தேவையான பொருட்கள்
*பீட்ரூட் - 2
*பெரிய வெங்காயம் - 2
*மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
*மிளகாய் தூள் - ஒன்றரை தேக்கரண்டி
*கறிவேப்பிலை - ஒரு கொத்து
*கடலைப் பருப்பு - 250 கிராம்
*உப்பு - ஒரு தேக்கரண்டி
*இஞ்சி - ஒரு துண்டு
செய்முறை
1. பீட்ரூடை தோல் சீவி துருவி வைத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சியை தோல் சீவி விட்டு பொடியாக நறுக்கவும்.
2.. ஒரு பாத்திரத்தில் கடலைப் பருப்பை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். கிரைண்டரில் ஊற வைத்த கடலைப் பருப்பு போட்டு தண்ணீர் சேர்த்து ஒன்றிரெண்டாக அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
3. .அரைத்த மாவுடன் துருவிய பீட்ரூட், நறுக்கின வெங்காயம், இஞ்சி, உப்பு சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள் இரண்டையும் சேர்க்கவும்.
4. மாவுடன் எல்லாவற்றையும் போட்ட பின்னர் ஒன்றாக கெட்டியாக பிசைந்துக் கொள்ளவும். அரைக்கும் போதே மாவை சற்று கெட்டியாக அரைக்கவும்.
5. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வைத்திருக்கும் மாவை ஒரு எலுமிச்சை அளவு உருண்டையாக எடுத்து கையில் அல்லது ப்ளாஸ்டிக் கவரில் வைத்து வடையாக தட்டி எண்ணெய்யில் போடவும்..
6. பிறகு ஒரு நிமிடம் கழித்து திருப்பி போட்டு வெந்ததும் எண்ணெய் அடங்கியதும் பொரித்து எடுத்து விடவும்.
7. சூடான பீட்ரூட் வடை தயார். இந்த மாவுடன் முட்டைக்கோஸ், காரட் சேர்த்தும் செய்யலாம். தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.
[சமைக்கும் நேரம் :30 நிமிடம்
பரிமாறும் அளவு : 4 நபர்களுக்கு]
No comments:
Post a Comment