கீரை வடை
- கடலைப் பருப்பு - 100 கிராம்
- உளுந்து - 100 கிராம்
- முளைக்கீரை - 1 கட்டு
- பெரிய வெங்காயம் - 1 நறுக்கியது
- மிளகு - 1 ஸ்பூன்
- சீரகம் - 1 ஸ்பூன்
- பெருங்காயம் - சிறிதளவு
- கறிவேப்பிலை - சிறிதளவு [பொடியாக நறுக்கியது]
- கொத்தமல்லி தழை - சிறிதளவு[பொடியாக நறுக்கியத]
- எண்ணெய் - வடைபொரிக்கதேவையானஅளவு
- உப்பு - தேவையான அளவு
செய்முறை:
2. இதனுடன் நறுக்கிய கீரை, வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி,மிளகு, சீரகம், பெருங்காயம், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
1. ஒரு மணி நேரம் கடலைப் பருப்பையும் உளுந்தையும் தண்ணீரில் ஊற வைத்து, பின்னர் முக்கால் பதத்துக்கு அறைத்துக் கொள்ளவும்.
2. இதனுடன் நறுக்கிய கீரை, வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி,மிளகு, சீரகம், பெருங்காயம், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
3. ஒரு வாழை இலை அல்லது மொத்தமான பிளாஸ்டிக் கவரில் வடை மாவை தட்டி, வாணலியில் காய வைத்த எண்ணெயில் இட்டு பொரிக்கவும்.
4. இரு புறமும் திருப்பிப் போட்டு வடை நன்கு சிவந்தவுடன் எடுத்து வடிதட்டில் இட்டு எண்ணெய் வடிந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.
4. இரு புறமும் திருப்பிப் போட்டு வடை நன்கு சிவந்தவுடன் எடுத்து வடிதட்டில் இட்டு எண்ணெய் வடிந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.
[சமைக்கும் நேரம் : 30 நிமிடம்
பரிமாறும் அளவு : 4 நபர்களுக்கு]
No comments:
Post a Comment