Saturday, November 20, 2010

ரசம் வகைகள்

இஞ்சி-ஜீரா ரசம்

இஞ்சி-ஜீரா ரசம்
தேவையானவை:

*துவரம் பருப்பு - கால் படி
*ரசப்பொடி - ஒரு தேக்கரண்டி
*புளி - 2 கொட்டைப்பாக்கு அளவு
*சிறிய தக்காளி - ஒன்று
*கடுகு - கால் தேக்கரண்டி
*பெருங்காயம் - ஒரு துண்டு
*இஞ்சி - ஒரு துண்டு
*ஜீரா - ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லி - வாசனைக்கு
*கறிவேப்பிலை - வாசனைக்கு
*உப்பு - ஒரு தேக்கரண்வு

செய்முறை:

1.  இந்தச் சாற்றினை மேலாக இறுத்து வைத்துக் கொண்டால் சுண்ணாம்பு அடியில் தங்கிவிடும்.

2.  தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

3.  பருப்பை அரை படி தண்ணீரில் குழைய வேக வைத்துக் கொள்ளவும்.

4.  வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளித்து வைக்கவும்.

5. புளியை தண்ணீரில் ஊறவைத்து, ஒரு பாத்திரத்தில் புளிக்கரைச்சலாக எடுத்துக் கொள்ளவும். புளிக்கரைச்சலுடன் உப்பு, பெருங்காயம், நறுக்கிய தக்காளி, ரசப்பொடி, ஜீரகப் பொடி போட்டு 8 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.

6.  பிறகு கொதித்தவுடன் வேகவைத்த பருப்பை போட்டு நுரைத்து வந்தவுடன் கறிவேப்பிலை, கொத்தமல்லி போட்டு தாளித்த கடுகையும் போட்டு இறக்கிவைத்து இஞ்சி சாற்றை சேர்க்கவும்.
விருப்பமானால் அரை தேக்கரண்டி சீரகமும் தாளித்து சேர்க்கலாம்

*******************************************

2.  அரச்சுவிட்ட ரசம்

தேவையானவை:

*பருப்பு தண்ணீர் (அ) அரிசி களைந்த நீர் - 3 கப்
*தக்காளி - ஒன்று
*புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
*சீரகம் - ஒரு தேக்கரண்டி
*மிளகு - ஒரு தேக்கரண்டி
*பூண்டு - 4 பல்
*மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
*கடுகு, பெருங்காயம், கருவேப்பிலை, காய்ந்த மிளகாய், எண்ணெய் - தாளிக்க
*கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
*உப்பு - தேவையான அளவு

செய்முறை:

1.  பருப்பு தண்ணீர் இல்லையென்றால் அரிசி களைந்து இரண்டாவதாக

2.  கழுவிய நீரில் புளியை ஊற வைக்கவும். சீரகம், பூண்டு மற்றும் மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

3.  தக்காளியை சுடு நீரில் போட்டு தோலுரித்து நசுக்கி வைத்து கொள்ளவும். எண்ணெயை காய வைத்து தாளிக்க கூறியுள்ளதை தாளிக்கவும்

4.  தக்காளி சேர்த்து வதக்கி, அரைத்து வைத்துள்ள பொடியையும் சேர்த்து ஒரு வதக்கு வதக்கவும்

5.  புளி கரைசலை சேர்த்து உப்பு மற்றும் மஞ்சள் தூளும் சேர்த்து கொதிக்க விடவும்

6. நுரைகட்டி வரும் போது அடுப்பை அணைத்து விடவும்
இறக்கி வைத்து மேலே கொத்தமல்லி தூவி பரிமாறவும்


******************************************

2.தேங்காய் பால் ரசம்

தேவையானவை:

*தேங்காய் துருவல் - ஒரு கப்
*சின்ன வெங்காயம் - 25
*புளி - சிறிய எலுமிச்சை அளவு
*வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
*மிளகாய் வற்றல் - 9
*எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
*கறிவேப்பிலை - ஒரு கொத்து
*கல் உப்பு - ஒரு தேக்கரண்டி
*தேங்காய் துருவல் - ஒரு கப்
*சின்ன வெங்காயம் - 25
*புளி - சிறிய எலுமிச்சை அளவு
*வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
*மிளகாய் வற்றல் - 9
*எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
*கறிவேப்பிலை - ஒரு கொத்து
*கல் உப்பு - ஒரு தேக்கரண்டி

செய்முறை:


1. ஒரு பாத்திரத்தில் புளியை போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் ஊற வைத்து கரைத்து ஒரு கப் அளவிற்கு புளிக்கரைசல் எடுத்துக் கொள்ளவும்

2.  வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிளகாய் வற்றலை போட்டு 30 நொடி வறுத்துக் கொள்ளவும்

3.  அதனுடன் வெந்தயம், சின்ன வெங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு 2 நிமிடம் வதக்கவும்.

4.  வெங்காயம் வதங்கியதும் கரைத்து வைத்திருக்கும் புளிக்கரைச்சல் ஊற்றி ஒரு கொதி வந்ததும், உப்பு போட்டு கலக்கி விடவும்

5.  பிறகு ஒரு தட்டை போட்டு மூடி வைத்து புளி வாசனை போகும் வரை 5 நிமிடம் கொதிக்க விடவும்.

6. புளித்தண்ணீர் கொதிக்கும் நேரத்தில் துருவிய தேங்காயை மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து பிழிந்து 1 1/2 கப் அளவு பால் எடுக்கவும். பிழிந்து எடுத்த பாலை சக்கையில்லாமல் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்

7.  5 நிமிடம் கொதித்த பிறகு திறந்து தயாராக எடுத்து வைத்திருக்கும் தேங்காய் பாலை ஊற்றி கொதி வரும் முன் இறக்கி விடவும். அதிகம் கொதிக்க விடக் கூடாது, பால் திரிந்து விடும்

8.  சுவையான தேங்காய் பால் ரசம் தயார்.

******************************


3.கண்டந்திப்பிலி ரசம்

தேவையானவை:

*கண்டந்திப்பிலி - ஒரு மேசைக்கரண்டி
*தக்காளி - ஒன்று
*கொத்தமல்லி - ஒரு கொத்து
*வேக வைத்த பருப்பு - கால் கப்
*புளி தண்ணீர் - அரை கப்
*உப்பு - ஒன்றரை தேக்கரண்டி
*மிளகு, சீரகப் பொடி - ஒரு தேக்கரண்டி
*மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
*நெய் - 2 தேக்கரண்டி
*எண்ணெய் - ஒரு தேக்கரண்டி

செய்முறை

1.  தக்காளியை கழுவி விட்டு நீளவாக்கில் நான்கு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கொத்தமல்லியை ஆய்ந்து கழுவி எடுத்துக் கொள்ளவும். கண்டந்திப்பிலியை பொடி செய்து எடுத்துக் கொள்ளவும்.

2.  ஒரு எண்ணெய் சட்டியில் கரைத்து வைத்திருக்கும் புளித் தண்ணீரை ஊற்றி, அதில் நறுக்கி வைத்துள்ள தக்காளித் துண்டங்களைப் போட்டு கரண்டியை வைத்து நன்கு மசித்து விடவும்.

3.  அதனுடன் மிளகு, சீரகத் தூள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் ஒன்றரை தேக்கரண்டி கண்டந்திப்பிலிப் பொடி போட்டு 15 நிமிடம் நன்கு கொதிக்க விடவும்

4.  ரசம் ஒரு கொதி வந்ததும் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் பருப்பை அதனுடன் சேர்த்து கலக்கி விட்டு 3 நிமிடம் கொதிக்க விடவும். பருப்பு சேர்ப்பதால் ரசம் நன்கு சுவையாக இருக்கும்

5.  ரசம் 3 நிமிடம் நன்கு கொதித்து நுரைத்து வரும் போது மேலே கொத்தமல்லி தழையை தூவி இறக்கவும்.

6.  பிறகு இரும்பு குழிக்கரண்டி அல்லது சிறிய வாணலியில் 2 தேக்கரண்டி நெய் அல்லது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடிக்க விடவும்

7.  கடுகு வெடித்ததும் மீதம் உள்ள கண்டந்திப்பிலி பொடியை போட்டு தாளித்து அதை ரசத்தில் ஊற்றி அதே கரண்டியை வைத்து ரசத்தை கலக்கி விடவும்.

8. இப்போது சுவையான கண்டந்திப்பிலி ரசம் தயார். உடல் அலுப்பினை போக்குவதற்கு இந்த கண்டந்திப்பிலி ரசம் கைகண்ட மருந்து.  உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தது இந்த கண்டந்திப்பிலி
ரசம்

****************************************

4.மைசூர் ரசம்

ரச வகைகளில் மைசூர் ரசத்திற்கு என்றும் சிறப்பு உண்டு. மற்ற ரசங்களைவிட தயாரிப்பதற்கு சற்று நேரம் பிடிக்கும். தேங்காய் சேர்க்கப்படுவது இந்த ரசத்தின் சிறப்பு அம்சம். அலாதியான சுவையுடையது.

தேவையானவை:

*துவரம் பருப்பு - 4 மேசைக்கரண்டி + ஒரு தேக்கரண்டி
*மிளகாய் வற்றல் - 2
*மல்லி - 4 தேக்கரண்டி
*மிளகு - 2 தேக்கரண்டி
*சீரகம் - ஒரு தேக்கரண்டி
*தக்காளி - 2
*தேங்காய் துருவல் - கால் கப்
*மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
*கறிவேப்பிலை - 2 கொத்து
*புளி - சிறிய எலுமிச்சை அளவு
*கடுகு - ஒரு தேக்கரண்டி
*உப்பு - அரை தேக்கரண்டி

செய்முறை:

1.  தக்காளியை நீளவாக்கில் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.தேங்காயைத் துருவி எடுத்துக் கொள்ளவும். தேவையான இதரப் பொருட்களையும் தயாராய் வைத்துக் கொள்ளவும்

2.  ரசப்பொடி தயாரிக்க, துவரம் பருப்பில் ஒரு தேக்கரண்டி எடுத்துக் கொள்ளவும். அத்துடன் மல்லி, மிளகு, சீரகம் ஆகியவற்றை எடுத்து வைக்கவும்.

3.  முதலில் ஒரு பாத்திரத்தில் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி கொதித்ததும், அதில் பருப்பைப் போட்டு நன்கு வேகவிடவும். பருப்பு வேக சற்று நேரம் எடுக்கும். அந்த நேரத்தில் மற்றொரு அடுப்பில் கீழ்கண்டவற்றை செய்துகொள்ளவும்

4.  வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடி தயாரிக்க வைத்துள்ள துவரம் பருப்பு, மிளகாய் வற்றல், மல்லி, மிளகு, சீரகம் போட்டு சிவக்க வறுக்கவும்

5.  வறுத்து எடுத்தவற்றை ஆறவைத்து, பின்னர் மிக்ஸியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

6.  வாணலியில் எண்ணெயில்லாமல் தேங்காய் துருவலை போட்டு வறுத்து எடுத்து, மிக்ஸியில் போட்டு பொடித்து எடுத்துக் கொள்ளவும்

7.  புளியை ஒன்றரை கப் தண்ணீரில் ஊறவைத்து கரைத்து எடுத்துக் கொள்ளவும். அத்துடன் மஞ்சள்தூள், உப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். ஒரு கொதி வந்தவுடன் இறக்கிவிடவும்.

8.  வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம் போட்டு தாளித்து தக்காளியை போட்டு 30 நொடி வதக்கவும்

9.  தக்காளி சற்று வதங்கிய பின்பு, புளிக்கலவையை ஊற்றி சுமார் 3 நிமிடம் கொதிக்க விடவும்

10. அதில் 2 மேசைக்கரண்டி பொடித்த ரசப் பொடியை போட்டு ஒரு நிமிடம் வேகவிடவும். பிறகு வேக வைத்த பருப்பை மசித்துக் கொட்டி, ஒரு கப் தண்ணீர் சேர்க்கவும். தேங்காய் பொடி 2 மேசைக்கரண்டி போட்டு கலக்கி விடவும்

11. ரசம் கொதித்து நுரைத்தவுடன் இறக்கி விடவும்.மேலே சிறிது தேங்காய்ப் பொடியினை தூவலாம். மைசூர் ரசம் தயார். தேங்காய், பருப்பு அதிகம் சேர்ப்பதுதான் மைசூர் ரசத்தின் சிறப்பு


*******************************************

5.தக்காளி மிளகு ரசம்



தேவையானவை:

*புளி - எலுமிச்சம் பழ அளவு
*தக்காளி - ஒரு கப் மசித்தது
*மிளகுத்தூள் - முக்கால் தேக்கரண்டி
*நெய் - 2 மேசைக்கரண்டி
*கடுகு - ஒரு தேக்கரண்டி
*கறிவேப்பிலை - ஒரு கை பிடி
*பூண்டு - 8 பல்(சிறியது)
*ரசப்பொடி - 2 தேக்கரண்டி
*மிளகாய்த்தூள் - அரை தேக்கரண்டி
*மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி
*தண்ணீர் - 6 கப்
*உப்பு - தேவையான அளவு

செய்முறை:

1.  புளியை போதுமான நீரில் ஊறவைத்து சாறெடுக்கவும். சாறு ஒரு கப் இருக்க வேண்டும்.

2.  இதில் தண்ணீர், தக்காளி, அரை தேக்கரண்டி மிளகுத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்க விடவும்.

3 நிமிடம் கொதித்த பிறகு, இன்னொரு பக்கம் வாணலியில் நெய் ஊற்றி சூடாக்கவும்.

4.  கடுகு சேர்த்து அது வெடித்ததும் பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து மிகக்குறைந்த தீயில் சிறிது வதக்கவும்.

5.  பிறகு தூள்களைச் சேர்த்து மீதமுள்ள கால் தேக்கரண்டி மிளகுத்தூள் சேர்த்து, ஒரு தடவை பிரட்டி ரசத்தில் கொட்டி, போதிய உப்பு சேர்த்து மேலும் 2 நிமிடம் கொதிக்க விடவும்.

6. தக்காளி மிளகு ரசம் தயார்.


********************************************


6.பைனாப்பிள் ரசம்

தேவையானவை:

*துவரம்பருப்பு - 100 கிராம்
*புளி - 10 கிராம்
*அன்னாசி - 4 துண்டுகள்
*உலர்ந்த மிளகாய் - 6
*தனியா - 5 கிராம்
*கொத்தமல்லி - சிறிது
*கறிவேப்பிலை - சிறிது
*கடுகு - அரைத்தேக்கரண்டி
*எண்ணெய் - 10 கிராம்
*உப்பு - தேவையான அளவு

செய்முறை:

1.  வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிளகாய் தனியா இரண்டையும் போட்டு சிவக்க வறுத்து எடுத்து அம்மியில் வைத்துப் பொடித்துக் கொள்ளுங்கள்.

2.  ஒரு பாத்திரத்தில் இருநூறு மில்லி தண்ணீர் விட்டு அடுப்பில் வையுங்கள். தண்ணீர் சூடானதும் பருப்பைப்போடுங்கள்.

3.  பருப்பு நன்றாக வெந்ததும் புளி, உப்புப் பொடி, மிளகாய்ப்பொடியையும் போட்டுக் கலந்து விடுங்கள்.

4.  எல்லாம் நன்றாக கொதித்ததும் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக்கிப் போடுங்கள்.

5.  மேலும் நன்றாகக் கொதித்ததும் மேலும் இருநூறு மில்லி தண்ணீர் விட்டுச் சிறிது நேரம் அடுப்பிலேயே வைத்திருந்து இறக்குங்கள்.

6. கடுகைத் தாளித்துக் கொட்டுங்கள். கொத்தமல்லி, கறிவேப்பிலையையும் போட்டு உபயோகியுங்கள்.

*********************************************

7.பூண்டு ரசம்

தேவையானவை:

*துவரம் பருப்பு - 2 மேசைக்கரண்டி
*புளி - நெல்லிக்காய் அளவு
*பூண்டு - 10 பல்
*தக்காளி - 3
*மிளகாய் - 2
*மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
*மிளகுத் தூள் - ஒன்றரை தேக்கரண்டி
*சீரகத்தூள் - 2 தேக்கரண்டி
*வெந்தயம் - கால் தேக்கரண்டி
*பெருங்காயம் - கால் தேக்கரண்டி
*கறிவேப்பிலை - சிறிது
*உப்பு - தேவையான அளவு

செய்முறை:

1.  புளியை ஒன்றரை டம்ளர் தண்ணீரில் கரைத்து, வடித்து எடுத்துக் கொள்ளவும்.

2.  துவரம் பருப்புடன் மஞ்சள் தூளினைச் சேர்த்து, போதுமான அளவு நீர் விட்டு, நன்கு குழைய வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

3. வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, கடுகு, வெந்தயம் போட்டு தாளிக்கவும். மிளகாயைக் கிள்ளிப் போடவும்.

4.  அத்துடன் பொடியாக நறுக்கின பூண்டினை சேர்த்து வதக்கவும். பூண்டினை நறுக்கியோ அல்லது நசுக்கியோப் போடலாம்.

5. பூண்டு சற்று வதங்கியவுடன் பொடியாய் நறுக்கின தக்காளியைச் சேர்த்து நன்கு வதக்கவும். வதங்கிய பிறகு புளிக்கரைசலை ஊற்றி வேக விடவும்.

6. கரைசலுடன் மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு, வேக வைத்து மசித்த பருப்பு அனைத்தையும் சேர்த்து கொதிக்க விடவும்.

7.  கறிவேப்பிலையைக் கிள்ளிப் போடவும். ரசம் கொதித்து நுரைக்க ஆரம்பித்தவுடன் இறக்கி விடவும்.

*****************************************
8.எலுமிச்சம் பழ ரசம்



எலுமிச்சம் பழ ரசம்
தேவையானவை:

*துவரம் பருப்பு - கால் ஆழாக்கு
*உப்பு - ஒரு தேக்கரண்டி
*ரசப்பொடி - ஒரு தேக்கரண்டி
*தக்காளி - ஒன்று
*சிறிய எலுமிச்சம் பழம் - ஒன்று
*கடுகு - கால் தேக்கரண்டி
*பெருங்காயம் - ஒரு துண்டு
*தனியா - கால் தேக்கரண்டி
*மிளகு - கால் தேக்கரண்டி
*சீரகம் - கால் தேக்கரண்டி

செய்முறை:

1. ஒரு பாத்திரத்தில் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி பருப்பை போட்டு வேக வைத்துக் கொள்ளவும்.

2. தண்ணீரில் தக்காளிப்பழத்தை பிசைந்து அதில் ரசப்பொடி, உப்பு, பெருங்காயம் போட்டு ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.

3.  அதனுடன் வேகவைத்த பருப்பையும் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து இறக்கிவிடவும்.

4.  வாணலியில் எண்ணெய் ஊற்றாமல் தனியா, மிளகு இவற்றை இரண்டு நிமிடங்கள் வறுத்து சீரகத்தோடு வைத்து மிக்ஸியில் அரைத்து எடுத்து ரசத்தில் தூவவும். சீரகத்தை வறுக்க வேண்டாம்.

5.  வாணலியில் எண்ணேய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை தாளித்து ரசத்தில் கொட்டவும்
.
******************************************

9.வேப்பம்பூ ரசம்

தேவையானவை:

*புளி -- எலுமிச்சம் பழம் அளவு [கரைத்த தண்ணீர்]
*மிளகு -- 1/2 டீஸ்பூன்
*சீரகம் -- 1/2 டீஸ்பூன்
*கரிவேப்பிலை -- 2 இனுக்கு
*பெருங்காயம் -- 1/2 டீஸ்பூன்
*எண்ணைய் -- 1 ஸ்பூன்
*கடுகு,உளுத்தம் பருப்பு -- 1 டீஸ்பூன்
*மிளகாய் வத்தல் -- 3 என்னம்
*வெந்தயப் பொடி -- 1/2 டீஸ்பூன்
*உப்பு -- ருசிக்கேற்ப
*தக்காளி -- 2 என்னம்[(நன்றாக பிசைந்து கரைத்தத])]கொத்தமல்லி தழை -- 1 *டேபிள்ஸ்பூன் [பொடியாக நறுக்கியது)
*வேப்பம்பூ -- 1 ஸ்பூன் [வெறும் வாணலியில் 1 நிமிடம் வறுத்தது]

செய்முறை:

1.  வாணலியில் எண்ணைய் ஊற்றி கடுகு,உளுத்தம் பருப்பு, வத்தல்,   கறிவேப்பிலை தாளித்து அதில் வெந்தய்ப் பொடி, பெருங்காயம் போட்டு புளித்தண்ணீரை ஊற்றவும்.

2.  அதனுடன், உப்பு, கரைத்த தக்காளி இவற்றை போட்டு நுரை ததும்பி வறும் போது அடுப்பை நிறுத்தவும்.

3.  நிறுத்தும் முன் கொத்தமல்லி, வேப்பம் பூவை சேர்த்து இறக்கவும்.
சுவையான வேப்பம்பூ ரசம் ரெடி.

4.  சித்திரை மாதம் வருடப்பிறப்பு அன்று முக்கியமாக செய்யும் ரசம் இது

************************************

No comments:

Related Posts with Thumbnails