Wednesday, November 24, 2010

கூட்டு வகைகள்

1.  காய்கறி தேங்காய்ப் பால் கூட்டு


தேவையானவை:

*நறுக்கின புடலங்காய் - அரை கப்
*நறுக்கின பூசணிக்காய் - அரை கப்
*நறுக்கின வெள்ளரிக்காய் - அரை கப்
*நறுக்கின பீர்க்கங்காய் - அரை கப்
*தேங்காய் - ஒன்று
*பெருங்காயம் - சிறிதளவு
*பச்சை மிளகாய் - 6
*கடுகு - அரை தேக்கரண்டி
*சீரகம் - அரை தேக்கரண்டி
*தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி
*கறிவேப்பிலை - ஒரு கொத்து

செய்முறை:

1.  காய்களை கழுவி, சிறுத் துண்டங்களாக நறுக்கி மேலே குறிப்பிடப்பட்டுள்ள அளவில் எடுத்துக் கொள்ளவும்.

2.  தேங்காயைத் துருவி எடுத்து, நீர்விட்டு அரைத்து கெட்டியான முதல் பால் எடுத்து தனியே வைக்கவும். மீண்டும் நீர்விட்டு அரைத்து பிழிந்து இரண்டு டம்ளர் அளவிற்கு இரண்டாம் பால் எடுத்துக் கொள்ளவும்.

3.  இரண்டாவது எடுத்த தேங்காய் பாலுடன் நறுக்கின காய்கள், கீறிய மிளகாய், பெருங்காயம், தேவையான உப்பு சேர்த்து வேக விடவும்.

4.  காய்கள் நன்கு வெந்த பிறகு முதல் தேங்காய் பாலினை ஊற்றி, ஒரு கொதி வந்ததும் இறக்கி விடவும்.

5.  வாணலியில் தேங்காயெண்ணெய் விட்டு கடுகு, சீரகம் போட்டுப் பொரிந்ததும், கறிவேப்பிலை போட்டு தாளித்து கூட்டில் கொட்டி நன்றாகக் கலக்கி விடவும்.

 [சமைக்கும் நேரம் : 30 நிமிடம்
 பரிமாறும் அளவு :  6 நபர்களுக்கு]


************************************


2.   கத்திரிக்காய் மிளகு கூட்டு

தேவையானவை



*கத்தரிக்காய் - கால் கிலோ
*பயத்தம் பருப்பு - 2 மேசைக்கரண்டி
*நெய் - ஒரு மேசைக்கரண்டி
*உப்பு - தேவையான அளவு
*கடுகு - ஒரு தேக்கரண்டி

*மிளகு பொடி - ஒரு தேக்கரண்டி
*உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி

செய்முறை:

1.  பயத்தம் பருப்பை வெறும் வாணலியில் புரட்டி மஞ்சள் தூள் போட்டு வேக விடவும்.
பருப்பு நன்றாக வெந்து குழைந்தவுடன் கத்திரிக்காய்களை சிறிது துண்டுகளாக நறுக்கி அதில் உப்பு சேர்த்து போட்டு வேகவிடவும்.

2.  காய் நன்றாக வெந்த பின், வாணலியில் நெய் விட்டு காய்ந்த பிறகு கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு சிவகக் விடவும்.

3.  பிறகு அதில் மிளகு பொடியை சேர்த்து, கறிவேப்பிலையையும் கிள்ளிப் போட்டு நன்கு கலந்து, வெந்து கொண்டிருக்கும் கூட்டில் கொட்டிக் கிளறி, இறக்கவும்.

 [சமைக்கும் நேரம் : 30 நிமிடம்
 பரிமாறும் அளவு :  6 நபர்களுக்கு]

***************************************************************

3.  பாகற்காய் கூட்டு

தேவையானவை:

 * பாகற்காய் - அரைக்கிலோ
 *கடலைப்பருப்பு - அரைக்கோப்பை.  பச்சைமிளகாய் - ஐந்து
 *வெங்காயம் - இரண்டு[விருப்பப்பட்டால்].
 *தக்காளி - நான்கு
 *தக்காளி பேஸ்ட் - ஒரு மேசைக்கரண்டி
 *இஞ்சி - ஒரு துண்டு
* பூண்டு - இரண்டு பற்கள் [விருப்பப்பட்டால்]
*தனியாத்தூள் - அரை தேக்கரண்டி
*மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி
*எண்ணெய் - கால்கோப்பை
*கடுகு - ஒரு தேக்கரண்டி
*சீரகம் - ஒரு தேக்கரண்டி
*கறிவேப்பிலை - இரண்டு கொத்து
*உப்புத்தூள் - இரண்டு தேக்கரண்டி

செய்முறை:

1.  கடலைப்பருப்பை ஊறவைத்து வேகவைக்கவும். நெத்தாக வேகவைத்து வடிகட்டி வைக்கவும்.
பாகற்காயை மெல்லிய துண்டுகளாக நறுக்கி ஒரு தேக்கரண்டி உப்புத்தூளை பிசறி அரை மணி நேரம் ஊறவைத்த பிறகு நன்கு கழுவி வடித்து வைக்கவும்.

2.  வெங்காயம், பச்சைமிளகாயை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.
தக்காளியை நொறுங்க நறுக்கி கொள்ளவும்.

3.  இஞ்சி பூண்டை நசுக்கி கொள்ளவும்.
சட்டியில் எண்ணெயை ஊற்றி காயவைத்து கடுகைப் பொரியவிடவும். தொடர்ந்து சீரகம் கறிவேப்பிலையை போட்டு வறுக்கவும்.

4.  பின்பு வெங்காயத்தை கொட்டி சிவக்க வறுத்து தனியே எடுத்துவிடவும். பின்பு பாகற்காயை கொட்டி சிவக்க வறுபட்டவுடன் அதையும் ஒரு தட்டில் கொட்டவும்.

5.  தொடர்ந்து அதே சட்டியில் இஞ்சி பூண்டைப் போட்டு நன்கு வதக்கவும். பிறகு மஞ்சள்தூள், தனியாத்தூளைப் போட்டு அதை தொடர்ந்து பச்சைமிளகாய், மற்றும் தக்காளியைப் போட்டு நன்கு வதக்கவும்.

6.  பிறகு அதில் வேகவைத்துள்ள கடலைப்பருப்பு, தக்காளி பேஸ்ட், வறுத்து வைத்துள்ள வெங்காயம், உப்புத்தூள், பருப்பு வெந்த தண்ணீர் ஒரு கோப்பை ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

7.  பருப்பு முழுவதும் வெந்தவுடன் வறுத்த பாகற்காயைக் கொட்டி நன்கு கலக்கி விட்டு மேலும் ஐந்து நிமிடம் வேகவைத்து இறக்கி விடவும்.

8.  இந்த கூட்டை தேங்காய் எண்ணெயில் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்


[சமைக்கும் நேரம் : 30நிமிடங்கள்
 பரிமாறும் அளவு : 5நபர்களுக்கு]

****************************************

4,  பீர்க்கங்காய் கூட்டு

தேவையானவை:

*பீர்க்கங்காய் -- 2
*பச்சை மிளகாய் -- 2 (நீளமாக அரிந்தது)
*சாம்பார் பொடி -- 11/2 டீஸ்பூன்
*கறிவேப்பிலை -- சிறிது
*கடுகு -- 1 டீஸ்பூன்
*உளுந்தம் பருப்பு -- 1 டீஸ்பூன்
*உப்பு -- ருசிக்கேற்ப
*சிவப்பு மிளகாய் -- 2 
*சீரகம் -- 1/4 டீஸ்பூன்

செய்முறை:

1.  முதலில் பீர்க்கங்காயை சுத்தம் செய்து அரிந்து வைத்துக் கொள்ளவும்.

2.  வாணாலியில் 2 ஸ்பூன் எண்ணைய் விட்டு கடுகு,உளுத்தம்பருப்பு தாளித்து கறிவேப்பிலை போட்டு ஒரு வதக்கு வதக்கி வெட்டி வைத்த பீர்க்கங்காயை போடவும்.

3.  இரண்டு நிமிடம் கழித்து மீண்டும் நன்கு வதக்கி உப்பு, சாம்பார்பொடியை போட்டு 1/2 கப் தண்ணீர் விட்டு நன்கு கொதிக்கவிடவும்.

4.  நிறம் மாறி குழந்தது போல் ஒரு தோற்றம் வரும் அப்போது இறக்கிவிடவும்.

5.  இறக்கிய பின் ருசிக்காக தாளிக்கும் கரண்டியில் சிறிது எண்ணைய் ஊற்றி சிவப்பு மிளகாய், சீரகம் தாளித்து கொட்டவும். 

6.  பீர்க்கங்காய் கூட்டு ரெடி.  சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.

[சமைக்கும் நேரம் : 25 நிமிடம்
 பரிமாறும் அளவு : 4 நபர்களுக்கு]

************************************

5.  புடலங்காய் கூட்டு

தேவையானவை:

*புடலங்காய் - ஒன்று
*தேங்காய் துருவல் - கால் கப்
*கடுகு - ஒரு தேக்கரண்டி
*உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
*மிளகாய் தூள் - அரை மேசைக்கரண்டி
*உப்பு - ஒரு தேக்கரண்டி
*வேக வைத்த பயத்தம் பருப்பு - அரை கப்

செய்முறை:

1.  புடலங்காயை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்

2.  ஒரு பாத்திரத்தில் புடலங்காயை போட்டு அதனுடன் மிளகாய் தூள், உப்பு சேர்த்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி 5 நிமிடம், வேகும் வரை கொதிக்க விடவும்.

3.  வேக வைத்த பருப்புடன் தேங்காய் துருவலை சேர்த்து கிளறி கொள்ளவும்

4.  பருப்பு கலவையை புடலங்காயுடன் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி வைத்து விடவும்.

5.  வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, போட்டு வெடித்ததும் உளுத்தம் பருப்பை போட்டு தாளிக்கவும்

6.  தாளித்தவற்றை கூட்டுடன் சேர்த்து கிளறி விடவும்

7.  சுவையான எளிதில் செய்யக்கூடிய புடலங்காய் கூட்டு ரெடி.

[சமைக்கும் நேரம் : 20 நிமிடம்
 பரிமாறும் அளவு :  4 நபர்களுக்கு]

****************************************************************************

6.  வாழைத்தண்டு கூட்டு

தேவையானவை:

 *வாழைத்தண்டு - 3 கப் (சுத்தம் செய்து பொடியாக நறுக்கியது)
*கடலைப் பருப்பு - 1 கப்
*மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
*உப்பு

தாளிக்க :

*கடுகு - 1/2 தேக்கரண்டி
*சீரகம் - 1/2 தேக்கரண்டி
*உளுந்து - 1/2 தேக்கரண்டி
*கடலைப் பருப்பு - 1/2 தேக்கரண்டி
*மிளகாய் வற்றல் - 4
*கறிவேப்பிலை - கொஞ்சம்
*எண்ணெய் - 2 தேக்கரண்டி

செய்முறை:

1.  வாழைத்தண்டு, கடலைப் பருப்பு இரண்டையும் சிறிது தண்ணீர் விட்டு குக்கரில் வேக வைத்து எடுக்கவும்.

2.  பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம், கடலைப்பருப்பு, உளுந்து, மிளகாய் வற்றல் சேர்த்து தாளித்து, கறிவேப்பிலை போட்டு எடுத்து கூட்டில் சேர்க்கவும்.

3.  இத்துடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கொதிக்கவிட்டு எடுக்கவும்.

குறிப்பு:
விரும்பினால் கடைசியாக சிறிது தேங்காய் துருவல் சேர்த்து ஒரு கொதி வந்ததும் எடுக்கலாம்.

[சமைக்கும் நேரம் : 30 நிமிடம்
 பரிமாறும் அளவு :  4 நபர்களுக்கு]

*******************************************

Tuesday, November 23, 2010

கறி / பொரியல் வகைகள்

1.  உருளை பசலை கறி

தேவையானவை:

*பசலைக்கீரை - 200 கிராம்
*உருளைக்கிழங்கு - கால் கிலோ
*இஞ்சி - சிறிய துண்டு
*பூண்டு - 6 பல்
*மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
*பச்சைமிளகாய் - 2
*கொத்தமல்லித்தழை - சிறிது
*நெய் - 2 மேசைக்கரண்டி
*உப்பு - 2 தேக்கரண்டி

செய்முறை:

1.  உருளைக்கிழங்கினைத் தோலுரித்து நான்காக நறுக்கிக் கொள்ளவும். கீரையை கழுவி நறுக்கிக் கொள்ளவும்.

2.  ஒரு வாணலியில் நெய் விட்டு காய்ந்ததும் உருளைக்கிழங்கு துண்டுகளைப் போட்டு வறுத்து எடுக்கவும்.

3.  இஞ்சி, பூண்டு மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் நெய் விட்டு அரைத்து வைத்துள்ள மசாலாவுடன் பச்சைமிளகாயை முழுதாகப் போட்டு வதக்கிக் கொள்ளவும்.

4.  பிறகு அதில் நறுக்கி வைத்துள்ள கீரைகளைப் போட்டு வதக்கவும்.
வதங்கியதும், உருளைக்கிழங்குத் துண்டுகள், உப்பு சேர்த்து, சிறிது தண்ணீரைத் தெளித்து, மூடி வைத்து வேகவிடவும்.

5.  தீயைக் குறைவாக வைத்துக் கொள்ளவும். நன்கு வெந்ததும் கொத்தமல்லித்தழை சிறிது தூவி இறக்கவும்.

  [சமைக்கும் நேரம் :  25 நிமிடம்
  பரிமாறும் அளவு :   4 நபர்களுக்கு]

************************************************

2.  ஸ்டஃப்டு வெண்டைக்காய் கறி

தேவையானவை:

*வெண்டைக்காய் - 250 கிராம்
*கடலைமாவு - நான்கு மேசைக்கரண்டி
*துருவிய தேங்காய் - கொஞ்சம்
*பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - கொஞ்சம்
*பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - இரண்டு
*பூண்டு - 2 பல்
*பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒன்று
*பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு துண்டு
*தனியாப்பொடி - ஒரு மேசைக்கரண்டி
*எண்ணெய் - 6 மேசைக்கரண்டி
*சீரகப்பொடி - ஒரு தேக்கரண்டி
*மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி
*மிளகாய்ப் பொடி - ஒரு தேக்கரண்டி
*உப்பு - தேவையான அளவு

செய்முறை:

1.  வெண்டைக்காய் காம்பை நறுக்கிய பிறகு காயைக் கீறி வைத்துக் கொள்ள வேண்டும். சற்று நீளமாக ஒரு பக்கமாக கீறவும்.

2.  பூண்டு, தேங்காய், கொத்தமல்லி, இஞ்சி, மிளகாய், இவற்றை அரைத்து கடலை மாவுடன் நன்றாகக் கலக்கவும்.

3.  உப்பு, மஞ்சள் பொடி, சீரகப்பொடி, மிளகாய்ப்பொடி, உப்பு முதலியவற்றையும் சேர்த்து கலந்து விடவும்.

4. வெண்டைக்காய்குள் இக்கலவையை பிளந்துவிடாத படி அடைக்கவும். விதைகள் உள்ளே முற்றியிருந்தால் எடுத்துவிடலாம்.

5.  எண்ணெய் விட்டு வெண்டைக்காயைப் போட்டு பொன்னிறமாக வதக்கி எடுக்கவும். கரகரப்பாக இருக்கும்படியும் எடுக்கலாம்.  

 [சமைக்கும் நேரம் :  25 நிமிடம்
 பரிமாறும் அளவு :   4 நபர்களுக்கு]

************************************************************

3.  வாழைக்காய் பொடிமாஸ்

வாழைக்காய் பொடிமாஸ்


தேவையானவை:

*வாழைக்காய் - 4
*உளுத்தம் பருப்பு - 25 கிராம்
*மிளகாய் - 8
*நெய் - 100 கிராம்
*பெருங்காயம் - சிறிதளவு
*துருவிய தேங்காய் - 150 கிராம்
*கடலைப் பருப்பு - 50 கிராம்
*வேகவைத்த துவரம் பருப்பு - சிறிதளவு
*உப்பு - தேவைகேற்ப

செய்முறை:

1.  வாழைக்காய்களை சுத்தமாகக் கழுவி துடைத்து விட்டு எண்ணெயைத் தடவி, நெருப்பில் காட்டி நன்றாக சுட்டு எடுத்து வைக்கவும்.

2.  வாணலியில் நெய்யை விட்டு மிளகாய், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு போட்டு வறுத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

3. பிறகு வாழைக்காயின் தோலை நீக்கி, ஒரு பாத்திரத்தில் பிசைந்து அதில் உப்பை சேர்க்கவும்.

4.  இப்பொழுது தாளித்து அரைத்த சாமான்களை வாழைக்காய் பொடியுடன் சேர்த்துக் கொள்ளவும்.

5.  இறுதியில் தேங்காய்த் துருவலையும், வேக வைத்த துவரம் பருப்பையும் வாழைக்காய் பொடியுடன் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.

 [சமைக்கும் நேரம் :  25 நிமிடம்
  பரிமாறும் அளவு :   4 நபர்களுக்கு]

***********************************************

4.  சேப்பங்கிழங்கு கறி-1

தேவையானவை:

*சேப்பங்கிழங்கு - 200 கிராம்
*புளி - எலுமிச்சை அளவு
*கடுகு - ஒரு தேக்கரண்டி
*உளுத்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி
*மிளகாய் - 4
*பெருங்காயம் - ஒரு பட்டாணி அளவு
*உப்பு - 2 மேசைக்கரண்டி

செய்முறை:

1.  சேப்பங்கிழங்கை தண்ணீர் விட்டு வேக வைக்கவும். நன்கு வெந்ததும் இறக்கித் தோலை உரித்துக் கொள்ளவும்.

2.  ஒரு பாத்திரத்தில் சிறிது நீர் எடுத்துக் கொண்டு அதில் புளியுடன் இரண்டு மேசைக்கரண்டி உப்புச் சேர்த்துப் போட்டு ஊறவைக்கவும்.

3.  வாணலியை அடுப்பில் வைத்து, ஒரு கரண்டி எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகாய், பெருங்காயம் போட்டு நன்கு சிவக்க வறுக்கவும்.

4.  பிறகு அதில் உரித்து வைத்துள்ள சேப்பங்கிழங்கினைப் போட்டு, புளியைக் கரைத்து விட்டு கொதிக்க விடவும்.

5. புளி நன்கு கொதித்து சுண்டி வரும் சமயம் சிறிது எண்ணெய் விட்டு நன்கு கிளறவும்.

6. காய் நன்கு வதங்கி வறுபடவும் வேண்டும். அப்போதுதான் சுவையாக இருக்கும்.

[சமைக்கும் நேரம் : 25 நிமிடம்
 பரிமாறும் அளவு :  4 நபர்களுக்கு]

******************************************

5.  சேப்பங்கிழங்கு ரோஸ்டு

தேவையானவை:

*சேப்பங்கிழங்கு - 4 பெரியது
*வெங்காயம் - ஒன்று [விருப்பமானால்]
*பூண்டு - 2 அல்லது 3 பல் [விருப்பமானால்]
*மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
*மிளகாய்தூள் - ஒரு தேக்கரண்டி
*தனியாத்தூள் - ஒரு தேக்கரண்டி
*உப்பு - தேவைக்கு

 தாளிக்க:
*கடுகு - கால் தேக்கரண்டி
*கடலைபருப்பு - அரை தேக்கரண்டி
*கறிவேப்பிலை - சிறிது
*எண்ணெய் - தேவையான அள

செய்முறை:

1.  சேப்பங்கிழங்கை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். வெங்காயத்தை நறுக்கி கொள்ளவும். பூண்டை தட்டி வைத்துக் கொள்ளவும்

2.  கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கடலைபருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். அதனுடன் தட்டி வைத்துள்ள பூண்டை சேர்த்து வதக்கவும்.

3.  பின் நறுக்கின வெங்காயம் சேர்த்து அதனுடன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்

4.  வெங்காயம் நன்கு வதங்கியதும், நறுக்கி வைத்துள்ள சேப்பங்கிழங்கை சேர்க்கவும்.

5.  தேவையான அளவு மிளகாய்தூள், தனியாதூள், சிறிது உப்பு சேர்த்து நன்கு கிளறவும். அதனுடன் 2 அல்லது 3 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து கிளறவும்

6.  கடாயை மூடி அடுப்பை சிறு தீயில் 5 முதல் 10 நிமிடங்கள் வைக்கவும். இடையிடையே கிளறி விடவும்

7.  காய் நன்கு சிவந்ததும் உப்பு, காரம் சரி பார்த்து, சுருள கிளறி இறக்கவும்

8.  சுவையான சேப்பங்கிழங்கு பொரியல் தயார். இது, சாம்பார் சாதம், கூட்டு, ரசம் சாதம், தயிர் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

[சமைக்கும் நேரம் : 30 நிமிடம்
 பரிமாறும் அளவு : 4 நபர்களுக்கு]

***************************************************************

6.  பாகற்காய் ஸ்டஃப் கறி

தேவையானவை:

*பாகற்காய் - 8
*வெங்காய விழுது - ஒரு கப்
*பொட்டுக்கடலை மாவு - கால் கப்
*தயிர் - ஒரு கப்
*எண்ணெய் - ஒன்றரை தேக்கரண்டி
*மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
*புளிக்கரைச்சல் - 2 மேசைக்கரண்டி
*இஞ்சி, பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
*மிளகாய்த்தூள் - அரை தேக்கரண்டி
*கரம்மசாலாத்தூள் - அரை தேக்கரண்டி
*மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி
*உப்பு - தேவைகேற்ப

செய்முறை:

1.  பாகற்காய் மேல் தோலினை சீவி விட்டு நீளவாக்கில் கீறி உள்ளே உள்ள விதைகளையும், சோற்றினையும் நீக்கி வைக்கவும்.

2.  பாகற்காய் மேல் மஞ்சள் தூள், உப்பு தடவி வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
வெங்காய விழுது, பொட்டுக்கடலை மாவு, உப்பு, புளிக்கரைச்சல் இவற்றை சேர்த்து பிசறி பாகற்காயின் உள்ளே வைத்து நிரப்பவும்.

3.  ஒரு பாத்திரத்தில் தயிரை ஊற்றி அதில் இஞ்சி, பூண்டு விழுது மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், மிளகுத்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து கலக்கி அதில் பாகற்காய்களைப் போட்டு சிறிது நேரம் ஊற வைக்கவும்.

4.  வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பாகற்காய்களை அதில் போட்டு மிதமான தீயில் வைத்து முழுமையாக வெந்ததும் பொரித்து எடுக்கவும்.


[சமைக்கும் நேரம் : 30 நிமிடங்க
பரிமாறும் அளவு : 8 நபர்களுக்கு]

*************************************************************

7.  உருளைக்கிழங்கு கறி



உருளைக்கிழங்கு கறி


தேவையானவை:

*பெரிய உருளைக்கிழங்கு - கால் கிலோ
*பெரிய வெங்காயம் - 2
*நாட்டுத் தக்காளி - 2
*மஞ்சள்பொடி - கால் தேக்கரண்டி
*மிளகாய்த்தூள் - அரைத் தேக்கரண்டி
*பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை
*உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
*கடலை பருப்பு - ஒரு தேக்கரண்டி
*முந்திரிப்பருப்பு - ஒரு தேக்கரண்டி
*எண்ணெய் - அரை மேசைக்கரண்டி
*கடுகு - அரைத் தேக்கரண்டி
*நெய் - ஒரு தேக்கரண்டி
*கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

1.  கால் கிலோ பெரிய உருளைக்கிழங்கினை அப்படியே முழுசாக குக்கரில் போட்டு வேகவிடவும். வெந்தபின் தோலை உரித்து பெரிய துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.

2.  தக்காளியை பொடியாக நறுக்கி அத்துடன் கால் தேக்கரண்டி மஞ்சள்தூள், அரைத் தேக்கரண்டி மிளகாய்ப்பொடி, முக்கால் தேக்கரண்டி உப்பு, ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள் இவைகளைப் போட்டு தயாராக வைத்துக் கொள்ளவும்.

3.  பெரிய வெங்காயத்தை நீளவாட்டில் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு அலுமினிய வாணலியை அடுப்பில் வைத்து அதில் அரைகரண்டி நல்லெண்ணெயை விட்டு காய விடவும்.

4.  காய்ந்தபின் அரை தேக்கரண்டி கடுகைப் போட்டு வெடிக்கவிடவும். பிறகு ஒரு தேக்கரண்டி உளுத்தம்பருப்பு, ஒரு தேக்கரண்டி கடலைப்பருப்பு, ஒரு மேசைக்கரண்டி முந்திரிப்பருப்பு ஆகியவற்றைப் போட்டு சிவக்க வறுக்கவும்.

5.  பிறகு அதிலேயே நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன் தக்காளி கலவையை அதனுடன் சேர்த்து வதக்க வேண்டும்.

6.  தக்காளி நன்கு வதங்கி தொக்கு மாதிரி ஆனபின்பு அதில் கறிவேப்பிலையை பிய்த்துப் போட்டு அதனுடன் நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கினையும் சேர்த்து நன்றாக கிளறவும்.

7.  காயில் உப்பு, காரம் ஒட்டிக்கொண்ட பின் சிறிது நேரம் கிளறி விட்டு இறக்கிவிடவும். இறக்கிய பிறகு அதில் ஒரு தேக்கரண்டி நெய் விட்டால் அது உருகி வாசனையாக இருக்கும்.

[சமைக்கும் நேரம் : 30 நிமிடங்கள்
 பரிமாறும் அளவு :   4 நபர்களுக்கு]

**************************************************************

8.காலிஃபிளவர் உருளைக்கிழங்கு கறி

காலிஃபிளவர் உருளைக்கிழங்கு கறி


தேவையானவை:

*உருளைக்கிழங்கு - 200 கிராம்
*காலிஃபிளவர் - 200 கிராம்
*வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
*பெரிய வெங்காயம் - ஒன்று
*மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
*மிளகாய்த்தூள் - அரை தேக்கரண்டி
*தக்காளி - 4
*பால் - 100 மில்லி
*கொத்தமல்லி - ஒரு சிறிய கட்டு
*உப்பு - தேவைகேற்ப
*எண்ணெய் - 4 மேசைக்கரண்டி

செய்முறை:

1.  காலிஃபிளவரை வெந்நீரில் போட்டு சிறிது நேரம் கழித்து எடுக்கவும்.
உருளைக்கிழங்கு, காலிஃபிளவர், தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

2.  பாதி அளவு தக்காளியை எடுத்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.

3.  வாணலியில் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் வெந்தயத்தை போட்டு மிதமான தீயில் வைத்து

4.  பின்னர் சிறிது நேரம் கழித்து வெங்காயத்தை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
அதனுடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் இவற்றை சேர்த்து 2 நிமிடம் வைக்கவும்.

5.  பின்னர் அரைத்து வைத்த தக்காளியை அதில் சேர்த்துக் கலக்கி உருளைக்கிழங்கு, காலிஃபிளவர், தக்காளி, பால், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.

6.  உருளைக்கிழங்கு நன்கு வெந்ததும் அதில் கொத்தமல்லியை மேலே தூவி இறக்கவும்.

 [சமைக்கும் நேரம் : 30 நிமிடங்கள்
 பரிமாறும் அளவு :   2 நபர்களுக்கு]

********************************************************************

9.  உருளைக்கிழங்கு பொடிமாஸ்

தேவையானவை:

*உருளைக்கிழங்கு - 250 கிராம்
*உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
*வெங்காயம் - 100 கிராம்
*பச்சைமிளகாய் - 3
*கடுகு - ஒரு தேக்கரண்டி
*கறிவேப்பிலை - சிறிது
*எண்ணெய் - அரை குழிக்கரண்டி
*உப்பு - தேவையான அளவு

செய்முறை:

1. உருளைக்கிழங்கை சிறிது தண்ணீர் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.

2.  பிறகு எடுத்து தோல் உரித்து, உதிர்த்து விட்டு அதனுடன் உப்புத் தூள் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

3.  வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பு, கடுகு தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

4.  வெங்காயம் வதங்கியவுடன் உதிர்த்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கைப் போட்டு கிளறி இறக்கவும்.


[சமைக்கும் நேரம் : 25 நிமிடம்
பரிமாறும் அளவு:  4 நபர்களுக்கு]        

*********************************************************************

10.  கீரை தயிர் கறி

தேவையானவை:

*கீரை - ஒரு கட்டு
*தயிர் - ஒரு கப்
*கிராம்பு - 3
*பூண்டு - 3
*மிளகாய்வற்றல் - 3
*கறிவேப்பிலை - 2 கொத்து
*வெந்தயம் - சிறிது
*வெங்காயம் - 2
*பச்சைமிளகாய் - 3
*இஞ்சி - சிறிது
*தக்காளி - 2
*மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
*எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
*கடுகு - 2 தேக்கரண்டி

செய்முறை:

1. ஏதேனும் ஒரு கீரை வகையை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். கீரையை கழுவி பொடி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

2.  பூண்டு, பச்சைமிளகாய், வெங்காயம், இஞ்சி, தக்காளி, அனைத்தையும் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

3.  வாணலியில் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு போட்டு தாளித்து அதில் பூண்டு, மிளகாய்வற்றல், கறிவேப்பிலை மற்றும் வெந்தயம் போட்டு மிதமான தீயில் வதக்கவும்.

4.  பிறகு வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி சேர்த்து சிவப்பு நிறம் வரும் வரை வதக்கி அதனுடன் தக்காளி, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.

5.  இறுதியில் கீரையை சேர்த்து நன்கு வதக்கி சிறிது நேரம் கழித்து இறக்கி அதனுடன் தயிர் சேர்த்து மறுபடியும் அடுப்பில் வைத்து ஐந்து நிமிடம் வதக்கவும். பின்னர் அதை எடுத்து பரிமாறவும்


 [சமைக்கும் நேரம் : 25 நிமிடங்கள்
 பரிமாறும் அளவு : 4 நபர்களுக்கு ]

******************************************************************

11.  பலாக்கொட்டைக்கறி

பலாக்கொட்டைக்கறி
தேவையானவை:

*தேங்காய்த் துருவல் - 2 கப்
*பலாக்கொட்டை - கால் கிலோ
*முருங்கைக்காய் - 2
*துவரம்பருப்பு - ஒரு கப்
*பச்சைமிளகாய் - 5
*மஞ்சள்பொடி - கால் தேக்கரண்டி
*மிளகாய்பொடி - ஒரு மேசைக்கரண்டி
*புளி - எலுமிச்சை அளவு
*கொத்தமல்லி விதை - ஒன்றரை மேசைக்கரண்டி
*கடுகு - ஒரு தேக்கரண்டி
*சின்ன வெங்காயம் - 4
*கறிவேப்பிலை - ஒரு கொத்து
*எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

செய்முறை:

1.  பலாக்கொட்டைகளை தோல் நீக்கிக் கொள்ளவும். தேவையெனில் சற்றுப் பெரியத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளலாம்.

2.  புளியை ஊற வைத்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.

3.  ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் தேங்காய்த் துருவல், மல்லி விதை, கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

4.  ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் எடுத்துக் கொண்டு பலாக்கொட்டைகளை அதில் போடவும்.
அதனுடன் துவரம்பருப்பு, பச்சைமிளகாய், மிளகாய்பொடி, மஞ்சள்பொடி, உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி பிறகு பாத்திரத்தை மூடி வேகவிடவும்.

5.  மூன்று நிமிடங்களுக்கு பிறகு முருங்கைக்காய் மற்றும் புளிச்சாறு ஆகியவற்றை கல்ந்து கொதிக்கவிடவும்.

6.  ஐந்து நிமிடங்கள் வெந்தவுடன் அரைத்து வைத்துள்ள மசாலாவினைச் சேர்த்துக் கிளறவும்.
முருங்கைக்காய் நன்றாக வேகும் வரை அடுப்பில் வைத்து அவ்வபோது கிளறிக் கொண்டே இருக்கவும்.

7.  வெந்ததும் இறக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு தாளித்து, பிறகு அதிலேயே நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

8. தாளித்ததை பலாக்கொட்டை மசாலாவில் கொட்டி கிளறிவிட்டுக் கொள்ளவும்.

9.  சூடாக பரிமாறவும்.



[சமைக்கும் நேரம் : 30 நிமிடங்கள்
 பரிமாறும் அளவு :   4 நபர்களுக்கு]

****************************************************************

12.  ஸ்ட்ஃப்டு கத்தரிக்காய் கறி


பிஞ்சு கத்தரிக்காய்

தேவையானவை:

*பிஞ்சு கத்தரிக்காய் - 1/2 கிலோ,
*காய்ந்த மிளகாய் - 10,
*உளுத்தம் பருப்பு - 1 கைப்பிடி,
*தனியா - 2 மேசைக்கரண்டி,
*பொட்டுக்கடலை - 2 மேசைக்கரண்டி,
*பெருங்காயம் - சிறிது,
*புளி - ஒரு நெல்லிக்காய் அளவு,
*உப்பு - தேவையான அளவு,
*எண்ணெய் - 1/4 கப்

செய்முறை:

1.  கத்தரிக்காயை நான்காக பிளந்து (காம்பு பக்கம் வெட்டக் கூடாது) தண்ணீரில் போட்டு வைக்கவும்.

2.  1 ஸ்பூன் எண்ணெயில் மிளகாய், உளுத்தம் பருப்பு, தனியா, பொட்டுக்கடலை, பெருங்காயம் சிவக்க வறுத்து, உப்பு சேர்த்து கரகரப்பாக பொடிக்கவும்.

3. கத்தரிக்காயை தண்ணீரை வடித்து விட்டு, பொடித்த பொடியை கத்தரிக்காய் உடையாமல் திணித்து வைக்கவும். [மீதி பொடியை தனியே வைக்கவும்.]

4.  வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் திணித்த கத்தரிக்காயை போட்டு நன்கு வதக்கவும்.
புளியை 1/4 டம்ளர் தண்ணீரில் கெட்டியாக கரைத்து அவ்வப்போது தெளித்து மூடி வைக்கவும்.
கத்தரிக்காய் நன்கு வெந்தவுடன் மீதி பொடியை தூவி நன்கு கிளறி இறக்கவும்


[சமைக்கும் நேரம் : 20 நிமிடங்கள்
பரிமாறும் அளவு : 4 நபர்களுக்கு]

*********************************************************
13.  அவியல்

தேவையானவை:

வாழைக்காய் - 1
வெள்ளை பூசணிக்காய் - 1 துண்டு
வெள்ளரிக்காய் - 1 துண்டு
கத்திரிக்காய் - 1
கொத்தவரங்காய் - 10
முருங்கைக்காய் - 1
சேனை - 1 துண்டு
புடலங்காய் - 10 செ.மீ துண்டு
மாங்காய் - 1/2 பாகம்
உப்பு - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து

அரைக்க:

தேங்காய் துருவல் - 1 கப்
சீரகம் - 1 தேக்கரண்டி
இஞ்சி - 1 சிறிய் துண்டு
பச்சைமிளகாய் - 5
மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி

செய்முறை:

1.  எல்லா காய்களையும் 2"நீளத்தில் விரலளவு தடிமனில் நறுக்கவும். சேனையை தனியே வேக வைத்து தண்ணீரை வடிகட்டவும்.

2.  வாணலியில் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை தாளித்து காய்களை சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்.
உப்பு, 1/2 கப் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து வேக விடவும். அரைக்க வேண்டியவற்றை கரகரப்பாக அரைக்கவும்.

3.  காய் வெந்தது தண்ணீர் பாதியாக வற்றியதும் வேகவைத்த சேனை அரைத்த கலவை போட்டு 3 நிமிடம் கிளறவும்.

4.  மீதமுள்ள தேங்காய் எண்ணெய் மேலே ஊற்றி ஒரு கிளறு கிளறி இறக்கவும்.

குறிப்பு:

மாங்காய் கிடைக்கவில்லையென்றால் காய் வெந்து தேங்காய் கலவை சேர்க்கும் போது தயிர் 2 மேசைக்கரண்டி தயிர் சேர்க்கவும். மாங்காயின் புளிப்பிற்கு ஏற்ப அளவை கூட்ட குறைக்க செய்யலாம். கல்யாண வீடுகளில் வைக்கும் இந்த அவியல் தனி சுவைதான்.

 [சமைக்கும் நேரம் : 45 நிமிடம்
 பரிமாறும் அளவு 4 நபர்களுக்கு]

**********************************************************

14.  பீன்ஸ் பருப்பு உசிலி

தேவையானப்பொருட்கள்:

*பீன்ஸ் - 2" அளவிற்கு நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது - ஒரு கிண்ணம்
*துவரம் பருப்பு - 1/2 கப்
*கடலைப் பருப்பு - 1/2 கப்
*காய்ந்த மிளகாய் - 2 முதல் 3 வரை
*மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
*சாம்பார் தூள் - 1 டீஸ்பூன்
*பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை
*தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன் (விருப்பமானால்)
*எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
*கடுகு - 1 டீஸ்பூன்
*கறிவேப்பிலை - சிறிது
*உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

1.  துவரம் பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.

2.  பின் அதை நன்றாகக் களைந்து, நீரை வடிகட்டி விட்டு, அத்துடன் மிளகாய், பெருங்காய்த்தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து கொரகொரப்பாக[(மசால் வடைக்கு அரைப்பது போல்] அரைத்து எடுக்கவும்.

3.  அரைத்த விழுதை இட்லி தட்டில் வைத்து ஆவியில் 7 முதல் 10 நிமிடங்கள் வரை வேக விட்டு எடுத்து ஆற விடவும். ஆறிய பின் நன்றாக உதிர்த்துக் கொள்ளவும்.

4.  நறுக்கி வைத்துள்ள பீன்ஸை ஒரு பாத்திரத்தில் போட்டு அத்துடன் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், சிறிது உப்பு போட்டு, சிறிது நீரைத் தெளித்து வேக விட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும்.

5.  ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலையைச் சேர்க்கவும். அத்துடன் உதிர்த்து வைத்துள்ள பருப்பைப் போட்டு சிறிது நேரம் கிளறி விடவும்.

6.  பின் அதில் வேக வைத்தக் காயைப் போட்டு ஓரிரு நிமிடங்கள் நன்றாகக் கிளறவும். கடைசியில் தேங்காய்த்துருவலைப் போட்டு மீண்டும் சில நிமிடங்கள் கிளறி இறக்கி வைக்கவும்.

7.  இந்த உசிலி மோர்குழம்புடன் சாப்பிடவும்.  மிகச் சுவையாக இருக்கும்.

குறிப்பு:

இதேபோல், வாழைப்பூ, கொத்தவரங்காய், கோஸ் வைத்தும்,  உசிலி செய்யலாம். மிக ருசியாக இருக்கும்.


[சமைக்கும் நேரம் : 45 நிமிடம்
பரிமாறும் அளவு : 4 நபர்களுக்கு]

***************************************************************

Saturday, November 20, 2010

ரசம் வகைகள்

இஞ்சி-ஜீரா ரசம்

இஞ்சி-ஜீரா ரசம்
தேவையானவை:

*துவரம் பருப்பு - கால் படி
*ரசப்பொடி - ஒரு தேக்கரண்டி
*புளி - 2 கொட்டைப்பாக்கு அளவு
*சிறிய தக்காளி - ஒன்று
*கடுகு - கால் தேக்கரண்டி
*பெருங்காயம் - ஒரு துண்டு
*இஞ்சி - ஒரு துண்டு
*ஜீரா - ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லி - வாசனைக்கு
*கறிவேப்பிலை - வாசனைக்கு
*உப்பு - ஒரு தேக்கரண்வு

செய்முறை:

1.  இந்தச் சாற்றினை மேலாக இறுத்து வைத்துக் கொண்டால் சுண்ணாம்பு அடியில் தங்கிவிடும்.

2.  தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

3.  பருப்பை அரை படி தண்ணீரில் குழைய வேக வைத்துக் கொள்ளவும்.

4.  வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளித்து வைக்கவும்.

5. புளியை தண்ணீரில் ஊறவைத்து, ஒரு பாத்திரத்தில் புளிக்கரைச்சலாக எடுத்துக் கொள்ளவும். புளிக்கரைச்சலுடன் உப்பு, பெருங்காயம், நறுக்கிய தக்காளி, ரசப்பொடி, ஜீரகப் பொடி போட்டு 8 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.

6.  பிறகு கொதித்தவுடன் வேகவைத்த பருப்பை போட்டு நுரைத்து வந்தவுடன் கறிவேப்பிலை, கொத்தமல்லி போட்டு தாளித்த கடுகையும் போட்டு இறக்கிவைத்து இஞ்சி சாற்றை சேர்க்கவும்.
விருப்பமானால் அரை தேக்கரண்டி சீரகமும் தாளித்து சேர்க்கலாம்

*******************************************

2.  அரச்சுவிட்ட ரசம்

தேவையானவை:

*பருப்பு தண்ணீர் (அ) அரிசி களைந்த நீர் - 3 கப்
*தக்காளி - ஒன்று
*புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
*சீரகம் - ஒரு தேக்கரண்டி
*மிளகு - ஒரு தேக்கரண்டி
*பூண்டு - 4 பல்
*மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
*கடுகு, பெருங்காயம், கருவேப்பிலை, காய்ந்த மிளகாய், எண்ணெய் - தாளிக்க
*கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
*உப்பு - தேவையான அளவு

செய்முறை:

1.  பருப்பு தண்ணீர் இல்லையென்றால் அரிசி களைந்து இரண்டாவதாக

2.  கழுவிய நீரில் புளியை ஊற வைக்கவும். சீரகம், பூண்டு மற்றும் மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

3.  தக்காளியை சுடு நீரில் போட்டு தோலுரித்து நசுக்கி வைத்து கொள்ளவும். எண்ணெயை காய வைத்து தாளிக்க கூறியுள்ளதை தாளிக்கவும்

4.  தக்காளி சேர்த்து வதக்கி, அரைத்து வைத்துள்ள பொடியையும் சேர்த்து ஒரு வதக்கு வதக்கவும்

5.  புளி கரைசலை சேர்த்து உப்பு மற்றும் மஞ்சள் தூளும் சேர்த்து கொதிக்க விடவும்

6. நுரைகட்டி வரும் போது அடுப்பை அணைத்து விடவும்
இறக்கி வைத்து மேலே கொத்தமல்லி தூவி பரிமாறவும்


******************************************

2.தேங்காய் பால் ரசம்

தேவையானவை:

*தேங்காய் துருவல் - ஒரு கப்
*சின்ன வெங்காயம் - 25
*புளி - சிறிய எலுமிச்சை அளவு
*வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
*மிளகாய் வற்றல் - 9
*எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
*கறிவேப்பிலை - ஒரு கொத்து
*கல் உப்பு - ஒரு தேக்கரண்டி
*தேங்காய் துருவல் - ஒரு கப்
*சின்ன வெங்காயம் - 25
*புளி - சிறிய எலுமிச்சை அளவு
*வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
*மிளகாய் வற்றல் - 9
*எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
*கறிவேப்பிலை - ஒரு கொத்து
*கல் உப்பு - ஒரு தேக்கரண்டி

செய்முறை:


1. ஒரு பாத்திரத்தில் புளியை போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் ஊற வைத்து கரைத்து ஒரு கப் அளவிற்கு புளிக்கரைசல் எடுத்துக் கொள்ளவும்

2.  வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிளகாய் வற்றலை போட்டு 30 நொடி வறுத்துக் கொள்ளவும்

3.  அதனுடன் வெந்தயம், சின்ன வெங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு 2 நிமிடம் வதக்கவும்.

4.  வெங்காயம் வதங்கியதும் கரைத்து வைத்திருக்கும் புளிக்கரைச்சல் ஊற்றி ஒரு கொதி வந்ததும், உப்பு போட்டு கலக்கி விடவும்

5.  பிறகு ஒரு தட்டை போட்டு மூடி வைத்து புளி வாசனை போகும் வரை 5 நிமிடம் கொதிக்க விடவும்.

6. புளித்தண்ணீர் கொதிக்கும் நேரத்தில் துருவிய தேங்காயை மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து பிழிந்து 1 1/2 கப் அளவு பால் எடுக்கவும். பிழிந்து எடுத்த பாலை சக்கையில்லாமல் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்

7.  5 நிமிடம் கொதித்த பிறகு திறந்து தயாராக எடுத்து வைத்திருக்கும் தேங்காய் பாலை ஊற்றி கொதி வரும் முன் இறக்கி விடவும். அதிகம் கொதிக்க விடக் கூடாது, பால் திரிந்து விடும்

8.  சுவையான தேங்காய் பால் ரசம் தயார்.

******************************


3.கண்டந்திப்பிலி ரசம்

தேவையானவை:

*கண்டந்திப்பிலி - ஒரு மேசைக்கரண்டி
*தக்காளி - ஒன்று
*கொத்தமல்லி - ஒரு கொத்து
*வேக வைத்த பருப்பு - கால் கப்
*புளி தண்ணீர் - அரை கப்
*உப்பு - ஒன்றரை தேக்கரண்டி
*மிளகு, சீரகப் பொடி - ஒரு தேக்கரண்டி
*மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
*நெய் - 2 தேக்கரண்டி
*எண்ணெய் - ஒரு தேக்கரண்டி

செய்முறை

1.  தக்காளியை கழுவி விட்டு நீளவாக்கில் நான்கு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கொத்தமல்லியை ஆய்ந்து கழுவி எடுத்துக் கொள்ளவும். கண்டந்திப்பிலியை பொடி செய்து எடுத்துக் கொள்ளவும்.

2.  ஒரு எண்ணெய் சட்டியில் கரைத்து வைத்திருக்கும் புளித் தண்ணீரை ஊற்றி, அதில் நறுக்கி வைத்துள்ள தக்காளித் துண்டங்களைப் போட்டு கரண்டியை வைத்து நன்கு மசித்து விடவும்.

3.  அதனுடன் மிளகு, சீரகத் தூள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் ஒன்றரை தேக்கரண்டி கண்டந்திப்பிலிப் பொடி போட்டு 15 நிமிடம் நன்கு கொதிக்க விடவும்

4.  ரசம் ஒரு கொதி வந்ததும் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் பருப்பை அதனுடன் சேர்த்து கலக்கி விட்டு 3 நிமிடம் கொதிக்க விடவும். பருப்பு சேர்ப்பதால் ரசம் நன்கு சுவையாக இருக்கும்

5.  ரசம் 3 நிமிடம் நன்கு கொதித்து நுரைத்து வரும் போது மேலே கொத்தமல்லி தழையை தூவி இறக்கவும்.

6.  பிறகு இரும்பு குழிக்கரண்டி அல்லது சிறிய வாணலியில் 2 தேக்கரண்டி நெய் அல்லது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடிக்க விடவும்

7.  கடுகு வெடித்ததும் மீதம் உள்ள கண்டந்திப்பிலி பொடியை போட்டு தாளித்து அதை ரசத்தில் ஊற்றி அதே கரண்டியை வைத்து ரசத்தை கலக்கி விடவும்.

8. இப்போது சுவையான கண்டந்திப்பிலி ரசம் தயார். உடல் அலுப்பினை போக்குவதற்கு இந்த கண்டந்திப்பிலி ரசம் கைகண்ட மருந்து.  உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தது இந்த கண்டந்திப்பிலி
ரசம்

****************************************

4.மைசூர் ரசம்

ரச வகைகளில் மைசூர் ரசத்திற்கு என்றும் சிறப்பு உண்டு. மற்ற ரசங்களைவிட தயாரிப்பதற்கு சற்று நேரம் பிடிக்கும். தேங்காய் சேர்க்கப்படுவது இந்த ரசத்தின் சிறப்பு அம்சம். அலாதியான சுவையுடையது.

தேவையானவை:

*துவரம் பருப்பு - 4 மேசைக்கரண்டி + ஒரு தேக்கரண்டி
*மிளகாய் வற்றல் - 2
*மல்லி - 4 தேக்கரண்டி
*மிளகு - 2 தேக்கரண்டி
*சீரகம் - ஒரு தேக்கரண்டி
*தக்காளி - 2
*தேங்காய் துருவல் - கால் கப்
*மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
*கறிவேப்பிலை - 2 கொத்து
*புளி - சிறிய எலுமிச்சை அளவு
*கடுகு - ஒரு தேக்கரண்டி
*உப்பு - அரை தேக்கரண்டி

செய்முறை:

1.  தக்காளியை நீளவாக்கில் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.தேங்காயைத் துருவி எடுத்துக் கொள்ளவும். தேவையான இதரப் பொருட்களையும் தயாராய் வைத்துக் கொள்ளவும்

2.  ரசப்பொடி தயாரிக்க, துவரம் பருப்பில் ஒரு தேக்கரண்டி எடுத்துக் கொள்ளவும். அத்துடன் மல்லி, மிளகு, சீரகம் ஆகியவற்றை எடுத்து வைக்கவும்.

3.  முதலில் ஒரு பாத்திரத்தில் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி கொதித்ததும், அதில் பருப்பைப் போட்டு நன்கு வேகவிடவும். பருப்பு வேக சற்று நேரம் எடுக்கும். அந்த நேரத்தில் மற்றொரு அடுப்பில் கீழ்கண்டவற்றை செய்துகொள்ளவும்

4.  வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடி தயாரிக்க வைத்துள்ள துவரம் பருப்பு, மிளகாய் வற்றல், மல்லி, மிளகு, சீரகம் போட்டு சிவக்க வறுக்கவும்

5.  வறுத்து எடுத்தவற்றை ஆறவைத்து, பின்னர் மிக்ஸியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

6.  வாணலியில் எண்ணெயில்லாமல் தேங்காய் துருவலை போட்டு வறுத்து எடுத்து, மிக்ஸியில் போட்டு பொடித்து எடுத்துக் கொள்ளவும்

7.  புளியை ஒன்றரை கப் தண்ணீரில் ஊறவைத்து கரைத்து எடுத்துக் கொள்ளவும். அத்துடன் மஞ்சள்தூள், உப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். ஒரு கொதி வந்தவுடன் இறக்கிவிடவும்.

8.  வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம் போட்டு தாளித்து தக்காளியை போட்டு 30 நொடி வதக்கவும்

9.  தக்காளி சற்று வதங்கிய பின்பு, புளிக்கலவையை ஊற்றி சுமார் 3 நிமிடம் கொதிக்க விடவும்

10. அதில் 2 மேசைக்கரண்டி பொடித்த ரசப் பொடியை போட்டு ஒரு நிமிடம் வேகவிடவும். பிறகு வேக வைத்த பருப்பை மசித்துக் கொட்டி, ஒரு கப் தண்ணீர் சேர்க்கவும். தேங்காய் பொடி 2 மேசைக்கரண்டி போட்டு கலக்கி விடவும்

11. ரசம் கொதித்து நுரைத்தவுடன் இறக்கி விடவும்.மேலே சிறிது தேங்காய்ப் பொடியினை தூவலாம். மைசூர் ரசம் தயார். தேங்காய், பருப்பு அதிகம் சேர்ப்பதுதான் மைசூர் ரசத்தின் சிறப்பு


*******************************************

5.தக்காளி மிளகு ரசம்



தேவையானவை:

*புளி - எலுமிச்சம் பழ அளவு
*தக்காளி - ஒரு கப் மசித்தது
*மிளகுத்தூள் - முக்கால் தேக்கரண்டி
*நெய் - 2 மேசைக்கரண்டி
*கடுகு - ஒரு தேக்கரண்டி
*கறிவேப்பிலை - ஒரு கை பிடி
*பூண்டு - 8 பல்(சிறியது)
*ரசப்பொடி - 2 தேக்கரண்டி
*மிளகாய்த்தூள் - அரை தேக்கரண்டி
*மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி
*தண்ணீர் - 6 கப்
*உப்பு - தேவையான அளவு

செய்முறை:

1.  புளியை போதுமான நீரில் ஊறவைத்து சாறெடுக்கவும். சாறு ஒரு கப் இருக்க வேண்டும்.

2.  இதில் தண்ணீர், தக்காளி, அரை தேக்கரண்டி மிளகுத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்க விடவும்.

3 நிமிடம் கொதித்த பிறகு, இன்னொரு பக்கம் வாணலியில் நெய் ஊற்றி சூடாக்கவும்.

4.  கடுகு சேர்த்து அது வெடித்ததும் பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து மிகக்குறைந்த தீயில் சிறிது வதக்கவும்.

5.  பிறகு தூள்களைச் சேர்த்து மீதமுள்ள கால் தேக்கரண்டி மிளகுத்தூள் சேர்த்து, ஒரு தடவை பிரட்டி ரசத்தில் கொட்டி, போதிய உப்பு சேர்த்து மேலும் 2 நிமிடம் கொதிக்க விடவும்.

6. தக்காளி மிளகு ரசம் தயார்.


********************************************


6.பைனாப்பிள் ரசம்

தேவையானவை:

*துவரம்பருப்பு - 100 கிராம்
*புளி - 10 கிராம்
*அன்னாசி - 4 துண்டுகள்
*உலர்ந்த மிளகாய் - 6
*தனியா - 5 கிராம்
*கொத்தமல்லி - சிறிது
*கறிவேப்பிலை - சிறிது
*கடுகு - அரைத்தேக்கரண்டி
*எண்ணெய் - 10 கிராம்
*உப்பு - தேவையான அளவு

செய்முறை:

1.  வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிளகாய் தனியா இரண்டையும் போட்டு சிவக்க வறுத்து எடுத்து அம்மியில் வைத்துப் பொடித்துக் கொள்ளுங்கள்.

2.  ஒரு பாத்திரத்தில் இருநூறு மில்லி தண்ணீர் விட்டு அடுப்பில் வையுங்கள். தண்ணீர் சூடானதும் பருப்பைப்போடுங்கள்.

3.  பருப்பு நன்றாக வெந்ததும் புளி, உப்புப் பொடி, மிளகாய்ப்பொடியையும் போட்டுக் கலந்து விடுங்கள்.

4.  எல்லாம் நன்றாக கொதித்ததும் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக்கிப் போடுங்கள்.

5.  மேலும் நன்றாகக் கொதித்ததும் மேலும் இருநூறு மில்லி தண்ணீர் விட்டுச் சிறிது நேரம் அடுப்பிலேயே வைத்திருந்து இறக்குங்கள்.

6. கடுகைத் தாளித்துக் கொட்டுங்கள். கொத்தமல்லி, கறிவேப்பிலையையும் போட்டு உபயோகியுங்கள்.

*********************************************

7.பூண்டு ரசம்

தேவையானவை:

*துவரம் பருப்பு - 2 மேசைக்கரண்டி
*புளி - நெல்லிக்காய் அளவு
*பூண்டு - 10 பல்
*தக்காளி - 3
*மிளகாய் - 2
*மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
*மிளகுத் தூள் - ஒன்றரை தேக்கரண்டி
*சீரகத்தூள் - 2 தேக்கரண்டி
*வெந்தயம் - கால் தேக்கரண்டி
*பெருங்காயம் - கால் தேக்கரண்டி
*கறிவேப்பிலை - சிறிது
*உப்பு - தேவையான அளவு

செய்முறை:

1.  புளியை ஒன்றரை டம்ளர் தண்ணீரில் கரைத்து, வடித்து எடுத்துக் கொள்ளவும்.

2.  துவரம் பருப்புடன் மஞ்சள் தூளினைச் சேர்த்து, போதுமான அளவு நீர் விட்டு, நன்கு குழைய வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

3. வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, கடுகு, வெந்தயம் போட்டு தாளிக்கவும். மிளகாயைக் கிள்ளிப் போடவும்.

4.  அத்துடன் பொடியாக நறுக்கின பூண்டினை சேர்த்து வதக்கவும். பூண்டினை நறுக்கியோ அல்லது நசுக்கியோப் போடலாம்.

5. பூண்டு சற்று வதங்கியவுடன் பொடியாய் நறுக்கின தக்காளியைச் சேர்த்து நன்கு வதக்கவும். வதங்கிய பிறகு புளிக்கரைசலை ஊற்றி வேக விடவும்.

6. கரைசலுடன் மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு, வேக வைத்து மசித்த பருப்பு அனைத்தையும் சேர்த்து கொதிக்க விடவும்.

7.  கறிவேப்பிலையைக் கிள்ளிப் போடவும். ரசம் கொதித்து நுரைக்க ஆரம்பித்தவுடன் இறக்கி விடவும்.

*****************************************
8.எலுமிச்சம் பழ ரசம்



எலுமிச்சம் பழ ரசம்
தேவையானவை:

*துவரம் பருப்பு - கால் ஆழாக்கு
*உப்பு - ஒரு தேக்கரண்டி
*ரசப்பொடி - ஒரு தேக்கரண்டி
*தக்காளி - ஒன்று
*சிறிய எலுமிச்சம் பழம் - ஒன்று
*கடுகு - கால் தேக்கரண்டி
*பெருங்காயம் - ஒரு துண்டு
*தனியா - கால் தேக்கரண்டி
*மிளகு - கால் தேக்கரண்டி
*சீரகம் - கால் தேக்கரண்டி

செய்முறை:

1. ஒரு பாத்திரத்தில் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி பருப்பை போட்டு வேக வைத்துக் கொள்ளவும்.

2. தண்ணீரில் தக்காளிப்பழத்தை பிசைந்து அதில் ரசப்பொடி, உப்பு, பெருங்காயம் போட்டு ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.

3.  அதனுடன் வேகவைத்த பருப்பையும் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து இறக்கிவிடவும்.

4.  வாணலியில் எண்ணெய் ஊற்றாமல் தனியா, மிளகு இவற்றை இரண்டு நிமிடங்கள் வறுத்து சீரகத்தோடு வைத்து மிக்ஸியில் அரைத்து எடுத்து ரசத்தில் தூவவும். சீரகத்தை வறுக்க வேண்டாம்.

5.  வாணலியில் எண்ணேய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை தாளித்து ரசத்தில் கொட்டவும்
.
******************************************

9.வேப்பம்பூ ரசம்

தேவையானவை:

*புளி -- எலுமிச்சம் பழம் அளவு [கரைத்த தண்ணீர்]
*மிளகு -- 1/2 டீஸ்பூன்
*சீரகம் -- 1/2 டீஸ்பூன்
*கரிவேப்பிலை -- 2 இனுக்கு
*பெருங்காயம் -- 1/2 டீஸ்பூன்
*எண்ணைய் -- 1 ஸ்பூன்
*கடுகு,உளுத்தம் பருப்பு -- 1 டீஸ்பூன்
*மிளகாய் வத்தல் -- 3 என்னம்
*வெந்தயப் பொடி -- 1/2 டீஸ்பூன்
*உப்பு -- ருசிக்கேற்ப
*தக்காளி -- 2 என்னம்[(நன்றாக பிசைந்து கரைத்தத])]கொத்தமல்லி தழை -- 1 *டேபிள்ஸ்பூன் [பொடியாக நறுக்கியது)
*வேப்பம்பூ -- 1 ஸ்பூன் [வெறும் வாணலியில் 1 நிமிடம் வறுத்தது]

செய்முறை:

1.  வாணலியில் எண்ணைய் ஊற்றி கடுகு,உளுத்தம் பருப்பு, வத்தல்,   கறிவேப்பிலை தாளித்து அதில் வெந்தய்ப் பொடி, பெருங்காயம் போட்டு புளித்தண்ணீரை ஊற்றவும்.

2.  அதனுடன், உப்பு, கரைத்த தக்காளி இவற்றை போட்டு நுரை ததும்பி வறும் போது அடுப்பை நிறுத்தவும்.

3.  நிறுத்தும் முன் கொத்தமல்லி, வேப்பம் பூவை சேர்த்து இறக்கவும்.
சுவையான வேப்பம்பூ ரசம் ரெடி.

4.  சித்திரை மாதம் வருடப்பிறப்பு அன்று முக்கியமாக செய்யும் ரசம் இது

************************************
Related Posts with Thumbnails