும் குடிக்கலாம்.

********************************************

 மிளகு குழம்பு

தேவையானப்பொருட்கள்:

*மிளகு - 1 டேபிள்ஸ்பூன்
*சீரகம் - 1/2 டேபிள்ஸ்பூன்
*முழுப்பூண்டு - 1
*புளி - சிறிய எலுமிச்சம்பழ அளவு
*சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
*மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
*நல்லெண்ணை - 2 அல்லது 3 டேபிள்ஸ்பூன்
*கடுகு - 1/2 டீஸ்பூன்
*கறிவேப்பிலை - சிறிது
*சாம்பார் வெங்காயம் - 5 அல்லது 6
*உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

1.  புளியை ஊறவைத்து, கரைத்து ஒரு கப் அளவிற்கு புளித்தண்ணீரை எடுத்து அதில் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலக்கி வைத்துக் கொள்ளவும்.

2.  வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டை தோலுரித்து, பூண்டுப்பற்களை தனியாக எடுத்து வைக்கவும். பத்து முதல் பதினைந்து பூண்டுப்பற்கள் போதுமானது.

3.  ஒரு வாணலியில், ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு, முதலில் மிளகையும், பின்னர் சீரகத்தையும் தனித்தனியாக வறுத்து எடுக்கவும். மேலும் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு, பூண்டைப் போட்டு, நன்றாக சிவக்கும் வரை வதக்கி எடுத்து, மிளகு, சீரகம் ஆகியவற்றுடன் சேர்த்து மை போல் அரைத்து வைத்துக் கொள்ளவும்.

4.  அடி கனமான வாணலி அல்லது பாத்திரத்தை அடுப்பில் வைத்து, மீதி எண்ணையை விடவும். அதில் கடுகைப் போட்டு வெடிக்க விடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், வெங்காயம், கறிவேப்பிலைப் போட்டு சிறிது வதக்கவும். அதில் கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீரை விட்டு கொதிக்க விடவும். குழம்பு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் அரைத்து வைத்துள்ள மிளகு விழுதைப் போட்டு, அத்துடன் சிறிது தண்ணீரையும் சேர்த்து நன்றாகக் கலக்கி விடவும். மிண்டும் ஒரு கொதி வரும் வரை அடுப்பில் வைத்திருந்துப் பின்னர் இறக்கி வைக்கவும்.

5.  குறிப்பு: மிளகிற்கு, உடல் வெப்பத்தை அதிகரிக்கும் சக்தி உண்டு. அதனால், குளிர் அல்லது மழைக்காலங்களின் பொழுது, இந்தக் குழம்பைச் செய்து, சூடான சாதத்துடன் சேர்த்துச் சாப்பிடலாம். சுட்ட அப்பளம் இதற்குப் பக்கத் துணை.

6.  இட்லி, தோசைக்கும் தொட்டுக் கொள்ள சுவையாயிருக்கும். தயிர் சாதத்திற்கும் மிக சுவையாக இருக்கும்.

*****************************************

  வத்தக் குழம்பு


தேவையானப்பொருட்கள்:

*புளி - எலுமிச்சம் பழ அளவு
*வத்தல் - (மணத்தக்காளி அல்லது சுண்டைக்காய் வத்தல்) - 1 டேபிள்ஸ்பூன்
*பூண்டுப் பல் - 10 [ விருப்பப்பட்டால்]
*சாம்பார் பொடி - 1 டேபிள்ஸ்பூன் [குவித்து அளக்கவும்]
*மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூன்
*உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
*நல்லெண்ணை - 2 டேபிள்ஸ்பூன்
*கடுகு - 1/2 டீஸ்பூன்
*வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
*கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

1.  உப்பு, புளி இரண்டையும் ஊறவைத்து, நன்றாகப் பிசைந்து, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரைச் சேர்த்து சாறு எடுத்துக் கொள்ளவும். இப்படி எடுத்த சாறு, மூன்று கப் அளவிற்கு இருக்க வேண்டும்.

2.  ஒரு வாணலியில் எண்ணையை விட்டு, சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் வெந்தயத்தைச் சேர்க்கவும். அடுப்பை சிறு தீயில் வைத்துக் கொள்ளவும். இல்லையெனில், வெந்தயம் காந்தி கறுப்பாகிக் கசக்கும்). வெந்தயம் இலேசாக சிவந்தவுடன், வத்தலையும், பூண்டையும் சேர்த்து வதக்கவும். இத்துடன் கறிவேப்பிலையையும் போட்டு சிறிது வதக்கி, அதில் புளித்தண்ணீரை ஊற்றவும். அதில் மஞ்சள் பொடி, சாம்பார் பொடி ஆகியவற்றைப் போட்டு நன்றாகக் கிளறி விடவும். ஒரு மூடி போட்டு மூடி வைத்து, மிதமான தீயில் நன்றாகக் கொதித்து, எண்ணை மேலே தெரியும் வரை வைத்திருந்து, பின்னர் கீழே இறக்கி வைக்கவும்.

3.  குறிப்பு: மேற்கண்ட முறையில் வைக்கப்படும் குழம்பு, சற்று சிவப்பாக இருக்கும். கருஞ்சிவப்பாக குழம்பு தேவையென்றால், புளித்தண்ணீரை ஊற்றும் முன்னர், பூண்டு, வத்தல் ஆகியவற்றை வதக்கிய பின்னர் அதில் சாம்பார் பொடி, மஞ்சள் பொடி ஆகியவற்றைப் போட்டு எண்ணையில் நன்றாக வதக்கி, அதன் பின் புளித்தண்ணீரைச் சேர்த்துக் கொதிக்க விட்டால், குழம்பு கருஞ்சிவப்பாக இருக்கும்.

4.  இதில் "கருவடாம்" என்னும் தாளிக்கும் வடகத்தை கடுகுடன் சேர்த்து தாளித்தால் சுவை கூடுதலாக இருக்கும்.

5.  தயிர் சாதத்திற்கும் மிக சுவையாக இருக்கும்.

**********************************************

 மாங்காய், முருங்கைக்காய், பலாகொட்டை சாம்பார்

இந்த சாம்பார் எங்கள் வீட்டின் அனைவருக்கும் பிடித்தமான ஓர் "டிஸ்" . என்னுடைய அம்மாவின் "தஞ்சாவூர் ஸ்பெஸல்" item...!!

மாங்காய், முருங்கைக்காய், பலாகொட்டை சாம்பார் தஞ்சை மாவட்டத்தில் பிரசித்தமான ஒன்று.  கோடைகாலத்தில், இந்த மூன்று காய்களும் தாராளமாக கிடைப்பதால், அனேகமாக எல்லோர் வீட்டிலும் வாரம் ஒரு முறையாவது இந்த சாம்பார் கண்டிப்பாக இருக்கும்.

தேவையானப்பொருட்கள்:

*மாங்காய் - 1 (நடுத்தர அளவு)
*முருங்கைக்காய் - 1
*பலாக்கொட்டை - 5 முதல் 6 வரை
*தக்காளி - 1
*துவரம் பருப்பு - 1 கப்
*புளி - சிறு எலுமிச்சம் பழ அளவு
*சாம்பார் பொடி - 1 டேபிள்ஸ்பூன்
*மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
*உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

தாளிப்பதற்கு:

*எண்ணை - 2 டீஸ்பூன்
*கடுகு - 1/2 டீஸ்பூன்
*பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
*கறிவேப்பிலை - சிறிது
*சாம்பார் வெங்காயம் - 4 அல்லது 5 [நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்]
*பச்சை மிளகாய் - 2 [நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்]

செய்முறை:

1.  துவரம் பருப்பை கழுவி, 2 கப் தண்ணீர் சேர்த்து, ஒரு சிட்டிகை மஞ்சள் தூளைப்போட்டு, குக்கரில் வைத்து குழைய வேக விட்டு எடுக்கவும்.

2.  புளியை ஒரு கப் தண்ணீரில் ஊறவைத்து, கரைத்து, வடிகட்டிக் கொள்ளவும்.

3.  தக்காளியை பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

4.  பலாகொட்டையை குறுக்கே இரண்டாக வெட்டி, அதன் மேலுள்ள வெள்ளைத் தோலை நீக்கி, 2 கப் நீரில் போட்டு வேக விட்டு, தனியாக எடுத்து வைக்கவும்.

5.  முருங்கைக்காயை 2 அல்லது 3 அங்குல நீளத்திற்கு வெட்டிக் கொள்ளவும். மாங்காயை கொட்டையுடன் நான்கு அல்லது 5 துண்டுகளாக விட்டிக் கொள்ளவும்.

6.  ஒரு பாத்திரத்தில் முருங்கைக்காய் துண்டுகள், வேக வைத்த பலாகொட்டை, தக்காளி, சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றைப் போட்டு, காய் மூழ்கும் அளவிற்கு தண்ணீரைச் சேர்த்து 5 அல்லது 6 நிமிடங்கள் வேக விடவும். பின்னை அதில் மாங்காய் துண்டுகளை சேர்த்து மாங்காய் வேகும் வரை மிதமான தீயில் வைக்கவும். மாங்காய் சீக்கிரம் வெந்துவிடுமாகையால், முருங்கைக்காய் சற்று வெந்ததும்தான் மாங்காயைச் சேர்க்க வேண்டும். மாங்காயை முதலிலேயே சேர்த்தால், மாங்காய் வெந்து கரைந்து விடும்.

7.  காய்கள் வெந்தவுடன், புளித்தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடவும். பின்னர் அதில் வெந்தப் பருப்பை கடைந்து சேர்க்கவும்.

8.  ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போட்டு, அது வெடிக்க ஆரம்பித்ததும், பெருங்காயத்தூள், வெட்டி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கி, கொதிக்கும் சாம்பாரில் கொட்டி, இறக்கி வைக்கவும்.

9.  மாங்காய், முருங்கைக்காய், பலாகொட்டை சாம்பார் தயார்.

*********************************************


 இட்லி சாம்பார்

இட்லிக்கு எந்த விதமான சாம்பாரையும் தொட்டுக்கொள்ளலாம். ஆனாலும், அதிக புளிப்பு, காரம் இல்லாமல் செய்யப்படும் இந்த சாம்பார், இட்லிக்கு கூடுதல் சுவைச் சேர்க்கும்.

தேவையானப்பொருட்கள்:

*துவரம்பருப்பு - 1/2 கப்
*பயத்தம்பருப்பு - 1/4 கப்
*புளி - நெல்லிக்காயளவு
*சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்
*மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
*சாம்பார் வெங்காயம் - 10 முதல் 15 வரை
*தக்காளி - 1
*பச்சைமிளகாய் - 2
*கறிவேப்பிலை - சிறிது
*கொத்துமல்லித்தழை - சிறிது
*எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
*கடுகு - 1/2 டீஸ்பூன்
*பெருங்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
*உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

1.  துவரம்பருப்பு, பயத்தம்பருப்பு இரண்டையும் ஒன்றாகப் போட்டு, அத்துடன் சிறிது மஞ்சள்தூள் சேர்த்து, குக்கரில் குழைய வேக வைத்துக் கொள்ளவும்.

2.  புளியை ஊறவைத்து, கரைத்து 1/2 கப் வரும் அளவிற்கு, புளித்தண்ணீரை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

3.  சாம்பார் வெங்காயத்தை, தோலுரித்து, நீளவாக்கில் ஒன்றிரண்டாக நறுக்கவும். பச்சைமிளகாயை நீளவாக்கில் கீறிக் கொள்ளவும். தக்காளியையும் துண்டுகளாக்கிக் கொள்ளவும்.

4.  ஒரு வாணலியில் எண்ணை விட்டு கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன், பெருங்காயத்தூள், நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வாசனை வரும் வரை வதங்கியவுடன், தக்காளியைச் சேர்த்து சிறிது வதக்கவும். பின்னர் அதில் சாம்பார் பொடி, மஞ்சள்தூள், உப்பு போட்டு அத்துடன் புளித்தண்ணீரைச் சேர்த்து கலந்து, மூடி கொதிக்க விடவும். ஓரிரு நிமிடங்கள் நன்றாகக்கொதித்தவுடன், வெந்தப்பருப்பைச் சேர்த்து கிளறி விடவும். மீண்டும் கொதிக்கும் வரை அடுப்பில் வைத்திருந்து, கீழே இறக்கி வைத்து கொத்துமல்லித் தழையைத்தூவவும்.

5.  குறிப்பு: எண்ணையில் வறுத்து அரைத்த சாம்பார் பொடியை உபயோகித்தால், சாம்பார் வாசனையாக இருக்கும்.

6.  இதில், ஒரு உருளைக்கிழங்கு, ஒரு காரட் ஆகியவற்றை சிறு துண்டுகளாக நறுக்கி, வெங்காயம் வதக்கும் பொழுது அத்துடன் சேர்த்து வதக்கி சேர்க்கலாம். அல்லது விருப்பமான எந்தக்காயையும் சேர்க்கலாம்.

*******************************************


  கறிவேப்பிலை குழம்பு

நல்ல காரசாரமான இந்தக்குழம்பு குளிர் காலத்துக்கு ஏற்றது.

தேவையானப்பொருட்கள்:

*கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு
*துவரம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
*கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
*காய்ந்த மிளகாய் - 5
*மிளகு - 2 டீஸ்பூன்
*தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
*புளி - எலுமிச்சம் பழ அளவு
*மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
*பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
*எண்ணை - 2 டேபிள்ஸ்பூன்
*கடுகு - 1/2 டீஸ்பூன்
*சீரகம் - 1/2 டீஸ்பூன்
*வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
*உப்பு - 2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

1.  உப்பு, புளி இரண்டையும் ஊற வைத்து, கரைத்து, 2 கப் அளவிற்கு புளித்தண்ணீரை எடுத்துக் கொள்ளவும்.

2.  ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு அதில் துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, மிளகு, மிளகாய் ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து எடுக்கவும். அதே வாணலியில் கறிவேப்பிலையைப் போட்டு சிறிது வதக்கி எடுத்துக் கொள்ளவும். பின்னர் அத்துடன் வறுத்து வைத்துள்ள பருப்புகள், மிளகாய், மிளகு ஆகியவற்றைச் சேர்த்து பொடித்துக் கொள்ளவும்.

3.  தேங்காய்த்துருவலை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

4.  வாணலியில் மீதமுள்ள எண்ணையை விட்டு, சூடானதும் அதில் கடுகு போட்டு, வெடிக்க ஆரம்பித்ததும் சீரகம், வெந்தயம் போட்டு, வெந்தயம் சற்று சிவந்ததும் (கருக விடக்கூடாது) அதில் புளித்தண்ணீரை ஊற்றி, அத்துடன் மஞ்சள் தூள் மற்றும் பொடித்து வைத்துள்ள கறிவேப்பிலைப் பொடி ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்கி விடவும். மூடி போட்டு மிதமான தீயில் கொதிக்க விடவும். குழம்பு கொதிக்க ஆரம்பித்ததும் அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதைச் சேர்த்து, தேவையானால் சிறிது நீரையும் சேர்த்துக் கிளறி சிறு தீயில் மீண்டும் கொதிக்க விட்டு இறக்கி வைக்கவும்.

5.  விருப்பமானால் ஓரிரண்டு பூண்டுப்பற்கள், மற்றும் சாம்பார் வெங்காயத்தையும் தாளிப்பில் சேர்க்கலாம்.

*****************************************


  சுண்டைக்காய் பொரிச்சக் குழம்பு

தேவையானப்பொருட்கள்:


*சுண்டைக்காய் - 2 கப்
*துவரம் பருப்பு - 1/2 கப்
*சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்
*மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
*காய்ந்த மிளகாய் - 2
*கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
*தனியா - 1 டீஸ்பூன்
*தேங்காய்த்துருவல் - 1 டேபிள்ஸ்பூன்
*உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

தாளிக்க:

*எண்ணை - 2 டீஸ்பூன்
*கடுகு - 1/2 டீஸ்பூன்
*பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
*வெங்காயம் நறுக்கியது - 1 டேபிள்ஸ்பூன்
*கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

1.  சுண்டைக்காயின் காம்பைக் கிள்ளி விட்டு, இரண்டாக வெட்டி தண்ணீரில் போட்டு வைக்கவும்.

2.  துவரம்பருப்பை, சிறிது மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்.

3.  ஒரு வாணலியில் சிறிது எண்ணை விட்டு, கடலைப்பருப்பு, காய்ந்தமிளகாய், தனியா ஆகியவற்றை வறுத்து, ஆறியபின், அத்துடன் தேங்காய்த்துருவலைச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

4.  சுண்டைக்காயைத் தண்ணீரிலிருந்து எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு போட்டு அத்துடன் காய் மூழ்கும் அளவிற்கு தண்ணீரை ஊற்றி, மிதமான தீயில் வேகவிடவும்.

5.  காய் வெந்த பிறகு, வேக வைத்த பருப்பைச் சேர்த்துக் கிளறி, ஒரு கொதி வரும்வரை மிதமான தீயில் வைக்கவும். பின்னர், அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதைச் சேர்த்துக் கலக்கி விட்டு ஓரிரு வினாடிகள் கொதிக்க விடவும்.

6.  கடைசியில், கடுகு, கறிவேப்பிலை, வெங்காயம், பெருங்காயம் ஆகியவற்றைத் தாளித்துக் கொட்டவும்.

 குறிப்பு: துவரம் பருப்பிற்குப் பதில், பயத்தம்பருப்பையும் இதில் சேர்த்து செய்யலாம்.  சுவையாக இருக்கும்.

*****************************************

 வெங்காய சாம்பார்[Onion Sambar]



வெங்காய சாம்பார்


தேவையான பொருட்கள்:


*சாம்பார் வெங்காயம் - 15 அல்லது 20
*தக்காளி நடுத்தர அளவு - 1
*பச்சை மிளகாய் - 2
*துவரம் பருப்பு - 1 கப்
*புளி - ஒரு சிறு எலுமிச்சம்பழ அளவு
*சாம்பார் பொடி - 1 டேபிள்ஸ்பூன்
*மஞ்சள்த்தூள் - 1/4 டீஸ்பூன்
*உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

தாளிக்க:

*எண்ணை - 2 டேபிள்ஸ்பூன்
*க‌டுகு - 1/2 டீஸ்பூன்
*பெருங்காய‌த்தூள் -‍ ஒரு சிட்டிகை
*க‌றிவேப்பிலை - சிறிது
*கொத்த‌ம‌ல்லித்த‌ழை - சிறிது

செய்முறை:

1.  துவரம்பருப்பை நன்றாகக் கழுவி, அத்துடன் 2 கப் தண்ணீர், சிறிது மஞ்சள்த்தூள் சேர்த்து, குக்கரில் வேக வைக்கவும்.

2.  புளியை ஊறவைத்து, கரைத்து, வடிகட்டிக் கொள்ளவும். 2 கப் அளவிற்கு புளித்தண்ணீர் இருக்கவேண்டும்.

3.  வெங்காயத்தை தோலுரித்து, முழுதாக வைத்துக் கொள்ளவும். தக்காளியை நடுத்தர அளவு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பச்சை மிளகாயை நீளவாக்கில், இரண்டாக நறுக்கி வைக்கவும்.

4.  ஒரு வாண‌லியில் எண்ணை விட்டு (ந‌ல்லெண்ணை உப‌யோகித்தால், வாச‌னையாக‌ இருக்கும்) சூடான‌தும் க‌டுகு போட‌வும். க‌டுகு வெடித்த‌வுட‌ன், பெருங்காய‌த்தூள், வெங்காய‌ம், ப‌ச்சை மிள‌காய், க‌றிவேப்பிலைச் சேர்த்து வ‌த‌க்க‌வும். வெங்காய‌ம் ச‌ற்று வ‌த‌ங்கிய‌வுட‌ன், த‌க்காளித்துண்டுக‌ளைச் சேர்த்து ஒரு நிமிடம் வ‌த‌க்க‌வும். பின்ன‌ர் அதில், புளித்த‌ண்ணீர், சாம்பார் பொடி, ம‌ஞ்ச‌ள்த்தூள், உப்புச் சேர்த்து, மூடி வைத்து, மித‌மான‌ தீயில் கொதிக்க‌ விட‌வும்.

5.  குழ‌ம்பு கொதிக்க‌ ஆர‌ம்பித்த‌தும், வெந்த‌ப் ப‌ருப்பை ம‌சித்து சேர்க்க‌வும். ந‌ன்றாக‌க் கிள‌றி மீண்டும் கொதிக்க‌ விட‌வும். சாம்பார் கொதித்து, ச‌ற்று கெட்டியான‌தும், கீழே இற‌க்கி, கொத்தும‌ல்லித் த‌ழையைத் தூவ‌வும்.

6.  சுவைமிக்க வெங்காய சாம்பார் தயார்.


*******************************************
 
  மோர்க்குழம்பு
 
தேவையானப் பொருட்கள்:

*மோர் - 2 கப் (திக்காக இருக்கவேண்டும்)
*மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
*பச்சைமிளகாய் - 2
*சீரகம் - 1/2 டீஸ்பூன்
*அரிசி - 1/2 டீஸ்பூன்
*துவரம் பருப்பு - 1 டீஸ்பூன்
*தனியா - 1 டீஸ்பூன்
*தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
*எண்ணை - 1 டீஸ்பூன்
*கடுகு - 1/2 டீஸ்பூன்
*காய்ந்த மிளகாய் - 1
*பெருங்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
*கறிவேப்பிலை - 1 ஈர்க்கு
*உப்பு - 1 டீஸ்பூன்

செய்முறை:

1.  துவரம் பருப்பு, தனியா, சீரகம், அரிசி அகியவற்றை 10 அல்லது 15 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைக்கவும்.

2.  பின்னர் தண்ணீரை வடித்து விட்டு, அத்துடன் தேங்காய்த்துருவல், பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக மை போல் அரைத்துக் கொள்ளவும்.

3.  மோரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அத்துடன் அரைத்த விழுது, மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கி, அடுப்பிலேற்றிக் கொதிக்க விடவும். ஒரு கொதி வந்ததும், உடனே அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.

4.  ஒரு வாணலியில் எண்ணை விட்டு கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, குழம்பில் கொட்டவும்.

குறிப்பு:

தயிராக இருந்தால், ஒரு பாத்திரத்தில் கொட்டி மோர் சிலுப்பியால் நன்றாக சிலுப்பிக் கொள்ளவும். குழம்பை நீண்ட நேரம் கொதிக்க விடக்கூடாது. அப்படிக் கொதித்தால், குழம்பு நீர்த்துப் போய் விடும். குழம்பில் காய் சேர்த்தும் செய்யலாம். வெண்டைக்காய், பெங்களூர் கத்திரிக்காய், வெள்ளைப் பூசணிக்காய் பொருத்தமாய் இருக்கும். வெண்டைக்காய் சேர்ப்பதென்றால், காம்பு நீக்கி விட்டு, இரண்டு அங்குலத் துண்டுகளாக நறுக்கி, ஒரு டீஸ்பூன் எண்ணையில், பிசுக்கு போக வதக்கி, குழம்புடன் சேர்த்து கொதிக்க விடவும். மற்ற காய்கள் என்றால், காயை சிறிது வேகவைத்து சேர்க்கவும். நாலைந்து மசால் வடைகளை குழம்பில் சேர்த்தால், வடை ஊறி, அருமையான வடை மோர்க்குழம்பு தயார்.

*****************************************

  முருங்கைக்காய் பொரிச்சக் குழம்பு

தேவையானப் பொருட்கள்:

*முருங்கைக்காய் - 2
*பயத்தம்பருப்பு - 1/2 கப்
*தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
*சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
*மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
*சீரகம் - 1/2 டீஸ்பூன்
*அரிசி - 1/2 டீஸ்பூன்
*பச்சை மிளகாய் - 1
*உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

தாளிக்க:

*எண்ணை - 1 டீஸ்பூன்
*கடுகு - 1/2 டீஸ்பூன்
*சாம்பார் வெங்காயம் - 4
*கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை:

1.  முருங்கைக்காயை மூன்று அங்குலத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

2.  பயத்தம் பருப்பை சிறிது மஞ்சள் தூள் சேர்த்து, மலர வேகவைத்துக் கொள்ளவும். குழைய விட வேண்டாம்.

3.  ஒரு பாத்திரத்தில், முருங்கைக்காய் துண்டுகளைப் போட்டு, காய்கள் மூழ்கும் அளவிற்கு தண்ணீரை ஊற்றவும். அதில், சாம்பார் பொடி, சிறிது மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேகவிடவும்.

4.  தேங்காய் துருவல், பச்சை மிளகாய், சீரகம், அரிசி ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்றாக அரைக்கவும்.

5.  காய் வெந்தவுடன், வேக வைத்த பயத்தம் பருப்பை லேசாக மசித்து சேர்க்கவும். ஒரு கொதி வந்தவுடன், அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சிறிது தண்ணீருடன் கலக்கி குழம்பில் ஊற்றவும். நன்றாகக் கிளறி விட்டு மீண்டும் கொதிக்க விடவும்.

6. குழம்பு நன்றாகக் கொதித்தவுடன், கடுகு, கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றை தாளித்துக் கொட்டவும்.
Related Posts with Thumbnails