Saturday, March 31, 2012

பொடி வகைகள்

இந்த பொடி வகைகளில் தேங்காய் பொடியும் பருப்பு பொடியும் பிரசித்தம்.  முதலில் தேங்காய் பொடியை பார்க்கலாம்.

பொடி வகைகள் 


1.  தேங்காய் பொடி


தேவையான பொருட்கள்:

*தேங்காய் துருவல் - 1 கப்
*உழுத்தம் பருப்பு - 1 Tea Spoon
*கடலை பருப்பு - 1 Tea Spoon
*குண்டு மிளகாய் வற்றல் - 10
*பெருங்காயம் - சிறிது
*எண்ணை - 1/2 Tea Spoon  
*புளி - கோலிகுண்டு அளவு

செய்முறை:

1.  தேங்காய் துறுவலை நல்ல சிவப்பாக வறட்டு வாணலியில் வறுக்கவும்.  கருகாமல் வறுக்கவும்.
2.  புளியை சின்ன சின்ன துண்டுகளாக பியித்து நன்றாக வறுக்கவும். கரகர்ப்பாக வறுக்கவும்.
3.  பிறகு எண்ணை விட்டு மற்ற சாமாங்களை வறுக்கவும்.
4.  ஆறினதும், மிக்சி யில் போட்டு உப்பு சேர்த்து அரைக்கவும்.
5.  பாட்டிலில் போட்டு வைக்கவும்.
6.  தேவையான போது, சூடு சாதத்தில் நேய் விட்டு இந்த பொடி போட்டு பிசைந்து சாப்பிடவும்.
7.  தொட்டுக்கொள்ள அப்பளம் / சாம்பார் / அல்லது கெட்டித் தயிர் சுவையாக இருக்கும்.



2. பருப்பு பொடி


தேவையான பொருட்கள்:  


*துவரம்பருப்பு - ஒரு கப்
*கடலைப் பருப்பு - கால் கப்
*மிளகாய் வற்றல் - 2
*மிளகு - 2 தேக்கரண்டி
*உப்பு - தேவையான அளவு

செய்முறை:

1.  தேவையானவற்றை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.  

2.  துவரம்பருப்பு மற்றும் கடலைப் பருப்பை வெறும் வாணலியில் எண்ணெயில்லாமல் சிவக்க வறுக்கவும். பாதி வறுக்கும்போதே மிளகு, மிளகாய் வற்றலையும் சேர்த்துக் கொள்ளவும்.

3.  இறக்கி ஆறியதும் தேவையான உப்பு சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக பொடி செய்யவும். ரொம்ப நைஸாக இருக்கக் கூடாது.

4.  சாதத்தில் நல்லெண்ணெயோ, நெய்யோ சேர்த்து இந்த பருப்புப் பொடி போட்டு கலந்து மோர்க் குழம்பு, அப்பளத்துடன் சாப்பிடவும்.




3.  இட்லி பொடி


தேவையான பொருட்கள்


*உளுத்தம் பருப்பு - 100 கிராம்
*கடலை பருப்பு - 100 கிராம்
*காய்ந்த மிளகாய் - 50 கிராம்
*வெள்ளை எள் - 50 கிராம்
*பெருங்காயம் - சிறிதளவு
*உப்பு -தேவையான அளவு


செய்முறை


1. உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, மிளகாய் ஆகியவற்றை தனித்தனியே வறுத்து எடுத்துக் கொள்ளவும்.


2. இம்மூன்றையும் தனித்தனியாக அரைத்து, பின்னர் உப்பு, பெருங்காயம் சேர்த்து கிளறி விட வேண்டும்.


3. காற்று புகாத பாட்டிலிலோ, பாத்திரத்திலோ போட்டு வைக்கவும்.


குறிப்பு


தேவைப்பட்டவர்கள் தட்டி காயவைத்த பூண்டை அரைத்தும் சேர்த்துக் கொள்ளலாம்.




4.  சாம்பார் பொடி


தேவையான பொருட்கள்


*சிகப்பு குண்டு மிளகாய் - 50 கிராம்
*மல்லி [தனியா] - 100 கிராம்
*கடலைப் பருப்பு - 50 கிராம்
*துவரம் பருப்பு - 50 கிராம்
*மிளகு - 2 மேஜை கரண்டி
*காய்ந்த மஞ்சள் கொம்பு - 1


செய்முறை


1. சூரிய ஒளியில் அனைத்து பொருட்களையும் நன்கு காய வைத்து எடுத்துக் கொள்ளவும்.


2. ஒவ்வொன்றையும் தனித்தனியாகவோ அல்லது ஒன்றாகவோ பொடியாக்கிக் கொள்ளவும்.


3. காற்று புகாத பாட்டிலிலோ, பாத்திரத்திலோ போட்டு வைக்கவும்.


குறிப்பு


தேவைப்பட்டவர்கள் 2 தேக்கரண்டி வெந்தயத்தை வறுத்து மற்ற பொருட்களுடன் சேர்த்து பொடித்துக் கொள்ள


5.  பருப்பு ரசப் பொடி

தேவையான பொருட்கள்

*துவரம் பருப்பு - 100 கிராம்
*சிகப்பு மிளகாய் - 25 கிராம்
*மல்லி (தனியா) - 100 கிராம்
*சீரகம் - 100 கிராம்
*மிளகு - 1 மேஜைக் கரண்டி
*கடுகு - 2 தேக்கரண்டி
*வெந்தயம் - 2 தேக்கரண்டி
*உருவிய கறிவேப்பிலை - தேவையான அளவு

செய்முறை

1. அனைத்து பொருட்களையும் சூரிய ஒளியில் காய வைத்து தனித்தனியே அல்லது ஒன்றாகச் சேர்த்து வறுக்கவும்

2. பின்னர் காற்று புகாத பாட்டிலிலோ, பாத்திரத்திலோ சேமித்து வைக்கவும்.

குறிப்பு

பொடிக்கும் போது கரகரப்பாக பொடிக்கவும்.


6.  பருப்பு சாத பொடி


தேவையான பொருட்கள்


*பொட்டுக் கடலை - 150 கிராம்
*சிகப்பு மிளகாய் - 10
*பூண்டு - 1
*கொப்பரை தேங்காய் - 1 மேஜைக் கரண்டி
*நெய் - 2 தேக்கரண்டி
*கல் உப்பு - 1 தேக்கரண்டி அல்லது தேவையான அளவு

செய்முறை

1. வாணலியில் நெய் விட்டு சூடாக்கி பொட்டுக் கடலை, சிகப்பு மிளகாய் ஆகியவறை ஒரு சில நிமிடங்கள் வறுத்து ஆற வைக்கவும்.

2. இதனுடன் உப்பு சேர்த்து மிக்சியில் நன்கு பொடிக்கவும். சல்லடை கொண்டு சலித்து கப்பியை மீண்டும் பொடிக்கவும்.

3. பின்னர் கடைசியாக கிடைக்கும் கப்பியுடன், கொப்பரை தேங்காய், பூண்டு சேர்த்து மிக்சியில் குறைந்த வேகத்தில் பொடிக்கவும்.

4. அனைத்தையும் ஒன்றாகக் கலந்து காற்று புகாத பாட்டிலிலோ, பாத்திரத்திலோ சேமித்து வைக்கவும்.

குறிப்பு

பருப்பு சாத பொடியை சூடான சாதத்துடன் நெய் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் வாசனையாகவும் ருசியாகவும் இருக்கும்.

7.  அங்காயப் பொடி

அங்காயப்பொடி நம் உடலில் வாதம் மற்றும் பித்தத்தின் அளவை சரி செய்ய கூடியது. அஜீரண கோளாறு, சோர்வு ஆகியவற்றிற்கு சிறந்தது. பாலூட்டுபவர்கள் தினமும் சேர்த்து கொண்டால் இருவருக்கும் நல்லது. பயண நேரத்தில் அவசியம் எடுத்து செல்ல வேண்டிய பொடி இது.

*சிகப்பு மிளகாய் - 12
*தனியா - அரை கப்
*மிளகு - 2 தேக்கரண்டி
*சீரகம் - 2 தேக்கரண்டி
*சுக்கு - 2 துண்டு
*பெருங்காயம் - 3 தேக்கரண்டி
*ஓமம் - 2 தேக்கரண்டி
*அரிசி திப்பிலி - ஒரு தேக்கரண்டி
*கண்டதிப்பிலி - ஒரு தேக்கரண்டி
*சுண்டை வற்றல் - 25
*மணத்தக்காளி வற்றல் - 25
*கறிவேப்பிலை - கால் கப்
*உளுந்து - 2 தேக்கரண்டி
*கடலை பருப்பு - 2 தேக்கரண்டி
*துவரம் பருப்பு - 2 தேக்கரண்டி
*உப்பு - தேவையான அளவு
*கடுகு - ஒரு தேக்கரண்டி
*எள் - 2 தேக்கரண்டி
*வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
*இதனுடன் வேப்பம் பூ - கால் கப், சதகுப்பை - 2 தேக்கரண்டி சேர்த்து திரிக்க வேண்டும். 

1.  மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்கள் எல்லாவற்றையும் தயாராக எடுத்து வைக்கவும்.

2.  முதலில் ஒவ்வொரு பொருளையும் தனித்தனியே பெருங்காயம், உப்பு தவிர்த்து சிறு தீயில் வைத்து புகை வராமல் வறுக்கவும்.

3.  கடைசியாக வற்றல், திப்பிலி வகை சேர்த்து வறுக்கவும்.

4.  எல்லாவற்றையும் பரத்தி நன்கு ஆற விடவும்.

5.  நன்கு பொடியாக திரித்து பெருங்காயம், உப்பு சேர்த்து கலந்து விடவும்.

6.  அங்காய பொடி தயார்.

Related Posts with Thumbnails