Tuesday, December 21, 2010

இனிப்பு வகைகள்

திருவாதிரை களி



ஆருத்ரா தரிசனம்.... நம் எல்லோருக்கும் நினைவிற்கு வருவது சுவைமிக்க "திருவாதிரைக் களி" தான்! 

திருவாதிரை களி நைவேத்தியம்

திருவாதிரை களி செய்வது ஏன்?

சிவ பெருமான் தம் பக்தரை சோதனை செய்ய வேண்டி, கிழ வேடம் தரித்து அவர் அளித்த களியை உண்டு களித்ததாக ஒரு கதை வழங்கப்படுகிறது. அதனால்தான் திருவாதிரைத் திருநாளில் சிவனுக்கு களி செய்து நைவேத்தியம் செய்கின்றனர். "களி' என்ற சொல்லுக்கு, ஆனந்தம் என்று தானே பொருள். சிவபெருமான் ஆடும் நடனத்தை ஆனந்த நடனம் என்பர். அவரை ஆனந்த நடராஜர் என்று வணங்குவர். உலகங்களையும், நவக்கிரகங்களையும் இயங்க வைத்துக் கொண்டிருக்கும் ஒரு மகத்தான சக்தி, "நான் ஆடிக் கொண்டு தான், அனைத்தையும் ஆட்டுவிக்க முடியும்!' என்னும் கருத்தின் அடிப்படையில் தான் இந்தத் திருவிழா கொண்டாடப்படுகிறது.


திருவாதிரையன்று நடராஜப் பெருமானுக்கு திருவாதிரைக் களியை, ஏழு காய்கறிக் கூட்டுடன்/குழம்புடன், நைவேத்தியம் செய்து வழிபடுவர். அவ்வாறு செய்தால், ஏழு பிறவிகளிலும் இன்பமே எய்தும் என்பது இப்பண்டிகையின் உட்கருத்து.

திருவாதிரை என்றாலே அன்று செய்யப்படும் 'களி' தான் அனைவர் நினைவிற்கும் வரும்.  இந்த திருவாதிரை களியை என் குடும்பத்தில் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஓர் ஐடம்.



திருவாதிரை தினத்தை முன்னிட்டு, களி செய்முறையை இங்கே உங்களுக்காக.



தேவையான பொருட்கள்:

*பச்சரிசி - 2 கிண்ணம்
*வெல்லம் [பொடித்தது] - 21/2 கிண்ணம்
*பயிற்றம் பருப்பு -1/2 கிண்ணம்[விருப்பப்பட்டால்]
*கடலைப் பருப்பு -1/2 கிண்ணம்[விருப்பப்பட்டால்]
*நெய் - கால் கப்
*முந்திரி - 10
*திராட்சை - 15
*தேங்காய் துருவல் - அரை கப்
*ஏலக்காய் பொடி - அரை மேசைக்கரண்டி

செய்முறை:


1.  தேங்காயைத் துருவி எடுத்துக் கொள்ளவும். தேவையான இதரப் பொருட்களையும் தயாராய் வைத்துக் கொள்ளவும்.

2.  வெறும் வாணலியில் பச்சரிசியை போட்டு பொரிஅரிசியை போல 10 நிமிடம் வறுத்து எடுத்துக் கொள்ளவும்

3.  பிறகு அதை ஆறவைத்து மிக்ஸியில் போட்டு ரவை பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். பிறகு மாவு சலிக்கும் சல்லடையை விட சற்று பெரிய துளையுடைய சல்லடையில் போட்டு சலித்து, சல்லடையில் மீதம் இருக்கும் அரிசியை மீண்டும் மிக்ஸியில் போட்டு ரவை போல் அரைத்து சலித்து எடுத்துக் கொள்ளவும்

4.  ஒரு பாத்திரத்தில் மூன்றரை கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும். கொதித்ததும் அரை கப் தண்ணீரை எடுத்து வைத்து விடவும்

5.  பாத்திரத்தில் இருக்கும் தண்ணீரில், ரவை போல பொடித்த மாவை சிறிது சிறிதாக சேர்த்து, நன்கு கைவிடாமல் கட்டிவிழாதவாறு 5 நிமிடம் கிளறவும்

6.  தண்ணீர் கொதிக்கும் நேரத்தில் வேறொரு பாத்திரத்தில் வெல்லத்தை போட்டு கால் கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து வெல்லத்தை கிளறவும்

7.  வெல்லம் கரைந்து ஒரு கொதி வந்ததும், பாகு ஆவதற்கு முன்பதம் வரும் வரை கிளறவும். பிறகு அதை எடுத்து மாவுடன் ஊற்றி கிளறவும்

8.  மாவுடன் பாகு ஒன்றாக கலந்ததும் 10 நிமிடம் வேக விடவும். இடையில் அவ்வபோது கிளறி விடவும். ஏலப்பொடியை சேர்க்கவும்

9.  வாணலியில் ஒரு மேசைக்கரண்டி நெய் ஊற்றி அதில் முந்திரி, திராட்சை, தேங்காய்த் துருவல் போட்டு 3 நிமிடம் வதக்கவும்

10.  வதக்கியவற்றை களியுடன் சேர்த்து கிளறவும். மீதம் இருக்கும் நெய்யை ஊற்றி நன்கு கிளறி விட்டு 5 நிமிடம் கழித்து இறக்கி விடவும். மாவை தண்ணீரில் போட்ட பிறகு அடுப்பை மிதமான தீயில் வைத்து செய்யவும். கிளறும் போது களி சற்று கெட்டியாக இருந்தால், முன்பு எடுத்து வைத்த தண்ணீரை ஊற்றி கிளறிக் கொள்ளவும்

11. திருவாதிரை களி ரெடி. இதனை குக்கரில் வைத்தும் செய்யலாம். வெல்லபாகை ஊற்றி நன்கு கிளறிய பிறகு குக்கரை மூடி 2 நிமிடம் கழித்து வெய்ட் போட்டு, 2 விசில் வந்ததும் இறக்கவும்.  பிறகு வாண்லியில் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து, நன்றாக கிளறவும்.   உதிர்ந்தால் போல் வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.  சூடாகப் சாப்பிட்டால் மிகச் சுவையாக  இருக்கும்.  

12.  இதனை வெண்ணையுடனும், 7 தான் குழம்புடன் உண்ண வேண்டும். சுவையோ சுவை !



களி செய்து நடராஜ பெருமானுக்கு 
நைவேத்தியம் 
ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒரு பலகாரம் செய்து இறைவனுக்கு படைப்பார்கள். மார்கழி திருவாதிரை அன்று களி செய்து நடராஜ பெருமானுக்கு நைவேத்தியம் செய்வார்கள். அந்த வகையில், இந்த திருவாதிரை களி சிறப்புடையது.

Tuesday, December 14, 2010

வடை வகைகள் -பீட்ரூட் வடை

பீட்ரூட் வடை

தேவையான பொருட்கள்

*பீட்ரூட் - 2
*பெரிய வெங்காயம் - 2
*மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
*மிளகாய் தூள் - ஒன்றரை தேக்கரண்டி
*கறிவேப்பிலை - ஒரு கொத்து
*கடலைப் பருப்பு - 250 கிராம்
*உப்பு - ஒரு தேக்கரண்டி
*இஞ்சி - ஒரு துண்டு

செய்முறை

1.  பீட்ரூடை தோல் சீவி துருவி வைத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சியை தோல் சீவி விட்டு பொடியாக நறுக்கவும்.

2.. ஒரு பாத்திரத்தில் கடலைப் பருப்பை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். கிரைண்டரில் ஊற வைத்த கடலைப் பருப்பு போட்டு தண்ணீர் சேர்த்து ஒன்றிரெண்டாக அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.

3.  .அரைத்த மாவுடன் துருவிய பீட்ரூட், நறுக்கின வெங்காயம், இஞ்சி, உப்பு சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள் இரண்டையும் சேர்க்கவும்.

4.  மாவுடன் எல்லாவற்றையும் போட்ட பின்னர் ஒன்றாக கெட்டியாக பிசைந்துக் கொள்ளவும். அரைக்கும் போதே மாவை சற்று கெட்டியாக அரைக்கவும்.

5.  வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வைத்திருக்கும் மாவை ஒரு எலுமிச்சை அளவு உருண்டையாக எடுத்து கையில் அல்லது ப்ளாஸ்டிக் கவரில் வைத்து வடையாக தட்டி எண்ணெய்யில் போடவும்..

  6.  பிறகு ஒரு நிமிடம் கழித்து திருப்பி போட்டு வெந்ததும் எண்ணெய் அடங்கியதும் பொரித்து எடுத்து விடவும்.

7.  சூடான பீட்ரூட் வடை தயார். இந்த மாவுடன் முட்டைக்கோஸ், காரட் சேர்த்தும் செய்யலாம். தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

[சமைக்கும் நேரம் :30 நிமிடம்
பரிமாறும் அளவு :  4 நபர்களுக்கு]

வடை வகைகள் - கோஸ் வடை

கோஸ் வடை


தேவையான பொருட்கள்


*உளுத்தம் பருப்பு-1 கப்
*பொடியாக நறுக்கிய கோஸ்-1 கப்
*இஞ்சி-1 துண்டு
*பச்சை மிளகாய்-2
*கறிவேப்பிலை-சிறிது
*உப்பு-ருசிக்கேற்ப
*எண்ணெய்-தேவையான அளவு.


செய்முறை:

1.  உளுத்தம் பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

2.  பின்னர் நன்கு மெத்தென்று அரைத்து, அதில் மிகவும் பொடியாக நறுக்கிய கோஸ், இஞ்சி, மிளகாய், சீரகம், பெருங்காயம், உப்பு சேர்த்து நன்றாக
 பிசைந்து கொள்ளவும்..

3.  சற்று மெல்லிய வடைகளாக தட்டி காயும் எண்ணெயில் பொரித்தெடுங்கவும்.
.
4.  வெ‌ங்காய‌த்‌தி‌ற்கு ப‌திலாக கோ‌ஸ் சே‌ர்‌த்து செ‌ய்யு‌ம் வடை அருமையாக இரு‌க்கு‌ம்

[சமைக்கும் நேரம் : 30 நிமிடம்
 பரிமாறும் அளவு : 4 நபர்களுக்கு].

வடை வகைகள் - வாழைப்பூ வடை

வாழைப்பூ வடை

இது ஒரு தஞ்சாவூர் ஸ்பெஸல் ஐடெம்.  என் குடும்பத்தினர் அனைவரும் இந்த வடையை மிக்க விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்றாகும்.


தேவையான பொருட்கள்


*வாழைப்பூ - 2 கைப்பிடி அளவு
*பெரிய வெங்காயம் - 1
*கடலைப்பருப்பு - அரை கப்
*காய்ந்த மிளகாய் - 12
*சீரகம் - அரை டீஸ்பூன்
*உப்பு - தேவைக்கேற்ப
*எண்ணெய் - வடைபொரிக்கதேவையானஅளவு
*கறிவேப்பிலை, மல்லித்தழை - சிறிது


செய்முறை:

1. வாழைப்பூ‌வி‌ல் வெ‌ள்ளையாக இரு‌க்கு‌ம் ஒரு நரம்பை எடுத்து‌வி‌ட்டு பொடியாக நறு‌க்‌கி‌க் கொ‌ள்ளவு‌ம்.

2.  வெங்காயத்தையு‌ம் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

3. கடலை‌ப்பருப்பை ஊறவைத்து, கா‌ய்‌ந்த ‌மிளகா‌ய், ‌சீரக‌ம், உ‌ப்பு, சே‌ர்‌த்து கொரகொர‌ப்பாக அரைத்துக்கொள்ளவும்.

4. பருப்புக் கலவை‌யி‌ல் நறு‌க்‌கிய வாழை‌ப் பூ, வெ‌ங்காயம், மல்லித்தழை, கறிவேப்பிலை ஆகியவற்றையும் சேர்த்துப் பிசையவும்.

5.வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, பிசைந்த மாவை சிறு வடைகளாகத் தட்டி, பொன்னிறமாக வேகவை‌த்து எடு‌க்கவு‌ம்.

6.  ருசியான வாழைப்பூ வடை தயா‌ர்


[சமைக்கும் நேரம் : 30 நிமிடம்
 பரிமாறும் அளவு : 4 நபர்களுக்கு]

வடை வகைகள் - மசால் வடை

மசால் வடை




தேவையான பொருட்கள்



*கடலை பருப்பு - 1/4 கிலோ
*பட்டாணி பருப்பு - 1/4 கிலோ
*பெரிய வெங்காயம் - 3 நறுக்கியது
*பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கியது)
*கறிவேப்பிலை - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
*கொத்தமல்லி தழை - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
*சோம்பு - 2 ஸ்பூன்
*இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
*பெருங்காயம் - 1/4 ஸ்பூன்
*எண்ணெய் - வடைபொரிக்கதேவையானஅளவு
*உப்பு -தேவையான அளவு




செய்முறை

  1. கடலைப் பருப்பையும்பட்டாணி பருப்பையும் ஒரு மணி நேரம் தனித்தனியே ஊற வைத்துக் கழுவிக் கொள்ளவும்.
  2. பின்னர் இரு பருப்பையும் ஒன்று இரண்டாக அரைத்துக் கொள்ளவும்.
  3. இதனுடன் வெங்காயம்இஞ்சி பூண்டு விழுதுகறிவேப்பிலை,கொத்தமல்லி தழைசோம்புஉப்புபெருங்காயம் ஆகியவற்றைப் போட்டு பிசைந்து கொள்ளவும்.
  4. சிறு உருண்டையாக எடுத்து தட்டையாக தட்டி வாணலியில் காயவைத்த எண்ணெயில் இட்டு பொரிக்கவும்.
  5. இரண்டு பக்கமும் திருப்பி போட்டு வடை சிவந்தவுடன் எடுத்து வடிதட்டில் இட்டு எண்ணெய் வடிந்தவுடன் சூடாக பரிமாறவும்.


[சமைக்கும் நேரம் : 30 நிமிடம்
 பரிமாறும் அளவு : 6 நபர்களுக்கு]

Monday, December 13, 2010

வடை வகைகள் - மெது வடை

மெது வடை

மெது வடை

தேவையான பொருட்கள்

  • உளுந்து - 1/4 கிலோ
  • அரிசி மாவு - ஸ்பூன்
  • பெரிய வெங்காயம் - நறுக்கியது
  • மிளகு - ஸ்பூன்
  • சீரகம் - ஸ்பூன்
  • கறிவேப்பிலை - சிறிதளவு [பொடியாக நறுக்கியது]
  • கொத்தமல்லி தழை - சிறிதளவு [பொடியாக நறுக்கியது]
  • எண்ணெய் - வடைபொரிக்க தேவையானஅளவு
  • உப்பு -தேவையான அளவு

செய்முறை

1.  அரை மணி நேரம் உளுந்தை தண்ணீரில் ஊற வைத்து, பின்னர் தண்ணீர் சேர்க்காமல் மிகவும் நைஸாக அறைத்து கொள்ளவும். 

2.  இதனுடன் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, மிளகு, சீரகம், அரிசி மாவு, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

3.  ஒரு வாழை இலை அல்லது மொத்தமான பிளாஸ்டிக் கவரில் வடை மாவை தட்டி, வாணலியில் காய வைத்த எண்ணெயில் இட்டு பொரிக்கவும்.

4.  இரு புறமும் திருப்பிப் போட்டு வடை நன்கு சிவந்தவுடன் எடுத்து வடிதட்டில் இட்டு எண்ணெய் வடிந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.

 [சமைக்கும் நேரம் : 30 நிமிடம்
 பரிமாறும் அளவு : 4 நபர்களுக்கு]

வடை வகைகள்

கீரை வடை

கீரை வடை
தேவையான பொருட்கள்:

  • கடலைப் பருப்பு - 100 கிராம்
  • உளுந்து - 100 கிராம்
  • முளைக்கீரை - கட்டு
  • பெரிய வெங்காயம் - நறுக்கியது
  • மிளகு - ஸ்பூன்
  • சீரகம் - ஸ்பூன்
  • பெருங்காயம் - சிறிதளவு
  • கறிவேப்பிலை - சிறிதளவு [பொடியாக நறுக்கியது]
  • கொத்தமல்லி தழை - சிறிதளவு[பொடியாக நறுக்கியத]
  • எண்ணெய் - வடைபொரிக்கதேவையானஅளவு
  • உப்பு - தேவையான அளவு

செய்முறை:




1ஒரு மணி நேரம் கடலைப் பருப்பையும் உளுந்தையும் தண்ணீரில் ஊற வைத்துபின்னர் முக்கால் பதத்துக்கு அறைத்துக் கொள்ளவும்.


2இதனுடன் நறுக்கிய கீரைவெங்காயம்கறிவேப்பிலைகொத்தமல்லி,மிளகுசீரகம்பெருங்காயம்உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
3ஒரு வாழை இலை அல்லது மொத்தமான பிளாஸ்டிக் கவரில் வடை மாவை தட்டிவாணலியில் காய வைத்த எண்ணெயில் இட்டு பொரிக்கவும்.

4
இரு புறமும் திருப்பிப் போட்டு வடை நன்கு சிவந்தவுடன் எடுத்து வடிதட்டில் இட்டு எண்ணெய் வடிந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.

[சமைக்கும் நேரம் : 30 நிமிடம்
 பரிமாறும் அளவு : 4 நபர்களுக்கு]
Related Posts with Thumbnails